கடலமுதே வெண்ணெய்க் கரும்பே என் கண்ணே உடலகத்து மூலத்தொடுங்கச் சடலக் கருவியாதாங் குணர்த்தக் காண்பதுதானென்னை மருவியாதென்றுரைக்க மன்கடலிடத்தமுதத்தை யொப்பானே வெண்ணெய் நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானேவெண்ணெல் நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானே வெண்ணெய்நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானே எனக்கறிவே நானறிவிக்க அறிந்தவனாயின் அவத்தையில் மூலதாரத்திலே யானறியுமிடத்துக் கருவிகளேது அவ்விடத்துணர்த்தக் காணப்பட்டது (யாது) இவற்றைத் தெரிய இன்னதென்று சொல்லென்றவாறு.
இச்செய்யுள், ஆன்மாவுக் கதீதத்திலும் உணர்த்துமுறைமை எப்படியென்ன வினாவ அதற்குத்தரம் : அதீதத்துப் பிரகிருதி கூடி நிற்கையால் காலம் நியதி கூடும்; துரியத்துக் கலை வித்தை அராகங்கூடும். இதற்குதாரணம் (போற்றிப்பஃறெடை 2936) :மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக்
கால நியிதி யதுகாட்டி – மேலோங்கு
முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்த அராக மவைமுன்பு – தந்த
தொழிலறி விச்சை துணையாக மானின்
எழிலுடைய முக்குணமு மெய்தி – மருளோடு
மன்னு மிதயத்துச் சித்தத்தாற் கண்டபொருள்
இன்ன பொருளென் றியம்பவொண்ணா – அந்நிலைபோய்க்
கண்ட வியன்கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக்
கொண்டுநிய மித்தற்றை நாட்கொடுக்கப் – பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும்வகை யங்கே மருவி - உருவுடனின்
றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற்
போங்கரவி யெல்லாம் புகுந்தீண்டி – நீங்காத
முன்னை மலத்தினிருள் மூடா வகையகத்துள்
துன்னுமிருள் நீக்குஞ் சுடரேபோல் – அந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரிய
ராக்கிப் பணித்த வறம்போற்றி.
இது அதீதத்திலுணர்த்து முறைமை கண்டு கொள்க.