ஒன்பதாம் திருமுறை
29 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7 பண் : பஞ்சமம்

தனதன்நற் றோழா சங்கரா சூல
    பாணியே தாணுவே சிவனே
கனகநற் றூணே கற்பகக் கொழுந்தே
    கண்கள்மூன் றுடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக
    அம்பலத் தமரர்சே கரனே
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
    தொண்டனேன் நுகருமா நுகரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

குபேரனுடைய நண்பனே! எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனே! சூலத்தைக் கையில் ஏந்தியவனே! என்றும் நிலை பெற்றிருப்பவனே! மங்களமான வடிவினனே! பொன் மயமான பெரிய தூண் போல்பவனே! கற்பக மரத்தின் கொழுந்தினை ஒப்பவனே! மூன்று கண்களை உடைய கரும்பு போன்ற இனியனே! பாவம் இல்லாதவனே! முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையே! பொன்னம்பலத்தில் தேவர்கள் தலைவனாக உள்ளவனே! உன் திருவடிகளை என் உள்ளத்தில் இனிமையாக அடியேன் அநுபவிக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

தனதன் - குபேரன். தாணு - நிலைபெற்றிருப்பவன். கனகநற் றூணே என்றதை, மாசொன்றில்லாப் - பொற்றூண்காண் (தி. 6. ப.8. பா.1) என்றதனோடு வைத்துக் காண்க. கொழுந்து - தளிர்; இஃது அழகு மிக்கதாய் இன்பம் தருவது. கண்கள் - கணுக்களைக் குறித்த சிலேடை. அனகன் - பாவம் இல்லாதவன்; என்றது. `வினைத் தொடக்கு இல்லாதவன்` என்றதாம். குமரன் - முருகன். `குமர விநாயகர்` என்னும் உயர்திணை உம்மைத் தொகை ஒரு சொல் லாய்ப்பின், சனகன் என்பதனோடு, நான்காவதன் தொகைபடத் தொக்கது. சனகன் - தந்தை. அமரர் சேகரன் - தேவர் கூட்டத்திற்கு மகுடம்போல விளங்குபவன். இஃது ஒருசொல் தன்மைப்பட்டு, `அம்பலத்து` என்றதனோடு தொகைச் சொல்லாயிற்று. `அமரசேகரன்` எனவும் பாடம் ஓதுப. `நின்` என்பது, திருமுறைகளில், `நுன்` என வருதலை அறிந்துகொள்க. நுகருமா நுகரே என்றது நுன என்றதற்குரிய மோனை நோக்கியாகலின், `உன கழலிணை` என்பது பாடம் ஆகாமை அறிக. இணை என்றமையின். இனிதா என ஒருமையாகக் கூறினார். நுகர்தல் - அநுபவித்தல்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Goodly friend of Kubera! Auspicius Doer!
Tridentist! Maker Firm! Civa,
Core-gold-column good! Tendril of kalpaka
Sugarcane triple-eyed! Sire of Muruka
And Vinayaka! Protector of Devas in spatium!
May you will it so that I your servient one
Savour your feet-pair, with relish in my heart
With the sense to sense them in cordial sweet.
Translation: S. A. Sankaranarayanan (2007)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
thanathan:na'r 'roazhaa sangkaraa soola
paa'niyae thaa'nuvae sivanae
kanaka:na'r 'roo'nae ka'rpakak kozhu:nthae
ka'nka'lmoon 'rudaiyathoar karumpae
anakanae kumara vi:naayaka sanaka
ampalath thamararsae karanae
:nunakazha li'naiyen :nenjsinu'l inithaath
tho'ndanaen :nukarumaa :nukarae.
சிற்பி