தொகை `திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.39 பா.3) தொகை, பொ-ரை: திருக்குறிப்புத்தொண்டர் எனும் பெயருடைய நாயனாரின் அடியார்க்கும் அடியேன். வகை மண்டும் புனற்சடை யான்றமர் தூசெற்றி வாட்டும்வகை விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவனென்னா முண்டம் படர்பாறை முட்டு மெழிலார் திருக்குறிப்புத் தொண்டன் குலங்கச்சி யேகா லியர்தங்கள் தொல்குலமே. -தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 21 வகை, பொ-ரை: பெருகும் கங்கையைத் திருச்சடையின்கண் உடைய பெருமானின் அடியவருடைய உடைகளின் அழுக்கைப் போக்கி, `காய வைத்தற்குத் தடையாக வந்த மழைதரும் மேகம் நீங்கா தொழிந்தால் நான் இறப்பேன்` என வலிய கற்பாறையில் தம் தலையை முட்டிக் கொண்ட அழகிய திருக்குறிப்புத் தொண்டரது குலம், காஞ்சியில் ஏகாலியர்தம் பழைய குலமாம்.
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.