திருஞானசம்பந்தப் பிள்ளையார் , திருநாகேச்சரத்து இனிதமரும் செங்கனகத் தனிக்குன்றை வணங்கி , நாகநாதப் பெருமானின் பிணிதீர்க்கும் பெருங்கருணையைப் போற்றித் திருவிடைமருதூருக்கு வழிக்கொள்கின்றவர் ` ஓடேகலன் ` என்னும் இத்திருப்பதிகத்தையருளிச் செய்தார்கள் . போகும் போது அளவிலாப் பெருமகிழ்ச்சி திருவுள்ளத்தெழ ` என்னை யாளுடையபிரான் உறைகின்ற இடைமருது ஈதோ ` என்று அமைத்து இன்னிசைப்பதிகம் அருளிக்கொண்டே இடை மருதிற்கு எழுந்தருளினார்கள் .