தேராதுரைப்பன் தெருமரலுளத்தொடு பேராதருளுதல் பெரியோர் கடனே - பெரியோய் யான் இன்னமொன்று விசாரியாமல் விண்ணப்பஞ் செய்கிறேன் தெளிவில்லாத உள்ளத்தொடுங் கூடுதலாலே, அஃதாவதுதான், நீங்காது நிற்பது உனது முறைமையா தலால்; நின்னைக் கலப்பதென் னுண்மையே - உன்னை நான் இப்போது புதிதாகக் கூடுவேனென்பது எதுண்மையாம்; நின்னது நேர்மை சொல் மனத்தின்றே - நீதான் இதற்கு நேர்வையோவெனின் வாக்கு மனத்துக்கு மெட்டாததாம்; எழுவகைத் தாதுவின் ஏழ்துளையிரண் டும் பெருமுழைக் குரம்பையிற் பெய்து அகத்தடக்கி நீக்கி என்றனைப் போக்கற நிறுத்தி இச்சை முதலிய எழுப்பி நடத்திடும் விச்சை சாலவும் வியப்பு அது நிற்க - எனக்கு நீ சத்த தாதுக்களும் இவ்வாயிலேழும் பெருவாயி லிரண்டுமாகிய பெரிய குவைப் பாழிலே என்னை யாக்கி அதனகத்தடக்கி அவ்வறியாமையை நீக்கி மீண்டுந் தனது ஆக்கினையாலே போக்கற நிறுத்தி எனது இச்சாஞானக்கிரியைகளை நீயே யெழுப்பி அவையிற்றை நடத்தியிடும் வித்தை மிகவும் ஆச்சரியமாம்; அது நிற்க; வாக்கும் மனமும் போக்குள தனவுஞ் சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும் நல்லவுந் தீயவும் எல்லாமறிந்து முறை பிறழாமற் குறைவு நிறைவின்றாய்க் காலமுந் தேசமும் மாலற வகுத்து நடுவு நின்று அருத்தலின் நடுவனாகுதியே - அவரவர் மனவாக்குக் காயங்களானும் நீங்காச் சிறையாகிய அவ்வுடலானும் நினைத்துச் சொல்லிச் செய்தவற்றின் நன்மை தின்மையெல்லாம் நீ யறிந்து அது முன்பின் மாறுபடாமல் (புண்ணிய பாவ பலன்களை அனுபவிக்கத் தக்க காலங்களையும் அவற்றைப் பொசிக்கைத் கிருப்பிடமான தேசங்களையும் மயக்கமற வகுத்துப்) பொசிப்பித்துத் தனது பிரேரக முறைமை ஏறியுங் குறைந்துமில்லாமல் நடவனுமாகி நின்றாய் அதனாலும்; சான்றோர் செய்திமான்றிருப்பின்றே சாலார் செயலே மாலாகுவதே - ஞாதாக்கள் செயலறச் செய்கையாலே அவர்களுக்கு விரிவு கூட்டமில்லை, பொருந்தார் செய்தியே கூட்டுவது மயக்கம் ஆதலானும்; அத்துவா மெத்தி அடங்கா வினைகளுஞ் சுத்தி செய்தனையே ஒத்த கன்மத்திடை கன்மவொப்பில் - மந்திரம் பதம் வன்னம் புவனம் தத்துவங் கலையென்று சொல்லப்பட்ட ஆறத்துவாவிலும் நீ நிறைந்திருக்கப்படா நின்ற சஞ்சித கன்மத்தையுஞ் சோதிக்கையால்; நீங்கின என்னை ஊங்கு ஊழ்வினைகளும் ஆங்கு அவை அருத்துவது ஆரை கொல் அதனால் - அவ்விடத்து ஊழ்வினைகளும் என்னை விட்டு நீங்கினவாகையாலே அவை யாரை வந்து பொசிப்பித்தன அதனால்; கருமமும் அருத்துங் கடனதுவின்றாந் தருமம்புரத்தல் பெருமையதன்றே - கன்மந்தானும் அனுபவிப்பனிடத்துத் தானே பொருந்துவது மில்லையாம், நீ அக்கன்மத்துக் கீடாக நடத்துவையாகில் உன் பெருமைக்கும் அது பொருந்தாது, ஆகையால் கன்மம் நீங்கி அருளாமாறு எப்படி; கண்ணினுள் மணிய கருத்தினுட் கருத்த வெண்ணெய் வேந்த மெய்கண்டதேவ இடர்ப்படு குரம்பையுள் இருத்தித் துடைப்பதில்லா அருள்தோன்றிடச் சொல்லே - கண்ணிற் பாவைபோலவுங் கருத்துள் அறிவு போலவுமாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமாகிய மெய்கண்டதேவனே துக்கவுடலுள் வைத்து நீங்காத் திருவருள் ஏது சொல்லென்றவாறு.
இச்செய்யுள் கன்மம் நீங்கு முறைமையும் நீங்கினால் அவை போகிற முறைமையும் வினாயது; உத்தரம்: ‘உடலுக் கமைத்த லுயிரொடு நீங்கா - திடவரு(ள் கன்ம ம) ருத்தும்.’