தொகை ` ......... பேயார்க்கும் அடியேன்` (தி.7 ப.39 பா.4) தொகை, பொ-ரை பேய்வடிவை வேண்டிப் பெற்ற காரைக்கால் அம்மையாருக்கும் அடியேன். வகை நம்பன் திருமலை நான்மிதி யேன்என்று தாளிரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும் செம்பொன் உருவன்என் னம்மை யெனப்பெற் றவள்செழுந்தேன் கொம்பிஉகு காரைக்காலினின் மேய குலதனமே. -தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 28 வகை, பொ-ரை: செழுமையான தேன் பூங்கொம்பில் இருந்து சொட்டும் காரைக்காலின் செல்வமான அம்மையார், `சிவபெருமா னுக்குரிய கயிலை மலையைக் காலால் மிதியேன்` எனத் தம் இருகால்களும் மேலே இருக்குமாறு தலையால் நடந்து செல்ல, உமாதேவியார் புன்முறுவலுடன், `இவர் யார் என்ன,` பொன்போன்ற மேனியையுடைய பெருமானாரால், `இவள் என் அம்மை` எனப் புகழப்பெற்ற பெருமைக்குரியவர் ஆவர்.
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.