உன்னரிய நின் உணர்வது ஓங்கியக்கால் நினைத்தற் கரிதாகிய தேவரீரருள் தோன்றின காலத்து ; ஒண் கருவி தன் அளவும் நண்ணரிது தானாகும் அழகு பொருந்திய முப்பத்தாறு தத்துவங்களாற் பொருந்தப்படாது ; என்னறிவு தான் அறிய வாராது என்னுடைய பசு ஞானத்தாலும் அறியப்படாது ; தட மருதச் சம்பந்தா யான் அறிவது எவ்வாறு இனி தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, அடியேங்கள் அறிகிறது எப்படித்தான் இனி.
பசுகரணங்களும் சிவகரணமாய் ஆன்மாவும் அருளாய்ப் பொருந்திநின் றறியுமென்பது கருத்து.
உதாரணம் : சிவப்பிரகாசத்தில் (70) ‘மாயைமா மாயை மாயா’ என்ற பாடத்திற் கண்டுகொள்க.