தரும அதருமத் தலைநின்று ஆழ்வேளைக் கருமா கடல் விட முண் கண்டப் பெருமான் திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத் தான் உருவென்ன வந்தெடுத்தான் உற்று - புண்ணிய பாவங்களின் எல்லை நீங்காது திரியும் என்னை அவ்வினை துலையொப்பறிந்தவனாதலாலே, மால்பிரமன் முதலிய தேவர் இறந்து போகாமற் கருணையாலே பெரிய கடலில் விடத்தை யுண்டு உய்யக் கொண்ட நீலகண்டனாகிய தலைவன் திருவெண்ணெய் நல்லூரிலெழுந்தருளிச் சுவேதவனப் பெருமாளென்னும் பிள்ளைத் திருநாமத்தையுமுடைய மெய்கண்டதேவன் இவ்வடிவிலே யான் ஈடேறும்படி என்னையடிமையாகக் கொண்டான் பற்றி யென்றவாறு.
இச்செய்யுள் பரமேசுவரன் பக்குமறிந்து இரட்சிப்பனென்பது சொல்லிற்று.