அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று இருள் கண்டவாறு என்கொல் எந்தாய் மருள் கொண்ட மாலையாய் வெண்ணெய் வாழ் மன்னவா என்னுடைய மால் ஐயா மாற்ற மதி - இப்படிக் கூறிய மலங்களை இப்பொழுது நீக்குமளவில் அருள்கூடில் இருளும் வெளியுமாய் நில்லாது அடியேனுக்கு அருளொழிய வேறிடமில்லை நின்று நீக்க ஆதலால் இருளையறிந்தவழி எப்படி, எம்முடைய சுவாமியே, மணம் பொருந்திய மாலையினையுடையாய், திருவெண்ணெய் நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவனே, எனக்குண்டாகிய மயக்கத்தை ஐயா போம்படி இதுவென்று புத்தி பண்ணுவாயாக என்றவாறு.
இச்செய்யுள், சதசத்தாகிய ஆன்மா இருளை நீங்கின தெப்படி யென வினாவ அதற்குத்தரம்; ‘சத்தி கொடுநித்தன் தானறியா நின்ற முறை வைத்தலது சுத்தியா வை.’