நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
001 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 2 பண் : கொல்லி

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.

குறிப்புரை :

திருக்கெடில நதிக்கரையிலே திருவதிகையிலே திருவீரட்டானத்திலே எழுந்தருளியிருக்கும் ஆண்டவரே. அடியேனது நெஞ்சம் தேவரீர்க்கே உறைவிடம் ஆகப் பண்படுத்தி வைத்துள்ளேன். ஒரு பொழுதிலும் உம்மை நினையாமல் இருந்தறியேன். இச் சூலை நோய் போல்வதொரு கொடுநோயை அடியேன் அநுபவித்தறியேன். அஃது அடியேனது வயிற்றினொடு துடக்குண்டு முடக்கியிடும்படி நஞ்சாய் வந்து அடியேனை வருத்துகின்றது. அச்சூலை நோயை இனியும் என்னைக் குறுகாதவாறு துரத்துவதும் மறைப்பதும் தேவரீர் செய்திடீர். அஞ்சேலும் (பயம் கொள்ளாமல் இரும்) என்று அபயமேனும் அளித்திலீர்.
வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் என்பது:- சூலை நோயைக் குறித்ததாகக் கொள்ளாமல் இறைவனுக்கே நெஞ்சத்தையும் அதன் நினைவையும் உரிமையாக்கியதைக் குறித்ததாகக் கொண்டு உரைத்தலும் பொருந்தும்.
அப்பொருளில் வஞ்சம் என்பதற்குப் பொய் என்றல் பொருந்தும். நெஞ்சம் இடமாக நினைக்கும் செயல் என் அநுபவத்தில் பொய் போல்வதன்று. மெய்யே என்றவாறாம். வல் + து + அம் = வஞ்சம். மரூஉ. அது(தண் + து + அம் =) தஞ்சம் என்ற மரூஉப் போல்வது. நஞ்சு ஆகி - நஞ்சினியல்புடையதாகி. ஆகி - போன்று எனலும் ஆம்; `ஆள்வாரிலி மாடு ஆவேனோ` `என்புழிப்போல. `அஞ்சேலும்`:- அஞ்சேல்` என்னும் முன்னிலை யொருமை ஏவல் வினையின் ஈற்றில் முன்னிலைப் பன்மையேவற்கு உரிய `உம்` விகுதி சேர்த்து அஞ்சேலும் என்றதுணர்க. அஞ்சேல்மின், செய்யல்மின் என்பனவும் அன்ன. வாரும் தாரும் செய்யும் உண்ணும் என்பன உடம்பாடு. வாரேலும், தாரேலும், செய்யேலும், உண்ணேலும் என்பன எதிர்மறை. இவ்வாறு ஆட்சியில் இல்லை. `கொள்ளெலும்` (தி.1 ப. 55 பா.10) கொள்ளேலும் (தி.2 ப.119 பா. 10) எனத் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருவாக்கில் வந்தமை கண்டுகொள்க. இஃது அரியதோர் ஆட்சி. என்னீர் - என்று சொல்லீர். வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன் (பா-5) என்பது போல்வதே, வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் என்பது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
see 1st verse I kept my mind as a place for you only.
I do not know having spent even a moment without thinking of you.
I have never experienced anything comparable to this cruelty.
having disabled me by bringing together the intestines with the belly.
you neither destroy this disease which afflicts me like the poison, drawing near me, by driving it away from coming near me nor do you say Do not be afraid`.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:nenjsamumak kaeyida maakavaiththaen :ninaiyaathoru poathum iru:ntha'riyaen
vanjsamithu voppathu ka'nda'riyaen vayi'r'roadu thudakki mudakkiyida
:nanjsaakiva:n thennai :nalivathanai :na'nukaamal thura:nthu kara:nthumideer
anjsaelumen neerathi kaikkedila veeraddaa naththu'rai ammaanae.
சிற்பி