ஒன்பதாம் திருமுறை
29 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 5 பண் : பஞ்சமம்

கோலமே மேலை வானவர் கோவே
    குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
    காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
    கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
    தொண்டனேன் நணுகுமா நணுகே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பிய வடிவம் கொள்பவனே! மேம்பட்ட தேவர்களின் தலைவனே! பண்புகளும் வடிவங்களும் இல்லாமையையே பண்பாக உடையவனே! காலத்தை உன் வயத்தில் அடக்கி இருப்பவனே! கங்கையின் தலைவனே! எங்களுக்குத் தலைவனாக அமைந்தவனாய்க் காலனுக்குக் காலனாக இருப்பவனே! மன்மதனை அழித்தவனே! விடத்தையே அமுதம் போல உண்டு, கூத்தாடும் இடத்தைப் பொன்மயமான கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே! உலகமே வடிவானவனே! தன்னுணர்வு இல்லாத அடியேன் பெரிய தவத்தை உடைய உனக்குத் தொண்டனாகி உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

கோலம் - உருவம். குணம் குறி இறந்ததோர் என்பது, தாப்பிசையாய் இதனோடும் இயையும். குணம் குறிகள், ஆண்மை பெண்மைகளை அறிய நிற்பவனவாம். உருவமும், குணமும் உடைய வனை அவையேயாகவும், காலத்தின்கண் ஒற்றித்து நிற்பவனை, `காலம்` எனவும் கூறியவை, பான்மை வழக்கு. கோலமே முதலிய மூன்றாலும் உலகின் வேறுபட்ட தன்மையைக் கூறியவாற்றால், அத்தன்மையானே யாவர்க்கும் முதல்வனாதலைக் குறிக்க, மேலை வானவர் கோவே என்றார். இது, காலமே என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்கற்பாலது. `அமுதாக` எனவும், `கோயிலாக` எனவும் ஆக்கச்சொற்கள் வருவிக்க. ஞாலமே - உலகத்தில் அதுவாய்க்கலந்து நிற்பவனே. `தமியேன் தவம்` என இயையும். நற்றவம், சரியை, கிரியா யோகங்கள். தவத்தாயை - தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை. நணுகுதல் - சார்தல்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Assumer of forms! King of super celestials!
Attributive sign sans attributes and signs!
Time-Tamer! Ganga`s Capital! Killer of Killer
Timer of Time! Burner of Mind-churner!
Dancer deft entempled in carat-Auric Hall
Having eaten up the fell-venom meal!
Logomorph! For this loner to love askesis,
May you ordain me your servient one come near you.
Translation: S. A. Sankaranarayanan (2007)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
koalamae maelai vaanavar koavae
ku'nangku'ri i'ra:nthathoar ku'namae
kaalamae kangkai :naayakaa engka'l
kaalakaalaa kaama :naasaa
aalamae amuthu'n dampalam sempo'r
koayilko'n daadaval laanae
gnaalamae thamiyaen :na'r'ravath thaayaith
tho'ndanaen :na'nukumaa :na'nukae.
சிற்பி