கோலங் கொண்டவாறு உணராதே ஞாலங் காவலன்யான் எனக் கொளீஇப் பொய்யை மெய்யெனப் புகன்று வையத்து ஓடாப் பூட்கை நாடி நாடா - தேவரீர் திருமேனி கொண்ட முறைமையை யுணராமல் பிரபஞ்சத்தக்கு நானே கர்த்தாவென்னக் கொண்டு, பிரபஞ்சத்தை ஊராத பேய்த்தேரின் செலவை விசாரித்து அறியாதாரைப்போல, அசத்தாகிய பிரபஞ்சத்தைச் சத்தெனக் கருதிக் கொண்டிருக்கிற; என்னுள் கரந்து - எனக்குள்ளே மறைந்து; என்பின் வந்தருளி - என்னை முன்னாக்கித் தான் எனக்குப்பின் வந்து; என்னையுந் தன்னையும் அறிவின்றியற்றி - தன்னையும் என்னையும் அறியாதபடி யியற்றி; என்னது யானெனும் அகந்தையுங் கண்டு - யானெனதென்னும் அகந்தையு முண்டாக்கி; யாவயின் யாவையுங் யாங்கணுஞ் சென்று புக்குழிப்புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து - எந்த யோனியிலும் எந்த வுலகத்தும் நான் சென்று புக்கவிடமெங்கும் புக்கு மீண்டவிடமெங்குந் தானும் மீண்டு; மிக்க போகம் விதியால் விளைத்திட்டு - எனக்கு மிகுந்த புசிப்புக்களைத் தப்பாமல் விளைத்து; எற்பணியாளாய் எனைப் பிரியாதே - எனக்குப் பண்ணைக்காரனாகிய ஏவலாளாய் என்னை விட்டு நீங்காதே; ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு என்வழி நின்றனன் எந்தை - வில்லொடு குத்தி விளையாட விடுமா போல ஓடித் திரியும் ஆடலைக் கண்டு முன்னெல்லாம் என் வழி நின்றாய், எனக்குச் சுவாமியாயுள்ளவனே; அன்னோ - அய்யோ அய்யோ; அருள் மிக வுடைமையின் அருட்டுறை : திருவெண்ணெய்நல்லூரிலுள்ள சிவாலயம் ; ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா’ என்பது சுந்தரர் தேவாரம். அருட்டுறை வந்து தனக்கு அருளே மிகுத்த செல்வமாயிருக்கையாலே திருவெண்ணெய்நல்லூரிலே திருமேனி கொண்டு வந்து; பொருள் மிக அருள்தலும் பொய்ப்பகையாதலுங் கை கண்டு கொள்ளெனக் கடலுலகறிய மெய்கண்டதேவன் எனப் பெயர் விரீஇ நீ எல்லாப் பொருளையுங் கூட்டுதலும் கூட்டியும் பொய்க்குப் பகையும் மெய்க்கு உறவுமாய் நிற்றலை எனக்குக் காண்பிப்பான் பொருட்டுத் தண்கடல் சூழ்ந்த உலகமறிய மெய்காணாத ஆன்மாக்களுக்கு மெய்யைக் காண்பித்த தெய்வமென்னும் பெயரை விரித்து நிறுத்தி; தன்னுட் கரந்து தான் முன்னாகி தன்னதுந் தானுமாய் என்னை இன்றாக்கி தனக்குள்ளே என்னையடக்கித் தான் என்பின் செல்வதன்றித் தன் செயலுந் தானுமல்லது என் செயலையும் என்னையும் இன்றாக்கி; தன்னையு மென்னையுந்தந்து என்னுண்மையுந் தண்னுண்மையும் அறியும்படி யுணர்த்தி; தனது செய்யாமையும் என் செயலின்மையும் எம்மான் காட்டி தான் சகல வித்தையும் ஆன்மாக்களுக்குக் கன்மத்துக் கீடாகக் கூட்டிப் பொசிப்பிக்கையிலே தான் அதிற் பணியற்று நிற்கிற முறைமையையும் யான் அதிலே கூடி அதுவதுவாக மொத்துண்கையிலே எனக்கொரு செயலற்று நிற்குந் தன்மையையுந் தலைவன் காட்டினது; எய்தல் அம்மா எனக்கே அதிசயந் தருமே எனக்கு ஏறப் பொருந்துகையாலே ஆச்சரியம் எனக்கே தருமென்றவாறு. அம்மா வென்றது கேட்பிக்கும்; பூட்கைக் கிளவி மேற்கோளாம்.
குறிப்புரை :
இச்செய்யுள் சிவன் நின்று நடத்துகிற முறைமை யறிவித்தது.
ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
English / ஆங்கிலம்
Hailing the grace of Grace
Unable to realize the splendour of Your form,
Deeming me to be the sovereign of this earth,
Maintaining falsehood as truth, I have been
Chasing after the mirage of worldly pleasures.
Abiding concealed in me, You, in grace, pursued me,
Exposing my pride of I – ness and My – ness, activised
Senselessly by me and myself, entered me everywhere –
Whatever embodiment I took -, quit it
When I quit it, caused me to experience
My Karma without fail, followed me inseparably
Like my servitor and witnessed the drama
Of my life, with intent to redeem me eventually.
O my Sire, thus, even thus, in the past,
You traversed my way. Alas, alas!
In Your immense grace, You arrived at
Arullturai in Vennainallur, on purpuse,
To reveal unto me all phenomena (and their nature).
You are the Foe of Falsity. To cause the whole
World realize this, You bore the name Meikandaan –
The Revealer of Truth. You caused me to get
Contained in You, quitting Your pursuit of myself
And causing my will, knowledge and action
To get oned with You. Not only did You grace me
With knowledge of myself but caused me also
To comprehend and come by You, by Your Grace.
Making a gift of Yourself to me, You taught me
Of Your Karmaless nature and the need
For my deedlessness (which is true blessedness).
So blessed, lo, I alone can marvel at this miracle.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003