திருவாரூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

ஆரூரில் உகந்தருளியிருக்கும் பெருமான், பாடுகின்ற இளைய பூதங்களை உடையவனும், சிவந்த வாயினை உடையவனும், பவளம் போன்ற உடல் நிறத்தினாலும், தன் உடம்பின் பாதியாக இணைந்த பார்வதியைக் கூடியதால் ஏற்பட்ட விசேட அழகினனும், வானில் உலவக்கூடிய வெண்பிறையைச் சூடியவனும், ஒளிவிளங்கும், சூலப்படையை உடையவனும் ஆடுகின்ற இளைய பாம்பினைக் கட்டிக் கொண்டவனும் ஆவான்.

குறிப்புரை :

பவளச்செவ்வாய் - பவளம்போலும் செய்ய வாய் (அழகுடையவன்). கூடு - கூடிய. `இடையீர் போகா இளமுலையாள்` (தி.4 ப.54 பா.2), `கூடிய` என்பது இடப்பால் வைத்திருத்தலைக் குறித்து நின்ற முதல்வினை. கூடிய கோலம் - காரணப் பெயரெச்சம்; உண்ட இளைப்பு என்பது போல. ஓடு பிறை - வானில் ஓடும் பிறை. இளம் பிறை, பாலேந்து வெண்பிறை, தவளேந்து. ஆடு பாம்பு; இளம் பாம்பு. `முற்றலாமை இளநாகம்` (தி.1 ப.1 பா.2.). அசைத்தான் - கட்டியவன். அமர்ந்த - விரும்பி எழுந்தருளிய. அம்மான் - அருமைக் கடவுள். அருமகன், பெருமகன். அருமான், பெருமான். அர்மான், பெர்மான். அம்மான் - பெம்மான். மரூஉ. மகன் - தேவன். மகள் - தேவி. திருமகள், நாமகள், மலைமகள், கலைமகள். அம்மானே பூதத்தினான், வண்ணத்தான், கோலத்தினான், பிறையான், சூலத்தினான், அடைந்தான் என்க. ஆறு உம்மைகளையும் இயைத்து அம்மானே என முடித்தலும் ஏற்றதே. பிறை - பிறத்தலுடையது. பாம்பு:- பாண்பு என்பதன் மரூஉ. கால்பு, வீண்பு, நோன்பு, பொதுள்பு முதலியவற்றின் மரூஉப்போல்வது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

நரியைக் குதிரையாக மாற்றும் அகடித கடநா சாமர்த்தியம் உடையவனும், நரகர்களையும் தேவர்களாக்க வல்லவனும், அவரவர் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானுக்கு உரிய முரசம் தன் மீது அமர்த்தி முழங்கப்பட அதனைத் தாங்கிய ஆண் யானை முன்னே ஓட, தன் முன்னர் நின்று வணங்கி அன்பர்கள் துதிக்கப் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆரூரை உகந்தருளியிருக்கும் எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை :

(நரியைக் குதிரை) செய்வான் முதலிய ஐந்து வினைப் பெயரும் இயைந்து அம்மானே எனப் பயனிலைக்கொண்டு முடிந்தன. நரியைக் குதிரையாக்கிய வரலாறு மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்தது. மூவர்க்கும் முந்தியவர் மாணிக்கவாசகர் என்பதற்கு இஃது ஒரு சான்று. `நரியைக் குதிரைப் பரியாக்கி` (தி.8 திருவா. 647). தேவர், மானுடர், நரகர் என்னும் முத்திறத்தவருள் இடையராய மானுடர் தத்தம் வினைக்குத்தகத் தலையராய தேவராயும் கடையராய நரகராயும் பிறப்பர். தேவர் நரகராதல் அற்புதம் அன்று. நரகர் நேரே தேவராதலே அற்புதமாகும். விரதம் - நியமம்; தவம். இறைவன் கொண்டாட வல்லன். அல்லனேல் நியமம் தவம் முதலிய விரதங்களை எவரும் மேற்கொள்ளார். அவற்றைக் கொண்டாடுவது எவர்க்கும் எளிது. அவற்றின் அளவிற்குத் தக்க பயனைக் கொடுத்தல் அரிதினும் அரிது. அவ்வருஞ் செயல் செய்ய வல்லான் எங்கும் நிறைந்த திருவாரூரன். மனு வேந்தனது சத்திய விரதமும், அதைக் கொண்டாடி அருளிய வன்மையும், அவை முதலிய பலவும் இங்கு நினைக்கத்தக்கன. `விச்சின்றி நாறு செய்வான்` விச்சதின்றியே விளைவு செய்குவாய்` (தி.8 திருவா.) (விச்சு, விச்சது - வித்து). `பிரபஞ்சம் அநாதியாகலின்` அம் முதற் கோடி நம்மனோரான் அறிய வாராமையினானும் ஒடுங்கியின் மீள உளதாமாறே ஈண்டு அவாய் நிலையான் உணர்த்த நின்றது ஆகலானும் அதுவே (புனருற்பவமே) கூறினார்` (சிவ. போ. சூ.2.) இதையே `விச்சதின்றியே விளைவு செய்குவாய்` (தி.8 திருவா. திருச் சதகம். 96) என்றது. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"வித்தின்றி விளைவாய்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" எனப் பொருள்பட்டுத் திருமேனி கொள்ளும் முறைமை உணர்த்தியதூஉம் ஆம். `விச்சின்றி நாறு செய்வானும்` என்பதற்கும் இவ்வாறு உரைத்துக் கொள்க\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\". (சிவ. போ. மாபாடியம்). முரசு - தியாக முரசு. ஆனை - தியாகராசர்க்குரியதும் முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை. அரவு - பாம்பு. சாத்தி - சார்த்தி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நீறுமெய் பூசவல் லானு நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுகந் தேறவல் லானும் எரிபுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானு நான்மறைக் கண்டத்தி னானும்
ஆறு சடைக்கரந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

திருமேனியில் திருநீற்றைப் பூசுதலில் மேம்பட்டவனும், தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் உள்ளத்து இருப்பவனும், காளையை விரும்பி இவர வல்லவனும், தீயின் நிறத்தை ஒத்த திருமேனி நிறத்தினனும், நறுமணம் கமழும் கரந்தைப் பூச்சூடியவனும், வேதம் ஓதும் குரல்வளையை உடையவனும் கங்கையைச் சடையில் மறைத்தவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.

குறிப்புரை :

திருநீறு ஆக்களால் உயிர்கட்குக் கிடைக்கின்றது. முழுமுதல்வன் பூசும் திருநீறு, சருவசங்கார காலத்துச் சருவலோக சுடலைப்பொடி, அதனை ஆற்றி அணிந்துகொள்ளும்வன்மை அவனுக்கே உளது. அதனால், `நீறுமெய் பூச வல்லான்` என்றருளினார். மெய் - திருமேனி சத்தியமும் ஆம். நினைப்பவர் நெஞ்சத்துளான் - `நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்` (தி.5 ப.2 பா.1). `காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அறநெறி யார்க்கே` (தி.4 ப.17 பா.8) எனப் பின்வருதலை நோக்குக. ஏறு உகந்து ஏறவல்லான் - விடை ஏறுதல் பற்றிய சாத்திரக் கருத்தும் அத்திறத்து உள்ள விடையின் மேல் வரும் வன்மையும் சிவபத்தர்க்கே விளங்குவன. எரி புரை மேனி - தீவண்ண மேனி. நாறு கரந்தை - மணம் வீசும் சிவகரந்தை. `கரந்தையான்` அதனை அணிதலுடைமையால் `கரந்தையினான்` என்றது. நால்மறைக் கண்டன்:- `சாமகண்டா` என்பது முதலிய தனிப் பெயர்களையும் அவற்றின் பொருளையும் உணர்க. ஆறு - சடையில் கரந்த கங்கை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானும்
செம்புநல் கொண்டெயின் மூன்றுந் தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும் வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர வீருரி யானு மாரூ ரமர்ந்தவம் மானே.

பொழிப்புரை :

குயிலை ஊதுகொம்பாக உடைய சிறந்த இளவேனிற்காலத்திற்கு உரிய மன்மதன் தன் ஆற்றல் அழியுமாறு அவனைக் கண் சிவந்து அழித்தவனும், நல்ல செம்பு முதலியவற்றால் செய்யப்பட்ட திரிபுரம் தீயால் அழியுமாறு புன்முறுவல் செய்தவனும், நறுமணம் கமழும் பெரிய கொன்றை மலரை அணிந்தவனும், வாள் போன்ற கண்களை உடைய பார்வதி மனத்தில் சோர்வு கொள்ளுமாறு யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை ஆடையாக மேலே போர்த்தவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான். இது மொழி மாற்றுப் பொருள்கோள்.

குறிப்புரை :

வேனிலவன் - மன்மதன். அவனுக்கு வேனிற்காலம் உகந்தது. குழைய - எரிந்து சாம்ப. முறுவல் - புன்னகை. திரிபுரத்தை விழித்தெரித்ததும் மன்மதனை நகைத்தெரித்ததும் கற்ப விகற்பம் பற்றியவை ஆதலின், விரோதம் இன்று. வம்பு - மணம். அம்பரம் - ஆடை. திகம்பரம். ஈர் உரி - ஈரிய (ஈரம் உடைய) தோல். (உரியம் பரம் - தோலாடை).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஊழி யளக்கவல் லானு முகப்பவ ருச்சியுள் ளானும்
தாழிளஞ் செஞ்சடை யானுந் தண்ணமர் திண்கொடி யானும்
தோழியர் தூதிடை யாடத் தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

ஊழிக்காலங்களைத் தான் அளக்கவல்ல, காலங்களுக்கு அப்பாற்பட்டவனும், தன்னை விரும்பும் அடியவர்கள் தலையின்மேல் உள்ளவனும், தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினனும், குளிர்ச்சிபொருந்திய வலிய கொடியை உடையவனும், தோழிமார்கள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சக்கரத்தையும் சங்கையும் தாங்குகிற திருமாலின் கையிற் காட்சியளிப்பவனும் திருவாரூர் அமர்ந்த அம்மானாவான். தண்ணம்ஆர் என்று பாடம் ஓதி மழுப்படையின் வடிவம் எழுதிய என்றும் பொருள் கொள்க. தண்ணம் - மழு. (கழ. த. அக. பக். 512)

குறிப்புரை :

ஊழிமுதற் சிந்தாத நன்மணியாகிய அரனைப் பல்லூழி காலம் பயின்று அர்ச்சிப்பது அடியார்க்கே உண்டாயின், அருச்சனையை ஏற்று அருளும் ஆண்டவனுக்கு ஊழியெல்லை ஏது? எல்லா வூழியும் அவனால் அளக்கப்படுவன. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (தி.8 திருவாசகம் 8.8.) \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே`. `ஊழி வண்ணமும் ஆவர்`. `ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர்` என்று பிறாண்டும் இவ்வாசிரியர் அருளியதுணர்க. `உகப்பவர் உச்சி உள்ளான்`:- `கருதிக் கசிவார் உச்சியன்` (தி.7 ப.98 பா.3) `உரைப்பார் உரையுகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய்` (தி.7 ப.92 பா.4) தாழ்சடை, இளஞ்சடை, செஞ்சடை என, மூவடையும் சடை யென்னும் ஒரு பெயரைத் தழுவின. தண் - குளிர்ச்சி. கொடி - விடைக் கொடி. `செங்கண் விடைக்கொடி (தி.4 ப.4 பா.5). தோழியர் தூது சொல்வது குறித்தது. ஆழி வளைக்கையினான்:- தியாகேசரை விடாத கையைக் குறித்ததும் ஆம். திருமாலாகி, அம்மாலுக்குரிய புவனத்தில் உலகுயிர்களைக் காப்பவன். இது சக்கரமும், சங்குந் தாங்கும் திருமாலின் கையிடத்தவன் தியாகேசன் என்ற விளக்கந் தரும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

ஊர்திரை வேலையுள் ளானு முலகிறந் தொண்பொரு ளானும்
சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும்
ஆர்திரை நாளுகந் தானு மாரூ ரமர்ந்தஅம் மானே. 

பொழிப்புரை :

பரவும் அலைகளை உடைய பாற்கடலில் உள்ளவனும், உலகுக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பொருளாவானும், சிறந்த பாடல்களில் உள்ளவனும், சிவந்த கண்களை உடைய திருமாலாகிய காளையின் வடிவம் எழுதிய கொடியை உடையவனும், நீண்ட பொலிவு பொருந்திய கூந்தலை உடைய பார்வதியைத் தழுவி ஒருபாகமாக வைத்தவனும், திரு ஆதிரை நாளை விரும்பி ஏற்றவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்.

குறிப்புரை :

ஊர்திரை வேலையுள்ளான் - பரவும் அலைகளையுடைய (பாற்)கடலில் துயிலும் திருமாலாயிருப்பவன். `ஆழிவளைக் கையினான்` (தி.4 ப.4 பா.5). உலகு இறந்த ஒண்பொருளான்:- `அப்பாலைக் கப்பாலைக் கப்பாலானை` (தி.6 ப.26 பா.4.) `அப்பால்` மூன்றும் முறையே சுத்தாவத்தைச் சுழுத்தி முதலிய மூன்றும் ஆம். `எல்லா வுலகிற்கும் அப்புறத்தார்` (திருக்களிறு.1.). அண்டத்துக்கு அப்புறத்தார் (தி.6 ப.26 பா.5.) `அப்பாலைக்கு அப்பால்` (தி.8 திருவாசகம். 8-11) `உலகினுக்கு அப்புறம்` (தி.8 திருவாசகம். 10-14). `ஒண்பொருள் - சிவமே பெறுந்திரு`. `ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்` (குறள்-760) என்புழிப்படும் பொருள் அழிவது, `சென்றடையாததிரு` ஆதலின், இதுவே ஒண்பொருளாகும்.
இறந்த:- பெயரெச்சத்து அகரம் தொகுத்தல். இறந்து என்று வினையெச்சமாகவே கொள்ளின், பொருளான் என்னும் குறிப்பு வினைப்பெயரின் விரியும் வினைமுதனிலையொடு இயைக்க. சீர்தரு பாடல் உள்ளான் - சாமகானம் பாடுதலுள்ளவன். வேதப்பாடல்களில் உள்ளவன். `தொடுக்குங் கடவுட் பழம் பாடல்` `காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம் பாடல்` விடைக்குச் செங்கண் விசேட லட்சணம். ஆர்திரை என்பதன் மரூஉவே ஆதிரை. `ஆர்திரையான் ஆர்திரையான் என்றென் றயர்வுறுமீ யூர்திரைநீர் வேலி யுலகு` என்னும் (முத்தொள்ளாயிரச் செய்யுட்களின் கடவுள் வாழ்த்து) இடத்தில் எதுகையமைப்பினை நோக்கியுணர்க. இங்கு `ஆர்திரை` என்றே ஆசிரியர் அருளினார் என்பதற்குச் சான்று வேறு வேண்டா. `முத்து விதானம்` எனத் தொடங்கும் திருப்பதிகம் (தி.4 ப.21 பா.1-10) திருவாதிரைச் சிறப்புணர்த்தற்கே எழுந்தது. `திருவாதிரைத் திருப்பதிகம்` என்றே அதனைக் குறிப்ப.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் தோன்றி யருளவல் லானும்
கழற்கங்கை பன்மலர் கொண்டு காதல் கனற்றநின் றானும்
குழற்கங்கை யாளையுள் வைத்துக் கோலச் சடைக்கரந் தானும்
அழற்கங்கை யேந்தவல் லானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

தொழுவதற்கு உள்ளங்கைகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கும் அடியவர்கள் மனக்கண்முன் தோன்றி அருள் செய்ய வல்லவனும், தன் திருவடிகளில் சேர்ப்பதற்கு உள்ளங்கைகளிற் பல பூக்களையும் கொண்ட அடியார்களுக்கு அன்புமிகுமாறு நிற்பவனும், கூந்தலை உடைய கங்கையை அழகிய சடையில் வைத்து மறைத்தவனும், தீயினைத் தாங்கத் தன் உள்ளங்கையை நீட்டி ஏற்று ஏந்தும் ஆற்றல் உடையவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.

குறிப்புரை :

தொழற்கு - தொழுதலுக்கு. அங்கை - அழகியகை, உள்ளங்கை. துன்னி - பொருந்தி. துன்னி என்னும் செய்தெனெச்சம் சினைவினை. அது `நின்றார்` என்னும் முதல்வினையுடன் முடிந்தது. இலக்கியத்தில் இவ்வாறு பயின்றுவருதலையுணர்ந்தும், இலக்கண விதியின்றென்று கொண்டு, செயவெனெச்சமாகத்திரித்துப் பொருளுரைத்தல் உரையாசிரியர் வழக்கு. அருகிய வழக்கன்மையின் அது பொருந்தாது. சில இடத்தில் வேண்டு மேற்கொள்ளலாம். `தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான்` (தி.12 பெரியபுராணம் 1981) என்பதனோடிதனிடை வேறுபாடு தேற்றேகாரம் ஒன்றே. அங்கையில் பல மலர் (சிவபிரான்) கழற்குக்கொண்டு காதல் கனன்று சுடர்விட்டு விளங்க நின்றான். குழல் - கூந்தல், கங்கையான். உள் - உள்ளம். சடையுளுமாம். கரந்தான் - மறைத்தான். பிறவினை. `அங்கை அழற்கு ஏந்தவல்லான்`. அழற்கு - அழலை; தீயை. உருபு மயக்கம். அழலும் கம்மும் எனலும் ஆம். கம் - பிரம கபாலம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

ஆயிரம் தாமரை மலர்கள் போன்ற ஆயிரம் திருவடிகளை உடையவனும், ஆயிரம் மேருமலைகளைப் போன்ற ஆயிரம் தோள்களை உடையவனும், ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஆயிரம் நீண்ட முடிகளை உடையவனும், ஆயிரம் பெயர்களை விரும்பிக் கொள்பவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.

குறிப்புரை :

தாமரை போலும் சேவடி. பொன்வரை போலும் தோள். ஞாயிறு போலும் நீள்முடி. ஆயிரம்:- பன்மை குறித்து நின்றது. `பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்` என்றாங்கு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வீடரங் காநிறுப் பானும் விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும் ஓங்கியொ ரூழியுள் ளானும்
காடரங் காமகிழ்ந் தானுங் காரிகை யார்கண் மனத்துள்
ஆடரங் கத்திடை யானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

முத்தி உலகை ஞான ஆனந்தக் கூத்து நிகழ்த்தும் இடமாக நிலை நிறுத்தியவனும், தன் முடியைக் காண்பதற்குப் பிரமன் வானத்தில் தொடர்ந்து உயரத் தேடி ஓடுகின்ற வெளியிடத்தைத் தான் ஆடும் அரங்கமாகக் கொள்பவனும், பல ஊழிக் காலங்களிலும் உயர்ந்து உள்ளவனும், சுடுகாட்டை ஆடும் அரங்கமாக மகிழ்ந்து ஏற்பவனும் தன்னை வழிபடும் மகளிருடைய கண்களையும் மனத்தையும் தான் ஆடும் அரங்கமாகக் கொண்டு அவற்றிடை உறைபவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.

குறிப்புரை :

வீடு அரங்கு ஆ நிறுப்பான் - முத்தியை ஞானானந்தக் கூத்து ஆடும் அரங்கமாக நிறுத்துபவன். விசும்பு - விண். வானம். வேதி - வேதம் ஓதும் நான்முகன். தொடர - அன்னப் புள்ளுருவாக முடி தேட. ஓடு அரங்கு - தேடி ஓடுகின்ற வெளியிடம். வேதி விசிம்பினைத் தொடராமையைக் கையிலுள்ள பிரமகபாலம் வெளிப்படுத்துகின்றது என்றலுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள்வா னுள்ளத் தானும்
கையஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சி னப்புறத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

படமெடுக்கும் அழகிய ஒளியை வெளிப்படுத்துகின்ற பாம்பில் பள்ளி கொள்ளும் திருமாலுடைய உள்ளத்தில் இருப்பவனும், இருபது கைகளை உடைய இராவணனைத் தன் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனும், பொய் பேசுதற்கு அஞ்சி உண்மையையே பேசிப் புகழை விரும்பும் அடியவர்களுக்கு அருள் செய்வானும், இருபத்தைந்து தத்துவங்களைக் கடந்து நிற்பவனும் ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.

குறிப்புரை :

பை - நச்சுப்பை. அம் சுடர் - அழகிய மாணிக்கச் சுடர். நாகப்பள்ளி கொள்வான் - பாம்பணையான் (திருமால்). திருமால் தன் உள்ளத்தில் வீதி விடங்கப் பெருமானை உடைமை திருவாரூர்ப் புராணத்தாலும் தியாகேசத் திருமேனியாலும் அறியப்படும். `பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தான்` என்ற உண்மையை உணர்த்தும் ஓவியம் அது. கை அஞ்சு நான்கு - இருபது கை. உடையான் - இராவணன். `கால் விரலால்` என்றது, இருபதுகையனை ஒரு கால்விரல் முனையால் அடர்த்தல் சிவபிரானுக்கு மிக எளிதென்ற தாம். திருவருள் பெற விரும்பி முயல்வார்க்குப் பொய்யை அஞ்சுதலும், வாய்மைகளே பேசுதலும், இறைவன் பொருள் சேர் புகழே புரிதலும் இன்றியமையாதன. ஐயஞ்சின் அப்புறத்தானானாலும், பொய்யஞ்சிவாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கருள் செய்ய இப்புறத்தானாகி அருள் செய்வான் என்றபடி. ஐயைஞ்சு - (5x5=25) நிலமுதல் 25 தத்துவம். சிவதருமோத்தரம். 10. சிவஞானயோகவியல் 32. உரை. பார்க்க. சங்கற்பநிராகரணம் சங்கிராந்தவாதி. (அடி. 40) `அரணம் ஐயைந்தின் அப்புறத்து` திருக்களிற்றுப்படியார் 1. பார்க்க.
சிற்பி