ஒன்று இரண்டாய் நின்று ஒன்றில் ஓர்மையதாம் ஒரு பொருள் விவகாரத்திலே இரண்டாய் நின்று ஒன்றா மென்னில் ஒன்று பொருந்தமாட்டாது ; ஒன்றாக நின்று இரண்டா மென்னில் உயிர் நேராகும் ஒன்றாய் நின்று இரண்டா மென்னில் ஒன்றிலே ஒன்று அழிந்துபோம் ; துன்றிருந்தார் தாங்கிய வாழ் தண் கடந்தைச் சம்பந்தா யானாகி ஓங்கியவாறு எவ்வாறு உரை ஞானத்தைப் பொருந்திய பெரியோரால் தாங்கிய வாழப்பட்ட குளிர்ந்த கடந்தை நகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் சிவமாகி ஓங்கிய முறைமையைத் திருவுளம்பற்ற வேணும்.
ஆணவத்தைப் பொருந்தின ஆன்மாப்போல என்பது கருத்து.
உதாரணம் : சிவப்பிரகாசத்தில் (87) ‘ஒன்றிரண் டாகி யொன்றி னொருமையா’ மென்ற பாடத்திற் கண்டுகொள்க.