மதிநின்பால் இந்த மலத்தின்பால் நிற்க விதியென்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய பதி நின்பால் வந்தாலிதில் வரத்தில் வந்திரண்டும் பற்றுகிலேன் எந்தாய் இரண்டாமாறென் என்னறிவானது நின்னறிவாலே யறியுமதாய் நிற்கப் பாசஞானத்திலே வந்து உன்னறிவை விட்டு அவையாய் நிற்கைக்குக் காரணமென்ன திருவெண்ணெய்நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவனே இப்பாசஞானத்தை விட்டுப் பசுஞானத்திற் பற்றற்றுப் பதிஞானமாகிய நினதருளிற் கூடிய காலத்து இந்தப் பாசஞானமும் பசுஞானமும் பற்றுகின்றேனில்லை எம்முடைய சுவாமியே என்னுடைய அறிவு இப்படி இரண்டு தன்மை யாவானேன் இதை இன்னதென அருள்வாயாக என்றவாறு.