இருமலத்தார்க்கு உடல் இல்லை வினை என் செய்யும் இரண்டு மலமுடைய பிரளயாகலருக்கு மாயை யில்லாதபடியினாலே உடம்பு இல்லை, வினை புசிக்கும்படி எப்படி ; ஒரு மலத்தார்க்கு ஆராய் உரைப்பேன் ஒரு மலமுடைய விஞ்ஞானாகலர்க்கு உரை யாராகச் சொல்லுவாம் ; திரிமலத்தார் ஒன்றாக உள்ளார் மும்மலமுடைய சகலருக்கன்றோ ஒன்றாக உள்ளது ; உயர் மருதச் சம்பந்தா அன்றாகில் ஆமாறு அருள் உயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, அப்படியல்லவாகில் ஆகும்படி அருளவேண்டும்.
விஞ்ஞானாகலர் பிரளயாகலர் சரியை கிரியை யோகமுடைய சகலருக்குச் என்பது திருநெல்வேலிப் பிரதியில் அதிக பாடம். பிரளயாகலருக்குச் சுத்தமாயையிலே தேகமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞான சித்தியில் (1.25) ‘வித்தைகள் வித்தையீசர்’ என்ற பாட்டு முழுதுங் கண்டுகொள்க.