ஒன்பதாம் திருமுறை
29 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 10 பண் : பஞ்சமம்

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
    கருள்புரி வள்ளலே மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
    ஏறிய ஏறுசே வகனே
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
    அடர்த்தபொன் னம்பலத் தரசே
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
    தொண்டனேன் விரும்புமா விரும்பே.?
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

நரசிம்ம மூர்த்தியாய் இரணியகசிபுவினுடைய மார்பை நகத்தால் பிளந்த திருமாலுக்கு அருள் செய்த வள்ளன்மையை உடையவனே! மயக்கமாகிய அஞ்ஞானத்தை உடைய அசுரர்கள்தம் இருப்பிடமாகக் கொண்ட மூன்று மதில்களும் வெந்து சாம்பலாகுமாறு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இவர்ந்த, காளையை வாகனமாக உடைய வீரனே! வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனுடைய செருக்கு அழியுமாறு மேம்பட்ட கயிலைமலைக்கீழ் அவனை வருத்திய பொன்னம்பலத்து அரசனே! விடம் தங்கிய நீலகண்டத்தையுடைய எங்கள் அழகனே! உன்னைத் தொண்டனாகிய அடியேன் விரும்புமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

மடங்கல் - சிங்கம்; நரசிங்கம். கனகன் - `இரணிய கசிபு` என்னும் அசுரன். இவ்வடி, சரப வரலாற்றைக் குறித்தல் கூடும். மருளார் - மருட்சியையுடையவரது. திரிபுரத்தசுரர் துர்போதனையால் மயங்கிச் சிவநெறியைக் கைவிட்டவராதல் அறிக. வைதிகத் தேர் - வேதத்தைக் குதிரையாகக் கொண்ட தேர். ஏறு சேவகன் - மிக்க வீரத்தை யுடையவன். அரக்கன் - இராவணன். அரட்டு - செருக்கு. இரு வரை - பெரிய மலை. `அருட்டிரு வரைக்கீழ்` எனவும் பாடம் ஓதுவர். விடங்கன் - அழகன்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Generous one of Grace powering fair Maal
To split open the breast-bone of Hiranyakasipu
In human-lion form with claws! O, valorous
Taurus-rider astraddle on veda-steeds-drawn-car.
Asher of citadels triple in cinerary flames!
Dumper of demons in the dungeon of Dark!
King of auric spatium thick, crushing proud Ravan `neath Kayilai!
Fair one venom-throated. Will me so your servient one to dote on you
Translation: S. A. Sankaranarayanan (2007)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
madangkalaayk kanakan maarpukee'n daanuk
karu'lpuri va'l'lalae maru'laar
idangko'lmup puramve:n thaviyavai thikaththaer
ae'riya ae'rusae vakanae
adangkaval larakkan araddiru varaikkeezh
adarththapon nampalath tharasae
vidangko'lka'n daththem vidangkanae unnaith
tho'ndanaen virumpumaa virumpae.?
சிற்பி