அற்றதென் பாசம் உற்றதுன் கழலே அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத வேறென்றிருந்த என்னை யான் பெற வேறின்மை கண்ட மெய்கண்டதேவ இருவினையென்பதை என்னை கொல் ஊசல் கயிறறத் தரை தாரகமாவதுபோல என்னுடைய அறியாமை திருத்தமாகவே அடியேன் பொருந்தினது உன்னுடைய பாதமே, திருவெண்ணெய்நல்லூரைத் திருப்படை வீடாகப் பெற்ற இன்பசொரூபியாகிய தலைவனே, இருளும் வெளியும்போல இரண்டென்றிருந்த என்னை (அடிமை யென்கிற முதலுங் கெடாமல்) உனக்கு இரவியும் நயனமும் போல அனன்னியமாகிய முறைமையுணர்த்திய மெய்கண்ட தேவனே புண்ணியபாவமென்று சொல்லப்பட்டதெப்படி யென்னில் அதற்குத்தரம்; அருளிய மனமே காயம் வாக்கெனும் மூன்றின் இதமே யகித மெனுமிவை யாயில் புண்ணிய பாவமாவது ஏதென்று வினாவில் பொருந்தப்பட்ட மனோவாக்குக் காயங்களால் ஏறும் இதமுமகிதமு மென்கின்றீராயின்; கணத்திடையழியுந் தினைத்துணையாகா இமைப்பொழுதிலே வேறுவேறுப் பலவாகப் புரியும் மனது இத்தன்மையெல்லாம் ஆகமாட்டாது; காரணஞ் சடம் அதன் காரியம் அஃதால் ஆர் அணங்காம் வழி யடியேற் கென்னைகொல் இந்தக் கன்மத்தை யுண்டாக்குங் காரணமாகிய மனோவாக்குக் காயங்கள் சடமாதலால் அடியேனுக்கு இது துக்கசுகங்களாக வருத்தும்படி எப்படி; செயல் எனதாயினுஞ் செயலே வாராது அதனை ஆன்மாவாகிய வெனது செயலென்கின்றீராயின் யான் செய்த செயல்தான் வடிவுகொண்டு அனுபவிப்பதில்லையாம், அதுவொழிந்து என்னுடைய செயலாலே புண்ணிய பாவமேறுமெனின் என்செயலும் நின்செயலன்றி வாராது என்றுமாம்; இயமன் செய்தி இதற்கெனின் அமைவும் இந்தச் சுக துக்கங்களையறிந்து செய்விப்பன் இயமனாகில் அச்சொல்நிற்க அமையுமது எதுதானென்னில்; பின்னையின்றாகும் அன்னதுமிங்கு இயமனே துக்கமுஞ் சுகமுஞ் செய்விப்பானாகில் உலகத்து இராசா செய்விப்பதில்லையாம், அது வொழிந்து இவ்விடத்து இயமனே புண்ணிய பாவங்களையறிந்து பொசிப்பிப்பானாகில் பின்பு பொசிக்கக் கன்ம முண்டாகாதாகும் என்று சொல்வாருமுளர்; செய்திக்குள்ள செயலவை யருத்தின் மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன அதனாற் செய்த கன்மத்துக்குத் தக்கது எல்லாம் பொசிப்பித்து மயக்கத்தைத் தீர்க்குமதற்கு முதன்மை இயமனுக்கில்லையாம், தலைவனே; ஒருவரேயமையும் ஒருவாவொருவர்க் கிருவரும் வேண்டா அப்படியன்று, இராசாவும் இயமனுமாகிய இருவருந் துக்கசுகம் அருத்துவானேன் என்னின், கன்ம நீங்காத எனக்கு ஒருவரமையாதோ இருவரும் வேண்டுவதில்லை; இறைவனும் நின்றனை இவ்விருவருமின்றி நீயுமொருவன் நின்றாய்; நின்னது கருணை சொல்லளவின்றே நீயேயவர்களையுங் கொண்டு செய்விக்கின்றாயாமாகில் செய்விக்குங் காருண்ணியஞ் சொல்லுங்காலத்து அளவில்லையாம், அதெப்படியென்னின்; அமைத்தது துய்ப்பின் எமக்கணைவின்றாம் உனக்குள்ளதை நீ யனுபவிக்கிறாயென்கின்றாயாமாயின் அந்தக் கன்மம் எனக்குத் தானே வந்து கூடமாட்டாது, கூடுமாயின் நீரெனக்குச் சுவாமியாக வேண்டுவதில்லை; உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதே யுள்ளதெனு முரையதனால் அதுவல்லது உள்ள துன்னாலும் நீக்க வொண்ணாது, இல்லாதது உன்னாலுங் கூட்டவு மொண்ணாது உள்ளதே உள்ளதெனுமாகையால்; கொள்ளும் வகையாற் கொளுத்திடுமாயின் வள்ளன்மை யெல்லா முள்ளிட வமையும் நீயவற்றுக்குச் செய்ததேதெனின் அவற்றைக் கூட்டும் வகையறிந்து கூட்டினாயாயின் உன் பெருமையை நினைக்கப் போதும் அதுவுமன்றி; ஈயவேண்டுமெனும் விதியின்றாம் நீ யிந்தக் கன்மங்களை யெனக்குச் செலுத்த வேணுமென்கிற முறைமையுமில்லையாம்; ஆயினும் என்னை அருந்துயர்ப்படுத்த நாயினேற்கு நன்று மன் என் குறையாற் செய்கின்றாயாயின் அடியேனைத் துயரத்திட்டுப் பார்த்திருப்பது உமது காருண்ணியத்துக்கு மிகவும் நன்று ஆதலால்; மாயக் கருமமுங் கரும பந்தமுந் தெருளவருளுஞ் சிவபெருமானே அனாதியே கன்மமுண்டென்னின் அது கன்மமும் அது வருகைக்கு முன்னமேயாகிய மாயையும் முன்பின் மயங்காமல் அருளிச்செய்யவேண்டும் எனக்குச் சுவாமியாக வந்த சிவனே யென்றவாறு.
இச்செய்யுள் கன்மங் கூட்டு முறைமையை வினாயது; உத்தரம் :செய்வான் வினையறியான் செய்தவினை தானறியா
எய்யா தவனாலும் எல்லையறச் - செய்தவினை
எங்கோனுஞ் செய்தனவும் எவ்வெவர்க்கும் வெவ்வேறும்
அங்கே யறிவான் அரன்.