மொழிந்த அவத்தை முதலடியேன் நின்றாங்கு ஒழிந்தன நான்கும் உணர இழிந்தறிந்து ஏறிற்றிங்கில்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே தேறிற்றென் கொண்டு தெரித்து இப்படியே நீங்கித் தெரிசிக்கும் அவதரத்தில் அவத்தைகளை அடியேன் அறிந்து நீங்குமளவில் முற்படு மதீதத்தில் அடியேன் தானேயாய் நின்ற விடத்தினின்றுந் துரியஞ் சுழுத்தி சொப்பனஞ் சாக்கிரமென்னும் நாலவத்தையும் ஆராயுமிடத்துச் சாக்கிரத்திற் கருவிகள் வந்து யிறங்கி யேறியதில்லை; தேவரீரது ஞானமும் வந்து பொருந்தாது; ஆதலால் அவ்விடத்திலே எது கருவியாக அறிந்தேன், அழகு பொருந்திய திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டதேவனே, அருளவேணுமென்றவாறு.
இச்செய்யுள், அவத்தை நீங்குமிடத்து ஆன்மாவுக்குக் கருவியேதென வினவ, அதற்குத்தரம்:‘அஞ்சாகுஞ் சாக்கிரத்தில் நான்குகனா மேலடைவே எஞ்சாது மூன்றி ரண்டொன் றென்.’