திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர் ; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும்.
முதல்வனை அன்பால் அகத்தே நினைவார் அவனை உணரப் பெறுவர் என்பது கருத்து.