பெண்டிராகிய ஆன்மா பேயின் வசமாய்ப் பிடிபட்டவனைப் போலவும் ஆண்மக்களாகிய சிவன் பிடித்த பேயைப் போலவும் பெற்றவர்களே அருட்கண்ணாலே கண்டவர்கள். இப்படிப் பெறாத பேர்கள் அந்தக் கண்ணாலே காணாத பேர்கள்.
பிடியென்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயர், ஆன்மா, பெண்டிரைப் போலவும் பிடிபட்டவனைப் போலவும் சிவன் ஆண்மக்களைப் போலவும் பேயைப் போலவும் எனினும் அமையும்.