எப்பொருள் வந்து உற்றிடினும் அந்தப் பரமானந்த நிலை குலைந்து உலகமே வந்து பொருந்தினும்; அப்பொருளைப் பார்த்து அந்த உலகப்பொருளை அசத்தாய்ச் சடமாய் அழிந்து போகிற பாசமெனப் பார்த்து; இங்கு எய்தும் உயிர்தனைக் கண்டு இந்தப் பாசத்துட் பொருந்தாநின்ற உயிருக்குச் சுதந்தரமாய் ஒரு செய்தியும் இல்லையெனப் பார்த்து; இவ்வுயிர்க்கு மேலாம் ஒப்பில் அருள் கண்டு இவ்வான்மாவுக்கு ஒரு செயலற்றுந் தனக்கு மேலாய் ஒப்பற்ற அருள் கண்ணாக நிற்குமதனைக் கண்டு; சிவத்துண்மை கண்டு அவ்வருளினுட் பரையை அடியாகவுஞ் சுகத்தை முகமாகவும் ஆனந்தத்தை முடியாகவுங் கொண்டு நின்ற சிவத்தினது உண்மையைக் கண்டு ; உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கி பொருந்திய உலகப் பொருளாகிய அவன் அவள் அதுவென்னுஞ் சடசித்துக்க ளெல்லாவற்றையும் அந்தச் சிவத்தினாலேதானே பற்றிப் பார்த்து ; தப்பினை... மொழியே மறப்பினைச் செய்வதும், நினைப்பினைச் செய்வதும், அறிவிக்க அறியும் ஆன்மபோதமும், கர்மப் பொசிப்புஞ் சிவன் தானேயென அறிந்து, அவனை யொழிய வேறொரு திரணமும் அசைவில்லை யெனக் கண்டு, அகமும் புறமும் அந்தச் சிவத்துடனே கூடி நிற்றலே சிவயோகமாமென்று சிவாகமங்கள் சொல்லும்.