திருச்சிராப்பள்ளி


பண் :

பாடல் எண் : 1

மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. 

பொழிப்புரை :

சிராப்பள்ளிச் செல்வர், தேன் ஒழுகும் நீண்ட குழலை உடைய உமாதேவியோடு பெரிய விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவர்; பாசக்கட்டு நீத்தவர்க்கு இன்னருளே புரியும் மேலோர்.

குறிப்புரை :

மட்டு - தேன்பொருந்திய. வார் - நீண்ட. மட்டுவார் குழலாள், அம்பிகையின் திருப்பெயர். மால்விடை - திருமாலாகிய இடபம். இட்டமா - விருப்பமாக. உகந்து - மகிழ்ந்து. கட்டு - பந்தபாசமாகிய பிணிப்புக்கள். இன்னருளே - இனிய திருவருளையே; நீத்தவர்க்கே அருள்செயும் எனலுமாம். சிட்டர் - சிஷ்டாசாரம் உடையவர்.

பண் :

பாடல் எண் : 2

அரிய யன்தலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்தொழு தேத்து மரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்தொழ அங்கிருப் பார்களே. 

பொழிப்புரை :

திருமால், அயன் ஆகியோர் தலைகளை வெட்டி வட்டுப்போல் ஆடியவரும், அவ்விருவரும் தொழுது வணங்கும் அரும்பொருளும், பெரியவரும் ஆகிய அப்பெருமானுக்குரிய சிராப் பள்ளியைச் சிந்தையுள் பேணும் அன்பர், திருமாலும் பிரமனும் தொழச் சிவலோகத்திருப்பார்கள்.

குறிப்புரை :

அரி அயன் தலைவெட்டி - திருமால் பிரமன் இவர்களின் தலைகளை வெட்டி. (அவற்றை) வட்டாடினார் - வட்டமாகச் சுழற்றிச் செண்டாடினார். வட்டம் - வட்டு என நின்றது. அம்மானைக் காய்களாகக்கொண்டு அம்மானை ஆடினார். சர்வசங்கார காலத்துத் திருமால் பிரமர் முதலானாரையும் அழிப்பர் என்பது பொருள். அல்லது திருமாலை, நரசிங்க அவதாரமெடுத்த காலையில் அழித்ததையும், பிரமன் தலையைக் கொய்ததையும் குறித்ததாகவும் கொள்ளலாம். அரிய அயன் என்று கொண்டு அரியவனாகிய பிரமன் என்று மட்டும் கொண்டு பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றைக் கொய்த இறைவனது திருவிளையாடலைக் குறித்தது எனலுமாம்.அரியயன் தொழு தேத்தும் - திருமாலும் பிரமனும் தொழுது வணங்கும். அரும்பொருள் - தேடுதற்கரிய பொருளாயிருப்பவன். பேணுவார் - விரும்பி வழி படுவார். அங்கு - தெய்வ உலகின்கண். இருப்பார்கள் - தலைமை தோன்ற அமர்ந்திருப்பார்கள்.

பண் :

பாடல் எண் : 3

அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 

பொழிப்புரை :

நெஞ்சே! ஐம்புலக் கள்வரால் இராப் பகலாக அரிக்கப்பெற்று ஆட்டப்பெற்று வருந்தியிராமல் இருக்க, ஓர் உபாயம் சொல்லக் கேட்பாயாக! திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை பொருந்தி இருக்காமல் உன்னைவிட்டு நடக்கும்; நடக்கும்!

குறிப்புரை :

அரிச்சிராப்பகல். அரித்து இராப்பகல் எனப் பிரிக்க. இரவும் பகலும் வயிற்றுக்காக இங்குமங்கும் சென்று உணவு தேடி. ஐவரால் - ஐம்பொறிகளால். ஆட்டுண்டு - ஆட்டுவிக்கப்பட்டு. சுரிச்சிராது - வருந்தியிராமல்; சுரித்து இராது. இவ்வுலக வாழ்விலேயே சுழன்று நில்லாமல் இருப்பதற்கு. நரிச்சு - தங்கியிராமல். நடக்கும் நடக்கும் - செல்லும் செல்லும் என்க. உறுதியை வெளிப்படுத்த இருகாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 4

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 5

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 6

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 10

தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே. 

பொழிப்புரை :

தாயுமாகி எனக்குத் தலைகண்ணுமாகிப் பேயனேனாகிய என்னையும் ஆட்கொண்டருளிய பெருந்தகையும் தேயங்கட்கெல்லாம் நாதனும் ஆகிய பெருமானைச் சிராப்பள்ளி மேவிய நாயனார் என்று கூறி வாழ்த்த நம்வினை நாசம் அடையும்.

குறிப்புரை :

தாயுமாய் - எனக்குத் தாயாகியும்; தலத்து இறைவர் திருப்பெயர். தலைகண்ணுமாய் - மேலான பற்றுக்கோடாயும். பேயனேனையும் - பேயினது தன்மை பொருந்திய என்னையும்; உம் இழிபு குறித்தது. தேயநாதன் - பலதேசங்களுக்கும் தலைவன். நாயனார் - அடியார் தலைவர். நாசம் - கெடும்.
சிற்பி