சேய்ஞலூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சகிதேவியார் உடனுறை சத்தகிரீசுவரர்


மரம்: ஆத்தி மரம்
குளம்: மண்ணியாறு

பதிகம்: நூலடைந்த -1 -48 திருஞானசம்பந்தர்

முகவரி: திருப்பனந்தாள் அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612504
தொபே. 0435 2457459

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். கும்பகோணம் - திருப்பனந்தாள் பேருந்து வழியில் உள்ளது.

முருகன் திருக்கைலையில் இருந்து, சூரசம்காரத்தின் பொருட்டு, வீரமகேந்திரத்திற்கு எழுந்தருளியபொழுது, வழிநடையில் இங்குவந்து சிவபூசை செய்தருளினார் என்பது கந்தபுராண வரலாறு. சண்டேசுவர நாயனார் திரு அவதாரஞ் செய்தருளியதலம். இவ் வரலாறு இவ்வூர்ப் பதிகத்து ஏழாம் பாடலில் விளங்கக்காணலாம். சண்டேஸ்வரர் அவதாரஸ்தலம் என்று சம்பந்த சுவாமிகள் சிவிகை யினின்றும் இறங்கி நடந்து சென்று வழிபட்டார்கள் என்று பெரிய புராணங்கூறும். முருகன் வழிபட்ட தலமாதலின் சேய் நல்லூர் என்பது சேய்ஞலூர் என்றாயிற்றுப்போலும். இத்தலம் இக்காலத்துச் சேங்கனூர் என வழங்குகிறது. சுவாமிபெயர் சத்தகிரீசுவரர். அம்மைபெயர் சகிதேவியார். தீர்த்தம் மண்ணியாறு.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி