பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5


பாடல் எண் : 5

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை
அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா
வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.

குறிப்புரை:

``மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்``(குறள், 134) எனவும், ``அந்தணர் நூல்`` (குறள், 543) எனவும் கூறியவாற்றால், வேதம், `அரசரும், வணிகரும்` என்னும் ஏனையிருவர்க்கும் பொதுமையின் உரியதாயினும், அந்தணர்க்கே சிறந்ததாதல் அறியப்படும். படவே, `வேதம் ஓதுதலைத் தொழிலாக உடையோரே அந்தணர்` என்பதும் போதரும்.
திருவள்ளுவர், ``பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்`` (குறள், 134) என்று ஓதுதலானும், பிறப்புப் பற்றிவரும் பெயரைப் பெறாமல், வேதாகமங்களை ஓதும் தொழிலாகிய சிறப்பை மட்டும் பெற்ற அந்தணன் சிவபிரானைப் பிறர் பொருட்டு அர்ச்சித்தலை இங்கு நாயனார் விலக்காமையானும் பிறப்பைவிடச் சிறப்பே அர்ச்சனைக்கு யாண்டும் வேண்டப்படுதல் விளங்கும்.
பிறப்பாவது சில பல தலைமுறைகளில் உள்ளார், ஒழியாது ஒரு தொழிலே கடைப்பிடித்தமை பற்றி அவர் அந்தணர் முதலிய பெயரைப் பெற்று நிற்க, அவர்தம் வழித் தோன்றலாய்ப் பிறந்தோரும் அப்பிறப்புப் பற்றி அப்பெயரை உடையராதல். சிறப்பாவது அவரவர் அவ்வப்பொழுது தத்தமக்குரியதாகக் கொண்ட தொழில்.
சிறப்பு நிலையில் சிவபெருமானையே முதற் கடவுளாகக் கொண்டு திருநீறும் உருத்திராக்கமும் ஆகிய சிவசின்னங்களை அணிந்து அப்பெருமானை வழிபடுவோர் யாவரும் `சைவர்` எனப் படுவர். அவருள் சிவாகமத்தின்வழித் தீக்கை பெற்றோர் `சிறப்புச் சைவர்` எனவும், அவ்வாறு தீக்கை பெறாதோர், `பொதுச் சைவர்` எனவும் பெயர் பெறுவர். சிறப்புச் சைவருள் உபநயனமும் பெற்றுச் சிவாகமத்தைப் பொதுவாகவும், வேதத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு சிவபெருமானை வேத மந்திரங் களால் வேத விதிப்படி வழிபடுவோர் `மகா சைவர்` என்றும், வேதத்தைப் பொதுவாகவும், சிவாகமத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு, சிவபெருமானைச் சிவாகம மந்திரங் களால், சிவாகம விதிப்படி வழிபடுவோர் `ஆதி சைவர்` எனவும் பெயர்பெறுவர். மகாசைவரும், ஆதிசைவரும் உபநயனமும் பெற்று வேதாகமங்களை ஓதுதலையே தொழிலாக உடைமையால், `அந்தணர்` எனவும் படுவர். ஆகவே, மகா சைவர் `மகாசைவ அந்தணர்` என்றும், ஆதி சைவர் `ஆதிசைவ அந்தணர்` என்றும் சொல் லப்படுவர். இவருள் மகாசைவ அந்தணர் சிவாகமவழி நில்லா மையால், அவருக்கு ஆசாரியாபிடேகமும், அதன்வழி வரும் ஆசிரியத் தன்மையும் இல்லை. அதனால், அவர் சைவரல்லாத பிறர்க்கே ஆசிரியராதற்கு உரியர். ஆதி சைவ அந்தணர் சிவா கமத்தையே சிறப்பாக ஓதி அவற்றின்வழி நிற்றலால், அவருக்கே அபி டேகமும், அதன்வழி ஆசிரியத் தன்மையும் பெறும் உரிமை உண்டு.
உபநயனம் இன்றி வேதத்தில் உரிமை கிட்டாததுபோலச் சிவ தீக்கையின்றிச் சிவாகமத்தில் உரிமை கிட்டாது. அதனால்; சிவ தீக்கையின்றி உபநயனம் மட்டுமே பெற்று வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேதத்தின்வழி வேட்டல், வேட்பித்தல்களைச் செய்து, சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொள்ளுதலில் வழுவாது நிற்போர், `வைதிக சைவர்` எனப் பெயர்பெறுவர். அதனால், இவர் `வைதிக சைவ அந்தணர்` எனப்படுவர். இவர் பொதுச் சைவரே. இவர் சிவாகமங்களை இகழார்.
வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், அவற்றின்வழி வேட்டல், வேட்பித்தல்களைச் செய்யினும், சிவபெருமானை முதல்வனாகக் கொள்ளாமல் பிறவாறு கொள்வோருள் சிவாகமங்களையும், அவற்றின் வழி நிகழும் தீக்கை முதலியவற்றையும் இகழ்வோர் ஒருவாற்றானும் `சைவர்` எனப்படாமையேயன்றி, அவர் அந்தணராதலும் இல்லை என்னும் கருத்தால், `துர்ப்பிராமணர்` எனச் சைவர்களாலும், சைவ நூல்களாலும் இகழப்படுவர். செந்நெறியில் நில்லாது கொடுநெறியில் செல்லுதலால் இவரை, `கொடுநெறி அந்தணர்` எனலாம்.
பிறப்பு மாத்திரத்தால் ஆதி சைவ அந்தணரும், மகாசைவ அந்தணருமாய்ப் பிறந்து, அவற்றிற்குரிய நெறியில் நில்லாதோர் `அப்பிராமணர்` எனப்படுவர். இவரை `ஒழுக்கமில் அந்தணர்` எனலாம். இன்னும் புறத்தே சிவவேடம் புனையினும், அகத்தே சிவபிரானை முதற் கடவுளாகக் கொண்டு சிறப்பு வகையில் அன்பு செய்யாத அந்தணரும் அப்பிராமணரேயாவர். இவர் யாவரும் `பார்ப்பார்` எனவே படுகின்றனர். அதனால், ஆதிசைவப் பார்ப்பார், மகாசைவப் பார்ப்பார், வைதிகசைவப் பார்ப்பார், கொடுநெறிப் பார்ப்பார், ஒழுக்கமில் பார்ப்பார் எனப் பெயரால், பார்ப்பார் ஐவகையராகின்றனர். `இவருள், ஆதிசைவப் பார்ப்பாரே தலை யாயவர்` என்பது மேற்கூறியவாற்றானே இனிது விளங்கிக் கிடத்தலால், அவரையே, `உண்மைப் பார்ப்பார்` என வைத்து, ஏனை நால்வரையும் நாயனார் பேர்கொண்ட பார்ப்பாராக ஓதினார் என்பது நன்கு பெறப்பட்டது.
``அர்ச்சிக்கில்`` என்பதில் அர்ச்சித்தல், `பிறர்பொருட்டு` என்பது, பின்னர்க் கூறிய தீய விளைவுகளை நாட்டிற்கு ஓதிய குறிப் பால் நன்கறியப்படும். பிறர்பொருட்டு வழிபடுதல், `பரார்த்த பூை\\\\u2970?` எனப்படும். ஆன்மார்த்த பூசையை அவரவரும் தமக்கென எழுந் தருளுவித்துக்கொள்ளும் விருப்பக் குறி (இட்டலிங்கம்) ஆகிய பெயர் வுடைக் குறியில் (சல லிங்கத்தில்) செய்தல், எளிதின் இயல வேண்டிய தேயன்றித் திருக்கோயிலில் உள்ள பெயராக் குறியில் (அசல லிங்கத்தில்) செய்தல் விலக்கப்பட்டதன்று. திருக்கோயிலில் சென்று ஆன்மார்த்த பூசையைச் செய்தல் அரிதாதலின், அது பண்டே அருகி விட்டது. ஆன்மார்த்த பூசையைச் சைவர்கள் திருக்கோயிலில் சென்று செய்து வந்தமைக்குத் தி.12 திருத்தொண்டர் புராணத்தில் உள்ள திரு நீலநக்க நாயனார், அரிவாட்ட நாயனார் இவர்களது வரலாறுகளே போதிய சான்றாகும். இவ்விருவரும் செய்த பூசை ஆன்மார்த்த பூசையே என்பது அவ்வரலாறுகளிலேயே தெற்றென விளங்கிக் கிடப்பது. திருக் கோயில்களில் மூல இலிங்கமேயன்றி, அதனைச் சூழ வேறும் சில இலிங்கங்கள் காணப்படுதல், அங்குச் சென்று ஆன்மார்த்த பூசை செய்வோர் அவைகளையே மூல இலிங்கமாகக் கருதிக் கொண்டு அவற்றில் அவ் வழிபாட்டினைச் செய்தற்பொருட்டேயாம். இனி, மூல இலிங்கங்கள்தாமும் ஓரொரு காலத்தில் ஓரோவொருவர் ஓரோஒரு பயன்கருதி நிறுவித் தம் பொருட்டாக வழிபட்டு அப்பயன்களைப் பெற்றுப் பின் நிலையாக வைத்துச் சென்றனவே எனத் தல புராணங்கள் பலவும் இனிதெடுத்து விளம்புதலும் கருதத்தக்கது.
`ஆன்மார்த்தம், பரார்த்தம்` என்னும் பகுப்புப் பூசையின் பயனைப் பெறுவாரை நோக்கியதன்றிப் பூசிக்கப்படும் மூர்த்தியை நோக்கியதன்றாதல் வெளிப்படை. அஃதாவது, பூசை செய்பவர், `அப் பூசையின் பயன் தமக்கு ஆகுக` என நினைத்துச் செய்தல் ஆன்மார்த்த பூசையும், `பிறர்க்கு ஆகுக` என நினைத்துச் செய்தல் பரார்த்த பூசையும் ஆகும். அதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்தியையே தம் பொருட்டாகப் பூசிக்கின் அஃது ஆன்மார்த்த பூசையாதலும், தாம் எழுந்தருளுவித்துக் கொண்ட மூர்த்தியையை பிறர் பொருட்டாகப் பூசிக்கின் பரார்த்த பூசையாதலும் தாமே விளங்கும். எனினும், பெரும்பான்மை பற்றித் திருக்கோயிற் பூசை பாரார்த்தமாகவும், தம் பொருட்டாய மூர்த்தி பூசை ஆன்மார்த் தமாகவும் சொல்லப் படுகின்றன. `இவற்றுள் திருக்கோயிலில் உள்ள மூர்த்தியைப் பிறர் பொருட்டாகப் பூசிக்கும் உரிமை சிறப்புச் சைவ அந்தணருக்கே சிறப் பாக உரியது` எனவும், `அவருள்ளும் ஆதிசைவ அந்தணர்க்கே சிறப் பாக உரியது` எனவும் வைத்து, ஏனைய அந் தணர்க்கு அஃது இல்லை என்பதையே நாயனார் இத்திரு மந்திரத்தால் அருளிச் செய்தமை அறிக. `மக்களுட் சிறந்தார் அந்தணர்` என்பதே பற்றி, சிறப்புச் சைவ ரல்லாத ஏனை அந்தணரையும் திருக் கோயிலிற் பரார்த்த பூசைக்கு உரியராக்குதலையே நாயனார் இத்திரு மந்திரத்தால் விலக்கினாரன்றிச் சிறப்புச் சைவருள் ஒருவரையும் விலக்கினாரல்லர் என்பது நுண்ணுணர்வான் நோக்கி உணர்ந்து கொள்க.
மேற்கூறிய ஆதிசைவர், மகாசைவரேயன்றிப் பிற சைவரும் உளர். அவர் `அனு சைவர், அவாந்தர சைவர், பிரவர சைவர், அந்திய சைவர்` என இவர். சிவபெருமானைப் பொதுநீக்கி வழிபடுவாருள் நாடாளும் தொழில் உடையவரும், வாணிகத் தொழில் உடையவரும் அனு சைவர். உழவுத் தொழில் செய்வோர் அவாந்தர சைவர். பிறதொழில் செய்வோர் பிரவர சைவர். இவரெல்லாரும் சுதந்திரர். யாதொரு தொழிலாயினும் அதனைப் பிறருக்கு அடியவராய் இருந்து செய்பவர் அந்திய சைவர். எனினும், அமைச்சர், படைத்தலைவர் போன்றோர் அரசரோடொப்ப மதிக்கப்படுதலால் அனுசைவரே யாவர். இங்குக் காட்டிய அறுவகைச் சைவரொடு சதாசிவக் கடவுளையும், `அனாதி சைவர்` என வைத்துச் சைவர் எழுவராகச் சொல்லப்படுதலை, `சைவ சமயநெறி, சிவதருமோத்தரம்` முதலிய நூல்களிற் கண்டுகொள்க.
ஆதிசைவரும், மகாசைவரும் சிறப்புச் சைவரேயன்றி, அவருள் பொதுச் சைவர் இல்லை. ஏனைய அனுசைவர் முதலிய நால்வரும் தீக்கை பெறாது இருப்பின் பொதுச் சைவரும், தீக்கை பெற்று இருப்பின் சிறப்புச் சைவரும் ஆவர். எவ்வாற்றானும் சிவனை வழிபடாதவரும், வழிபடினும் பொது நீக்கிச் சிறப்பாக வழிபடாதவரும் `சைவர்` எனப்படார்.
ஊன் உணவும், கட்குடியும் இல்லாதவரே சிவதீக்கை பெறுதற்கு உரியர். அவற்றை உடையோர் சிவதீக்கையைப் பெறின் அவரும், அவருக்கு அதனைப் பெறுவித்தோரும் நிரையம் புகுவர். அதனால், தீக்கைக்கு உரியரல்லாதார் பொதுச் சைவராயே இருந்து சிவநூலை ஓதல், கேட்டல், சிவாலயத்திற்கும், சிவனடியார்க்கும் ஏற்புடைத் தொண்டு செய்தல் என்னும் இவற்றையே மேற்கொண்டு வாழக்கடவர்.
இனிச் சிவதீக்கையும் அவரவர் ஆற்றலுக்கேற்ப, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நால்வகைத்தாகும். அவற்றால் அவற்றைப் பெற்றோரும் `சமயிகள், புத்திரர், சாதகர், ஆசிரியர்` என நால்வகைப்படுவர்.
சமய தீக்கையாவது, சிவ மூல மந்திரமாகிய திருவைந் தெழுத்தை முறையறிந்து கணித்தற்கும், `சிவாகமம், திருமுறை, சாத்திரம்` என்னும் சைவப் பெருநூல்களை ஓதுதற்கும், சரியை முறை யால் சிவபெருமானைச் சிறக்க வழிபடுதற்கும் உரிமைதந்து, சிறப்புச் சைவராகச் செய்வது. இச்சமய தீக்கை பெற்றோரே `சமயிகள்` எனப்படுவர்.
விசேட தீக்கையாவது, மேற்கூறியவற்றோடு கிரியை முறையாலும், யோக முறையாலும் சிவபெருமானை வழிபட்டு அவனுக்கு அணுக்கராயும், அவனோடு ஒப்பவும் இருக்கும் உரிமையைத் தருவது. இதனைப் பெற்றோரே `புத்திரர்` எனப்படுவர்.
நிருவாண தீக்கையாவது, சரியை கிரியா யோகங்களின் பயனாக மலம் பரிபாகமாயிட, இருவினையொப்பும், நாலாம் சத்தி நிபாதமும் வரப்பெற்று, அதனால் சிவனையே அடையும் அவா உண்டாகப் பெற்றவர்க்கு அவனை அடையுமாற்றை அறிந்து அடைதற் பொருட்டு முப்பொருளின் இயல்பை இனிதுணர்த்துவது. இங்ஙனம் உணர்த்தப் பெற்றவர் சிவபெருமானை அடையும் நெறிக்கண்ணே நிற்றலின், `சாதகர்` எனப்படுவர்.
சமயம் முதலிய தீக்கை மூன்றும் `சாதிகாரை, நிரதிகாரை` எனத் தனித்தனி இருவகைப்படும். அவற்றுள் சாதிகாரையாவது, நித்திய வழிபாட்டோடு, `நைமித்திகம், காமியம்` என்னும் இரு வழி பாடுகளையும் இயற்றுதற்கு உரிமை தருவது. நிரதிகாரையாவது, நித்திய வழிபாடு ஒழிந்த ஏனை இருவழிபாட்டிற்கும் உரிமை தாராதது.
நித்திய வழிபாடாவது அன்றாடம் காலை, மாலை என்னும் இருபொழுதினும் நீராலும், நீற்றாலும், மந்திரங்களாலும் தம்மைத் தூய்மை செய்துகொண்டு, தருப்பணம் செய்து, சிவபெருமானது திருவைந்தெழுத்தைக் கணித்தலும், வேத சிவாகம திருமுறை சிவ புராணங்களை ஓதுதலும், கேட்டலும், சிவாலய தரிசனம் செய்தலும், அழல் ஓம்பலும், சிவனடியார்களை வரவேற்று உணவு முதலியன அளித்தலுமாம்.
நைமித்திக வழிபாடாவது யாதானும் ஒரு சிறப்புப் பற்றிச் சில நாட்களில் செய்வது. அது, அட்டமி, பூரணை, பிரதோடம், சதுர்த்தசி, மாதப் பிறப்பு, அயனப் பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் முதலிய காலங்களில் மேற்கூறியவற்றைச் சிறப்பாகச் செய்யும் வழிபாடாகும். வேதமாதிய நூல்களைத் தக்கார்க்கு ஓதுவித்தலும் நைமித்திகமேயாம்.
காமியமாவது தான் செய்த தீவினை நீங்குதல் கருதிச் செய்யப்படும் கழுவாயும் (பிராயச்சித்தமும்) இம்மை மறுமைப் பயன்களில் ஒன்றையாயினும், பலவற்றையாயினும் வேண்டி அவ்வவற்றிற்கு ஏற்ற முறையில் செய்யும் வழிபாடுமாம்.
இவற்றுள் சாதிகார தீக்கை அதனைப் பெற்றபின்னர் நைமித் திகத்தையும், காமியத்தையும் தவறாது செய்யும் ஆற்றல் உடையார்க்கே செய்யப்படும். அவ் வாற்றல் இல்லாதார்க்கெல்லாம் நிரதிகார தீக்கையே செய்யப்படும். நிரதிகார தீக்கை பெற்றோர் ஓரோவொருகால் தம்பொருட்டாக நைமித்திகமும் காமியமும் செய்ய விரும்புவராயின், சாதிகார சாதகர் ஆசாரியர் என்போரால் செய்வித்துக் கொள்ளுதல் வேண்டும்.
சாதிகார சமய விசேட தீக்கைகளுக்குமேல், சாதிகார நிருவாண தீக்கை பெற்றோர், நைமித்திக காமியங்களைப் பிறர் பொருட்டாகச் செய்யும் உரிமையையே அபிடேகத்தாற் பெறுவர். அவ்வுரிமையும் `அங்க உரிமை, அங்கி உரிமை` என இருவகைத்து. அங்க உரிமையாவது, அங்கிக்கு இன்றியமையாத கழிப்பு (சாந்தி) மண்கோள் (மிருத்துசங்கிரகணம்) முளை தெளித்தல் (அங்குரார்ப் பணம்) குட நீர்க்கோள் (கலசாகருடணம்) முதலியவற்றைச் செய்யும் உரிமை. அங்கி உரிமையாவது தீக்கைசெய்தல், திருக்கோயில்களில் சிறப்புக் காலங்களில் விழா எடுத்தல், குடவழிபாடு செய்தல் (கலச பூசை செய்தல்) வேள்வி (யாகம்) செய்தல் முதலியவற்றில் பெறும் உரிமையாம். ஆன்மார்த்த மூர்த்தியைப் பிறருக்கு எழுந்தருளு வித்தலும் `விசேட தீக்கை` எனத் தீக்கை செய்தலுள் அடங்குவதாம்.
இவற்றுள், அங்க உரிமைமட்டும் பெற்றோர் `சதகாசாரியர்` எனவும், அங்கி உரிமையைப் பெற்றோர் `ஆசாரியர்` எனவும் சொல்லப்படுவர். சாதகாசாரியர், மணவினை, மாய்ந்தோர்வினை முதலியவற்றில் வேட்டல் முதலியவற்றைச் செய்வித்தற்கும், சிவன் கோயிலில் நித்திய பூசைக்கும் பிறகோயில்களில் நித்திய, நைமித்திக, காமியத்திற்கும் உரியராவர். அங்கி உரிமையைப் பெற்ற ஆசாரியர் எல்லாவற்றிலும் உரிமையுடையராதலின், அவரது உரிமை `பேரதிகாரம்` எனப்படும்.
ஆசிரியராதற்குச் சத்திநிபாதம், ஒழுக்கம் என்னும் இவை மட்டுமே போதா; சிறந்த பல நூற்கல்வியும், நல்லுடலும், செய்முறைப் பயிற்சியும் வேண்டும். அவற்றுடன் இரண்டு தலைமுறைக்குக் குறையாத முன்னோர், ஊனுங் கள்ளும் உண்டறி யாதவராயும், அவற்றை உண்பாரொடு உறவுகொள்ளாதவராயும் இருத்தல் வேண்டும். அதனால், அபிடேகத்திற்கு உரியவர் ஒருசிலரேயாவர். அவரும் முன்னர்ச் சாதகாசாரியராய் இருந்து பின்னர் ஆசிரியராதலே பெரும் பான்மை. பெரும்பான்மை ஆதிசைவ அந்தணருள்ளும் சிறு பான்மை ஏனைச் சைவருள்ளும் ஆசாரியராய் உள்ளவரே சிவன் கோயிலில் பிறர்பொருட்டுச் செய்யும் பூசையைச் செய்தற்கு உரியர் எனின், வைதிகப்பார்ப்பார் முதலிய பிற பார்ப்பனர் எங்ஙனம் திருக்கோயிற் பூசைக்கு உரியராவார். அதுபற்றியே நாயனார், `பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சிக்கில்...... பஞ்சமும் ஆமே` என்று விலக்கினார். அபிடேகம் பெற்றாருள் சாதகாசாரியர் சிறுபான்மை பிற பிழைப்புத் தொழில் செய்யினும், ஆசாரியர் ஒருபோதும் அவற்றைச் செய்யார்.
அபிடேகம் பெறாது நிருவாண தீக்கை பெற்றோரை, `சாதகர்` என்னாது `விசேடபுத்திரர்` என்றும், அபிடேகத்தால் அங்கவுரிமை பெற்றோரையே `சாதகர்` என்றும் கூறுப. ஆதிசைவருள் ஆசாரிய ராயினாரை, `சிவாசாரியர்` என்றும், பிற சைவருள் ஆசாரிய ராயினாரை `சைவாசாரியர்` என்றும் குறியிட்டு வழங்குவர்.
மாணாக்கர், (பிரமச்சாரிகள்) இல்வாழ்வார், (கிருகத்தர்) இல்லந்துறந்தார், (வானப்பிரத்தர்) முற்றத்துறந்தார் (சந்நியாசிகள்) என்னும் நால்வகை நிலையினருள் மாணாக்கர், `இற்புகா மாணாக்கர்` (நைட்டிகப் பிரமச்சாரிகள்) என்றும், `இற்புகு மாணாக்கர்` (பௌதிகப் பிரமச்சாரிகள்) என்றும் இருவகைப்படுவர். மணம்புரிந்து கொள்ளாது வாழ்நாளளவும் மாணாக்கர் நிலையில் நின்றே வீடு பெறுவோர் இற் புகா மாணாக்கராவர். அவ்வாறின்றி வாய்க்கும் காலத்தில் மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்த விரும்புவோர் இற்புகு மாணாக் கராவர். `இல்வாழ்வார் ஆசாரியராதல் ஆதிசைவருள்ளேயன்றிப் பிற சைவருள் இல்லை` என்றும், `பிறசைவர் ஆசிரியராதல் வேண்டின், அவர் இற்புகா மாணாக்கராயிருத்தல் வேண்டும்` என்றும் சில ஆகமங் களில் விதி காணப்படுகின்றது. எனினும் அதனை, `இவ் யுகத்திற்கு ஒவ்வா விதி` என விடுத்து, எல்லாச் சைவருள்ளும் அபிடேகத்திற்கு மேற்குறித்த தகுதியெல்லாம் உடையவர் உரியவர் என்னும் விதியே கொள்ளப்படுகின்றது. அதனால், சிவன்கோயிலில் பிறர்பொருட்டுச் செய்யப்படும் நித்திய நைமித்திக காமிய வழிபாடு கட்குப் பிற சைவா சாரியர்களும் மேற்குறித்த சாதக, ஆசாரிய முறையின்படி உரியவரே யாவர். ஆயினும், வழக்கில் ஆதிசைவ சாதக, ஆசாரியர்களே சிவன் கோயிலில் பரார்த்த பூசைக்கு உரியவராய் விளங்குகின்றனர். அங்குப் பூக்கொய்து கொடுத்தல், மாலை கட்டித் தருதல், திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றுதல் முதலிய புறத்தொழிலில் மட்டுமன்றித் திருவமுது அமைத்தல், திரு மஞ்சன நீர் நிரப்புதல், தூபம், தீபம் முதலிய பொருள்களை எடுத்துக் கொடுத்தல் முதலிய அகத்தொழிலுக்கும் எல்லாச் சைவரும் உரிமை பெறத்தக்கவரே. எனினும், வழக்கத்தில் ஆதிசைவ அந்தணர்க்கேற்ப, மகாசைவ அந்தணரேயன்றி வைதிக அந்தணரும் அத்தொழிலில் உரிமையுடை யாராய் உள்ளனர். `சிவ தீக்கை பெற்றவருள்ளும் சிலர் தாம் திருக் கோயிலில் அகத் தொழின்மைக்கு உரியர்` என்பது சொல்லப் படுமாயின், தீக்கையே இல்லாதவரை அதற்கு உரியராக்குதல் எத்துணை முறைகேடான செயல் என்பதை எடுத்துக்கூற வேண்டுவது இல்லை.
``செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலை
தெரிந்த அவரோ(டு)
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர்
கின்ற அரன்ஊர்............வீழிநகரே`` -தி.3 ப.80 பா.4
தடங்கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதோர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.-தி.1 ப.32 பா.2
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.1
பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.5
என்றாற்போலும் அருட்டிருமொழிகளால் `வடமொழி, தென்மொழி` என்னும் மொழி வேறுபாடும், `ஆதிசைவர், பிற சைவர்` என்னும் இன வேறுபாடும் இன்றி இருமொழிகளாலும் அனைத்துச் சைவரும் திருக் கோயிலில் சிவபிரானைப் பல்வகையாலும் நாள்தோறும் முறை வகுத்துக்கொண்டு வழிபாடு செய்தல் வழக்கத்திலிருந்தமை நன் கறியப்படுதலால், அதற்கு மாறாக, ``ஆதிசைவர் ஒருவர்தாம் வட மொழியானே திருக்கோயிலில் வழிபாடு செய்தற்கு உரியர்`` எனக் கட்டளை வகுத்தல், விருத்திப் பொருட்டாகச் செய்யப்பட்டது என்றே கொள்ளப்படும். இன்னோரன்ன கட்டளைகள் கங்கைகொண்ட சோழன் (முதல் இராசேந்திர சோழன்) காலத்திற்குப் பிறகே தமிழ்நாட்டில் தோன்றினவாதல் வேண்டும். ஏனெனில், ``அச்சோழ மன்னன் கங்கைக் கரையிலிருந்து ஆதிசைவர் பலரைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் ஆங்காங்குக் குடியேற்றினான்`` என்பது சித்தாந்த சாராவளி உரையிலேயே சொல்லப்பட்டுள்ளது.
இனி, ``முப்போதும் திருமேனி தீண்டுவார்`` (தி.7 ப.39 பா.10) என்ற சுந்தரர் வாக்கும், பிறப்பு வேறுபாடு மொழிவேறுபாடுகளைக் குறிக்கும் கடப்பாடுடையதன்று; என்னை? அஃது உடையதாயின், ``தில்லை வாழ்ந்தணர்`` எனவும், ``திருநீலகண்டத்துக் குயவனார்`` எனவும், ``திருநீலகண்டத்துப் பாணனார்`` எனவும் பிறப்பினை எடுத் தோதினாற்போல எடுத்தோதப்பட்டிருக்கும் என்க.
இனி, முப்போதுந் திருமேனி தீண்டுவாரைப் பற்றிக் கூறு மிடத்தில் நம்பியாண்டார் நம்பிகள்தாமும், ``நீடாகமத்தின் அறிவால் வணங்கி அர்ச்சிப்பவர்`` (தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 74) என்று, `சிவபெருமானிடத்து அன்பு உண்டாதற்குச் சிவாகம ஞானம் இன்றியமையாதது` என்னும் அளவே குறித்ததன்றி இன வரையறையும் மொழி வரையறையும் கூறினாரில்லை. எனவே, சேக்கிழார் நாயனார், ``முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராம் முனிவர்`` எனவும், `வருங் காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள்சிவ வேதியர்க்கே உரியன; அப் பெருந்தகையார் குலப் பெருமை யாம்புகழும் பெற்றியதோ`` (தி.12 முப்போதும் திருமேனிதீண்டுவார் புராணம்) எனவும், `முப்போதும் திருமேனி தீண்டுவார் ஆதிசைவரே`` என்றும், ``அவர்தாம் வழி வழிவரும் பிறப்புரிமையர்`` என்றும் வரையறுத்துக் கூறியது அஃது அங்ஙனம் அவர்க்குச் சிறப்புரிமையாதல் குறித்தேயாம். அங்ஙனம் கொள்ளாக்கால், மேற்காட்டிய ஞானசம்பந்தரது திருவாக்கோடும், அனுபவத்தோடும் முரணும் என்க. எனவே, இது, முந்நூலணிதலும், வேதம் ஓதுதலும அந்தணர்க்கேயன்றி அரசர் வணிகர்கட்கும் உரித்தாயினும் வேதத்தை ``அந்தணர் நூல்`` (குறள், 543) என்றும், ``அதற்குரியார் அநத்ணரே`` (திருவள்ளுவமாலை, 23) என்றும், பிறவாறும் கூறுதல் போல்வதும், அந்தனரையே ``முந்நூல் மார்பர்`` எனவும் ``இருபிறப்பாளர்`` எனவும் ``மறையவர், வேதியர்`` எனவும் குறிப்பிடல் போல்வதும் ஆம் என்பது ஓர்ந்துணர்ந்து கொள்ளப்படும்.
``குலவிச்சை கல்லாமல் பாகம் படும்`` (பழமொழி நானூறு, 6) ஆகலின், யாதொரு செயலும் அது வழிவழியாக இடையறாது வருவதொரு குடியிற் பிறந்தார்க்குச் சிறப்புரிமை உடைத்தாதல் இயல்பே. அஃதே பற்றிப் பிற குடியிற் பிறந்தாரும் தமது சிறப்பினால் பெறும் உரிமை விளக்கப்பட்டதாம். அது கருதியே பிறப்புரிமை கருதிய தமிழ் நூல்களில் யாண்டும் சிறப்புரிமை விலக்கப்பட்டிலது என்பது அறியற்பாலது. பிறப்பினாலன்றிச் சிறப்பினால் உரிமை பெற்றவராக வடநூல் முனிவருள்ளும் பலர் கேட்கப்படுகின்றனர். தமிழாசிரியருள்ளும் திருநாவுக்கரசரை அப்பூதியடிகளும் மெய்கண்ட தேவரைச் சகலாகம பண்டிதரும் தம்மின் மிக்கராய்த் தமக்கு நெறியருளவல்ல ஆசிரியராகக் கொண்டமை வெளிப்படை. ``இவ்வாறாகவும் பிறப்புரிமை ஒன்றே கொள்ளப்படுவது சிறப்புரிமை கொள்ளப்படாது`` என முரணிக் கூறுதல் விருத்தி வேண்டுவாரது கூற்றேயாய் முடியும் என்க.
இதனால் திருக்கோயிலில் நிகழும் பெருவழிபாடு பற்றிய குற்றம் விலக்கப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తన వంశ శీలాన్ని కాపాడక నామ మాత్రపు బ్రాహ్మణుడైన వాడు శివుని పూజిస్తే, యుద్ధ వీరుడైన రాజు రోగ గ్రస్తుడవుతాడు. గొప్ప యశస్సుతో కీర్తింప బడుతున్న రాజ్యం క్షామంలో విలవిలల్లాడుతుంది. ఇదీ నంది చెప్పిన విషయమే.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
जो शिव की पूजा करता है यदि वह पुजारी नाममात्र का है
तो उस राज्य में मृत्युपूर्ण युद्ध की विभीषिका होती है
और महामारी फैलती है तथा राज्य में अकाल पड़ता है
ऐसा महान नन्दी ने सत्य की घोषणा की |

- रूपान्तरकार - शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
If he is but a priest in name
Who,
Lord`s worship performs,
Deathly wars rage in fury
Fell diseases spread;
Famine stalks the land—
Thus did the great Nandi in truth declare.
Translation: B. Natarajan (2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑀭𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀧𑀸𑀭𑁆𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑁆𑀢𑀷𑁆𑀷𑁃
𑀅𑀭𑁆𑀘𑁆𑀘𑀺𑀢𑁆𑀢𑀸𑀶𑁆
𑀧𑁄𑀭𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀯𑁂𑀦𑁆𑀢𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑁄𑁆𑀮𑁆𑀮𑀸
𑀯𑀺𑀬𑀸𑀢𑀺𑀬𑀸𑀫𑁆
𑀧𑀸𑀭𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀦𑀸𑀝𑁆𑀝𑀼𑀓𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑀜𑁆𑀘𑀫𑀼 𑀫𑀸𑀫𑁆𑀏𑁆𑀷𑁆𑀶𑁂
𑀘𑀻𑀭𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀦𑀦𑁆𑀢𑀺 𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀼𑀭𑁃𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পের্গোণ্ড পার্প্পান়্‌ পিরান়্‌দন়্‌ন়ৈ
অর্চ্চিত্তার়্‌
পোর্গোণ্ড ৱেন্দর্ক্কুপ্ পোল্লা
ৱিযাদিযাম্
পার্গোণ্ড নাট্টুক্কুপ্ পঞ্জমু মাম্এণ্ড্রে
সীর্গোণ্ড নন্দি তেরিন্দুরৈত্ তান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை
அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா
வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே 


Open the Thamizhi Section in a New Tab
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை
அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா
வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே 

Open the Reformed Script Section in a New Tab
पेर्गॊण्ड पार्प्पाऩ् पिराऩ्दऩ्ऩै
अर्च्चित्ताऱ्
पोर्गॊण्ड वेन्दर्क्कुप् पॊल्ला
वियादियाम्
पार्गॊण्ड नाट्टुक्कुप् पञ्जमु माम्ऎण्ड्रे
सीर्गॊण्ड नन्दि तॆरिन्दुरैत् ताऩे 
Open the Devanagari Section in a New Tab
ಪೇರ್ಗೊಂಡ ಪಾರ್ಪ್ಪಾನ್ ಪಿರಾನ್ದನ್ನೈ
ಅರ್ಚ್ಚಿತ್ತಾಱ್
ಪೋರ್ಗೊಂಡ ವೇಂದರ್ಕ್ಕುಪ್ ಪೊಲ್ಲಾ
ವಿಯಾದಿಯಾಂ
ಪಾರ್ಗೊಂಡ ನಾಟ್ಟುಕ್ಕುಪ್ ಪಂಜಮು ಮಾಮ್ಎಂಡ್ರೇ
ಸೀರ್ಗೊಂಡ ನಂದಿ ತೆರಿಂದುರೈತ್ ತಾನೇ 
Open the Kannada Section in a New Tab
పేర్గొండ పార్ప్పాన్ పిరాన్దన్నై
అర్చ్చిత్తాఱ్
పోర్గొండ వేందర్క్కుప్ పొల్లా
వియాదియాం
పార్గొండ నాట్టుక్కుప్ పంజము మామ్ఎండ్రే
సీర్గొండ నంది తెరిందురైత్ తానే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පේර්හොණ්ඩ පාර්ප්පාන් පිරාන්දන්නෛ
අර්ච්චිත්තාර්
පෝර්හොණ්ඩ වේන්දර්ක්කුප් පොල්ලා
වියාදියාම්
පාර්හොණ්ඩ නාට්ටුක්කුප් පඥ්ජමු මාම්එන්‍රේ
සීර්හොණ්ඩ නන්දි තෙරින්දුරෛත් තානේ 


Open the Sinhala Section in a New Tab
പേര്‍കൊണ്ട പാര്‍പ്പാന്‍ പിരാന്‍തന്‍നൈ
അര്‍ച്ചിത്താറ്
പോര്‍കൊണ്ട വേന്തര്‍ക്കുപ് പൊല്ലാ
വിയാതിയാം
പാര്‍കൊണ്ട നാട്ടുക്കുപ് പഞ്ചമു മാമ്എന്‍റേ
ചീര്‍കൊണ്ട നന്തി തെരിന്തുരൈത് താനേ 
Open the Malayalam Section in a New Tab
เปรโกะณดะ ปารปปาณ ปิราณถะณณาย
อรจจิถถาร
โปรโกะณดะ เวนถะรกกุป โปะลลา
วิยาถิยาม
ปารโกะณดะ นาดดุกกุป ปะญจะมุ มามเอะณเร
จีรโกะณดะ นะนถิ เถะรินถุรายถ ถาเณ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပရ္ေကာ့န္တ ပာရ္ပ္ပာန္ ပိရာန္ထန္နဲ
အရ္စ္စိထ္ထာရ္
ေပာရ္ေကာ့န္တ ေဝန္ထရ္က္ကုပ္ ေပာ့လ္လာ
ဝိယာထိယာမ္
ပာရ္ေကာ့န္တ နာတ္တုက္ကုပ္ ပည္စမု မာမ္ေအ့န္ေရ
စီရ္ေကာ့န္တ နန္ထိ ေထ့ရိန္ထုရဲထ္ ထာေန 


Open the Burmese Section in a New Tab
ペーリ・コニ・タ パーリ・ピ・パーニ・ ピラーニ・タニ・ニイ
アリ・シ・チタ・ターリ・
ポーリ・コニ・タ ヴェーニ・タリ・ク・クピ・ ポリ・ラー
ヴィヤーティヤーミ・
パーリ・コニ・タ ナータ・トゥク・クピ・ パニ・サム マーミ・エニ・レー
チーリ・コニ・タ ナニ・ティ テリニ・トゥリイタ・ ターネー 
Open the Japanese Section in a New Tab
bergonda barbban birandannai
arddiddar
borgonda fendarggub bolla
fiyadiyaM
bargonda nadduggub bandamu mamendre
sirgonda nandi derinduraid dane 
Open the Pinyin Section in a New Tab
بيَۤرْغُونْدَ بارْبّانْ بِرانْدَنَّْيْ
اَرْتشِّتّارْ
بُوۤرْغُونْدَ وٕۤنْدَرْكُّبْ بُولّا
وِیادِیان
بارْغُونْدَ ناتُّكُّبْ بَنعْجَمُ مامْيَنْدْريَۤ
سِيرْغُونْدَ نَنْدِ تيَرِنْدُرَيْتْ تانيَۤ 


Open the Arabic Section in a New Tab
pe:rɣo̞˞ɳɖə pɑ:rppɑ:n̺ pɪɾɑ:n̪d̪ʌn̺n̺ʌɪ̯
ˀʌrʧʧɪt̪t̪ɑ:r
po:rɣo̞˞ɳɖə ʋe:n̪d̪ʌrkkɨp po̞llɑ:
ʋɪɪ̯ɑ:ðɪɪ̯ɑ:m
pɑ:rɣo̞˞ɳɖə n̺ɑ˞:ʈʈɨkkɨp pʌɲʤʌmʉ̩ mɑ:mɛ̝n̺d̺ʳe:
si:rɣo̞˞ɳɖə n̺ʌn̪d̪ɪ· t̪ɛ̝ɾɪn̪d̪ɨɾʌɪ̯t̪ t̪ɑ:n̺e 
Open the IPA Section in a New Tab
pērkoṇṭa pārppāṉ pirāṉtaṉṉai
arccittāṟ
pōrkoṇṭa vēntarkkup pollā
viyātiyām
pārkoṇṭa nāṭṭukkup pañcamu māmeṉṟē
cīrkoṇṭa nanti terinturait tāṉē 
Open the Diacritic Section in a New Tab
пэaрконтa паарппаан пыраантaннaы
арчсыттаат
поорконтa вэaнтaрккюп поллаа
выяaтыяaм
паарконтa нааттюккюп пaгнсaмю маамэнрэa
сирконтa нaнты тэрынтюрaыт таанэa 
Open the Russian Section in a New Tab
peh'rko'nda pah'rppahn pi'rahnthannä
a'rchziththahr
poh'rko'nda weh:ntha'rkkup pollah
wijahthijahm
pah'rko'nda :nahddukkup pangzamu mahmenreh
sih'rko'nda :na:nthi the'ri:nthu'räth thahneh 
Open the German Section in a New Tab
pèèrkonhda paarppaan piraanthannâi
arçhçiththaarh
poorkonhda vèèntharkkòp pollaa
viyaathiyaam
paarkonhda naatdòkkòp pagnçamò maamènrhèè
çiirkonhda nanthi thèrinthòrâith thaanèè 
peercoinhta paarppaan piraanthannai
arcceiiththaarh
poorcoinhta veeinthariccup pollaa
viiyaathiiyaam
paarcoinhta naaittuiccup paignceamu maamenrhee
ceiircoinhta nainthi theriinthuraiith thaanee 
paerko'nda paarppaan piraanthannai
archchiththaa'r
poarko'nda vae:ntharkkup pollaa
viyaathiyaam
paarko'nda :naaddukkup panjsamu maamen'rae
seerko'nda :na:nthi theri:nthuraith thaanae 
Open the English Section in a New Tab
পেৰ্কোণ্ত পাৰ্প্পান্ পিৰান্তন্নৈ
অৰ্চ্চিত্তাৰ্
পোৰ্কোণ্ত ৱেণ্তৰ্ক্কুপ্ পোল্লা
ৱিয়াতিয়াম্
পাৰ্কোণ্ত ণাইটটুক্কুপ্ পঞ্চমু মাম্এন্ৰে
চীৰ্কোণ্ত ণণ্তি তেৰিণ্তুৰৈত্ তানে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.