அருவேல் உருவன்று உருவேல் அருவன்று இருவேறும் ஒன்றிற்கு இசையா கர்த்தா திருமேனி அருவமானால் உருவமாக மாட்டாது, உருவமானால் அருவமாகமாட்டாது, அருவுமுருவும் ஆனால் ஒரு பொருளுக்கு இரண்டு தன்மை இசையாது ; உரு ஓரிற் காணில் உயர் கடந்தைச் சம்பந்தா கண்ட உடல் பூணும் இறைக்கு என்னாம் புகல் திருமேனியை விசாரித்துக் காணில், உயர்ந்த கடந்தைநகர் வாழ் சம்பந்த மாமுனியே, கொண்ட திருமேனியைப் பூணப்பட்ட கர்த்தாவுக்குத் திருமேனி என்னத்திலே உண்டானது, திருவுளம் பற்றவேணும்.
ஞானத்திலே திருமேனி கொள்ளுவனென்பது கருத்து.
உதாரணம் : சிவஞான சித்தியில் (1.41) ‘மாயை தான்... சத்தி தன்னால்’ என்பது கண்டுகொள்க.