மறை முனிவராகிய பிள்ளையார் திருமுன்நின்று மறை நான்கும் தந்தோம் என்றனர் அந்தணர் . அவர்க்குப் புகலிவந்த புண்ணியனார் எண்ணிறந்த புனிதவேதம் ஒப்பில்லாதவாறு ஓதினார் . அவர் பலரும் அப்பெருமானே கண்முன் வரும் தியானப் பொருள் என்று வணங்கினர் . முன்பேவல்ல மறை களைக் கேட்டு ஐயம் தீர்ந்தும் வாழ்வுற்றனர் . மந்திர முதலிய வற்றையும் அருளப்பெற்றனர் . அவர் தெளியும் வண்ணம் மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது முதல்வனார் திருவைந்தெழுத்தே என்று உணர்த்தியருள , ` செந்தழல் ஓம்பிய செம்மைவேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே ` என்பது முதலிய சிறப்பைச் சுட்டிப் பாடியது இத் திருப்பதிகம் .