தொகை ``கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்`` (தி.7 ப.39 பா.2) தொகை, பொ-ரை: திருக்கடவூரில் தோன்றிய குங்குலியக்கலய நாயனார்தம் அடியார்க்கும் அடியேன். வகை ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி யெழிற்பனந்தாள் சாய்ந்த சிவனிலைத் தானென்பர் காதலி தாலிகொடுத் தாய்ந்தநற் குங்குலி யங்கொண்ட னற்புகை காலனைமுன் காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரிற் கலயனையே. -தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 12 வகை, பொ-ரை: தம் மனைவியின் தாலியைக் கொடுத்து, நல்ல குங்குலியம் வாங்கிக் காலனைக் காய்ந்த கடவூர்ப் பெருமானுக்கு இட்ட திருக்கடவூர்க் கலயனாரை, சாய்ந்திருந்த திருப்பனந்தாள் சிவலிங்கப் பெருமானைக் கயிற்றைத் தம் கழுத்தில் பூட்டி நேர் நிற்கச் செய்தவர் எனக் கூறுவர்.
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.