3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
பாடல் எண் : 9

கடலமுதே வெண்ணெய்க் கரும்பேயென் கண்ணே
உடலகத்து மூலத் தொடுங்கச் – சடலக்
கருவியா தாங்குணர்த்தக் காண்பதுதா னென்னை
மருவியா தென்றுரைக்க மன்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கடலமுதே வெண்ணெய்க் கரும்பே என் கண்ணே உடலகத்து மூலத்தொடுங்கச் சடலக் கருவியாதாங் குணர்த்தக் காண்பதுதானென்னை மருவியாதென்றுரைக்க மன்கடலிடத்தமுதத்தை யொப்பானே வெண்ணெய் நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானேவெண்ணெல் நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானே வெண்ணெய்நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானே எனக்கறிவே நானறிவிக்க அறிந்தவனாயின் அவத்தையில் மூலதாரத்திலே யானறியுமிடத்துக் கருவிகளேது அவ்விடத்துணர்த்தக் காணப்பட்டது (யாது) இவற்றைத் தெரிய இன்னதென்று சொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாவுக் கதீதத்திலும் உணர்த்துமுறைமை எப்படியென்ன வினாவ அதற்குத்தரம் : அதீதத்துப் பிரகிருதி கூடி நிற்கையால் காலம் நியதி கூடும்; துரியத்துக் கலை வித்தை அராகங்கூடும். இதற்குதாரணம் (போற்றிப்பஃறெடை 2936) :மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக்
கால நியிதி யதுகாட்டி – மேலோங்கு
முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்த அராக மவைமுன்பு – தந்த
தொழிலறி விச்சை துணையாக மானின்
எழிலுடைய முக்குணமு மெய்தி – மருளோடு
மன்னு மிதயத்துச் சித்தத்தாற் கண்டபொருள்
இன்ன பொருளென் றியம்பவொண்ணா – அந்நிலைபோய்க்
கண்ட வியன்கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக்
கொண்டுநிய மித்தற்றை நாட்கொடுக்கப் – பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும்வகை யங்கே மருவி - உருவுடனின்
றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற்
போங்கரவி யெல்லாம் புகுந்தீண்டி – நீங்காத
முன்னை மலத்தினிருள் மூடா வகையகத்துள்
துன்னுமிருள் நீக்குஞ் சுடரேபோல் – அந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரிய
ராக்கிப் பணித்த வறம்போற்றி.
இது அதீதத்திலுணர்த்து முறைமை கண்டு கொள்க.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
The State of Turiyaatitam

O Oceanic Nectar! O Sugarcane of Vennainallur of
Abiding and absolute sweetness! O my eyes!
When life slips into Mulaadaara, what
Bodily instruments help soul’s comprehension?
What type of cognition takes place thither?
Do enlighten me.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kadalamuthae ve'n'neyk karumpaeyen ka'n'nae
udalakaththu moolath thodungkach – sadalak
karuviyaa thaangku'narththak kaa'npathuthaa nennai
maruviyaa then'ruraikka man.
சிற்பி