ஒன்பதாம் திருமுறை
29 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4 பண் : பஞ்சமம்

பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
    பிறப்பிறப் பறுத்தபே ரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
    மகள்உமை யவள்களை கண்ணே
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
    அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
    தொண்டனேன் உரைக்குமா றுரையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

பெருமையாய் உள்ள நிலையிலேயே சிறுமையாக வும், பெண்ணாய் இருக்கும் நிலையிலேயே ஆணாகவும் இவ்வாறு உலகியலுக்கு வேறுபட்டவனாய் இருந்து என்னுடைய பிறப்பு இறப்புக்களைப் போக்கிய பெரிய ஞானவடிவினனே! கருமையாய் இருக்கும் நிலையிலேயே வெண்மையாய் இருப்பவனே! கயல்மீன் போன்ற கண்களையுடையவளாய், இமயமலைத் தலைவனான இம வானுடைய மகளான உமாதேவிக்குப் பற்றுக்கோடாக உள்ளவனே! மேம்பட்டனவாகிய நான்கு வேதங்களும் உன்னை உள்ளவாறு அறியமுடியாமல் பேரொலி செய்து புகழும் தலைவனே! அம்பலத்தில் காட்சி வழங்கும் அமுதே!நீ ஒருவனாகவே இருந்து எல்லாப் பொருள் களிலும் அந்தர்யாமியாய் ஊடுருவி நிற்கும் உன்னை அடியவனாகிய யான் பலவாறு என்சொற்களால் புகழுமாறு நீ என்னுள் இருந்து செயற்படுவாயாக.

குறிப்புரை :

பெருமையின் - பெருமையாய் உள்ளநிலையிற்றானே. கருமையின் ஒருமையின் என்பவற்றிற்கும் இவ்வாறு உரைக்க. ஆய் என்றதனை, `சிறுமை` என்றதற்கும் கூட்டுக. வெளி - வெண்மை. களைகண்ணே என்பதில் ணகர ஒற்று விரித்தல். களை கண் - பற்றுக்கோடு `கொழுநன்` என்பதும் இப்பொருட்டு. மறை என்றது பெயராகலின், சாரியை உள்வழித் தன்னுருபு கெட்டது. (தொல். எழுத்து 157) எனவே, `அருமையையுடைய மறை` என்பது பொருளாயிற்று.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Great and small, Female and Male you are;
Light immense severing birth and death;
Vast is your Dark. Fish-eyed Himavant`s girl
Uma clings to you. O, Father hailed aloud
By supernal Vedas four! Ambrosia in Ambalam!
As one in and through every ens
You are outstanding immanence. May you will it so
That I, your servient one, psalm you in verse variform.
Translation: S. A. Sankaranarayanan (2007)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
perumaiyi'r si'rumai pe'n'nodaa 'naayen
pi'rappi'rap pa'ruththapae ro'liyae
karumaiyin ve'liyae kaya'rka'naa'l imavaan
maka'lumai yava'lka'lai ka'n'nae
arumaiyin ma'rai:naan koalamid dara'r'rum
appanae ampalath thamuthae
orumaiyi'r palapuk kuruvi:nin 'raayaith
tho'ndanaen uraikkumaa 'ruraiyae.
சிற்பி