அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப் பொருளாகி நிற்கும் பொருந்தி ஆசாரியர் அநுக்கிரகம் பெற்ற ஞானவான்களுக்கு விட்டு நீங்கி மலைவு வாராமல் செம்மைப் பொருளாகவே பொருந்தி நிற்கும்; தெருளா வினாவெண்பா உண்மை வினாவாரேல் ஊமன் கனாவின்பால் எய்துவிக்கும் காண் அறியத் தக்கதாக வினாவெண்பாவின் உண்மையை வினாவி யறியாதவர் ஊமன் கனவிலே பால் குடித்தது போல.
ஒன்றுந் தெரியாதென்பது கருத்து.இராசாங்கத்துக் கையெழுத்து நூல் நிலயப் பிரதியில் ‘முற்றும்’ என்பதன்பின் “பால் குடித்ததற்கு ஒக்குமென்றது ஞான மிகுதியுடையார்க்குச் சத்தியமாகவே தோன்றுமென்றும் அல்லாதபேர் எத்தனை சாத்திரம் படித்தாலும் வினா வெண்பா பாராதவனுக்கு ஊமன் கனாவிலே பால் குடித்தது” என்று எழுதப்பட்டுள்ளது.
உரைத் தொடக்கத்தில் காணப்படும் வரலாறு : “இந்நூலுக்கு வரலாறு பரிபூர்ணகர்த்தாவாயிருக்கிற ஸ்ரீ கண்டபரமேஸ்வரன் அருளிச் செய்த சிவாகமத்திலே ஞானகாண்டமாயிருக்கிறதை நந்திகேசுர சுவாமிக்குக் கடாட்சித்தருள, நந்திகேசுர சுவாமி சனற் குமாரபகவானுக்குக் கடாட்சித்தருள, சனற்குமாரபகவான் சத்தியஞான தரிசனிகளுக்குக் கடாட்சித்தருள, சத்தியஞான தரிசனிகள் பரஞ்சோதி மாமுனிகளுக்குக் கடாட்சித்தருள, பரஞ்சோதிமாமுனிகள் மெய்கண்டதேவநாயனார்க்கு அனுக்கிரகம் பண்ண, மெய்கண்ட தேவநாயனார் அருணந்திதேவர்க்குக் கடாட்சித்தருள, அருணந்தி தேவர் மறைஞானசம்பந்தமா முனிக்கருள, மறைஞான சம்பந்தமா முனி யனுக்கிரகம் பெற்ற கொற்றங்குடி முதலியார் அந்த உபதேசத்தைச் சங்கற்ப நிராகரணமென்று எட்டு வாதிகளை வைத்து மறுத்து, அந்த அர்த்தம் விளங்கச் சிவப்பிரகாசமென்று திருநாமமுஞ் சாத்தி வழி நூலாக அனுக்கிரகம் பண்ணி, அந்தச் சிவப்பிரகாசத்தின் சாரம் விளங்கப் பதின்மூன்று வெண்பாவாக வினாவினதென அறிக. இந்நூலுக்கு வியாக்கியை செய்ய வேண்டி மெய்கண்ட சந்ததியில் திருவாவடுதுறை நமச்சிவாய அய்யர் ஆசாரியமரபில் வேலப்ப பண்டாரம் அனுக்கிரகம் பெற்ற நமச்சிவாய வேலப்ப பண்டாரம் அனுக்கிரகித்த உபதேசத்தை முன்னுள்ள ஞாதாக்கள் இந்நூலுக்கு விருத்தி பண்ணாமையாலேஅசடீளு பிங்களய் வைகாசிமீ பவுரணையில் பண்ணினதென்று அறிக.”
இவ்வரலாறும் இப்பதிப்புக்கு மூலமாயுள்ள உரையும் திருநெல்வேலி திரு. எம்.பி.எஸ். துரைசாமி முதலியாரவர்கள் அனுப்பி வைத்த பிரதியிற் காணப்படுவன. சென்னைச் சிவஞானபோத யந்திர சாலையில் அச்சிட்ட பிரதியும் இராசாங்கக் கையெழுத்து நூல் நிலயத்துள்ள பிரதியும் ஒப்பு நோக்கப் பயன்பட்டன. இறுதிப் பிரதியில் சகாத்தம் 1600 எனக்காலம் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிப் பிரதி குறித்தது கொல்லமாண்டு. சகாத்தம் 1600க்கு நேரானது கி.பி. 1677. கொல்லமாண்டு 840க்கு நேரானது கி.பி. 1665. எனினும் இரண்டு பிரதிகளிலும் பிங்கல வருஷமென்றே எழுதப்பட்டிருப்பதால், அதற்கு நேரான கி.பி. 1677 ஐயே உரையின் காலமாகக் கொள்ள வேண்டும்.
எஸ். அனவரத விநாயகம் பிள்ளை
வினாவெண்பா உரை முற்றும்
திருச்சிற்றம்பலம்