9. வினாவெண்பா
001 வினா வெண்பா
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
பாடல் எண் : 10

ஒன்றிரண்டாய் நின்றொன்றில் ஓர்மையதாம் ஒன்றாக
நின்றிரண்டா மென்னில்உயிர் நேராகுந் - துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
ஓங்கியவா றெவ்வா றுரை.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஒன்று இரண்டாய் நின்று ஒன்றில் ஓர்மையதாம் ஒரு பொருள் விவகாரத்திலே இரண்டாய் நின்று ஒன்றா மென்னில் ஒன்று பொருந்தமாட்டாது ; ஒன்றாக நின்று இரண்டா மென்னில் உயிர் நேராகும் ஒன்றாய் நின்று இரண்டா மென்னில் ஒன்றிலே ஒன்று அழிந்துபோம் ; துன்றிருந்தார் தாங்கிய வாழ் தண் கடந்தைச் சம்பந்தா யானாகி ஓங்கியவாறு எவ்வாறு உரை ஞானத்தைப் பொருந்திய பெரியோரால் தாங்கிய வாழப்பட்ட குளிர்ந்த கடந்தை நகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் சிவமாகி ஓங்கிய முறைமையைத் திருவுளம்பற்ற வேணும்.
ஆணவத்தைப் பொருந்தின ஆன்மாப்போல என்பது கருத்து.
உதாரணம் : சிவப்பிரகாசத்தில் (87) ‘ஒன்றிரண் டாகி யொன்றி னொருமையா’ மென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
on'rira'ndaay :nin'ron'ril oarmaiyathaam on'raaka
:nin'rira'ndaa menniluyir :naeraaku:n - thun'riru:nthaar
thaangkiyavaazh tha'nkada:nthaich sampa:nthaa yaanaaki
oangkiyavaa 'revvaa 'rurai.
சிற்பி