ஒன்றி நுகர்வது இவன் ஊணும் உறுதொழிலும் (ஆன்மா வினைப்போகத்தையும் செயலையும் கர்த்தாவைச் சேர்ந்தல்லது நுகர்வதில்லை); என்றும் இடையில் இடமில்லை (எக்காலத்தும் கர்த்தாவுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் நின்று பிறிதொன்று புசிப்பிக்கு மென்பதற் கிடமில்லை); ஒன்றித் தெரியா அருள் மருதச் சம்பந்தா சர்வவியாபியா யிருக்கையிலேயும் தோன்றாத கிருபை பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே; சேர்ந்து பிரியாவாறு எவ்வாறு பேசு தேவரீர் திருவடியைச் சேர்ந்து பிரியாமற் போகங்களைப் புசிக்கும் முறைமையைத் திருவுளம் பற்ற வேண்டும்.
அவன் சர்வ வியாபியாகையினாலும் இவன் சுதந்தர ஹீனனாகையாலும் அவனே போகங்களைப் புசிப்பிக்கிறவ னென்பது கருத்து.
உதாரணம் : திருவருட்பயனிலே (95) ‘அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு, மிவனையொழிந் துண்டாத லில்’ என்றும், சிவஞானபோதத்தில் (11.1) ‘ஈண்டிவ்வான்மாக்கள் அவனை யின்றியமைந் தொன்றையும் விஷயியாவாகலால் அவனும் அவற்றது விஷயத்தை யுணரும்’ என்றும், உண்மை நெறி விளக்கத்தில் (6) ‘பாதகங்கள்....... பிதுவே’ என்றும் வருவன கண்டுகொள்க.