அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
×
6001001பதிக வரலாறு :
திருநாவுக்கரசு சுவாமிகள் தில்லையிலிருந்து சென்று திருவேட்களம் திருக்கழிப்பாலை வணங்கி , மீண்டும் வந்து தில்லைக் கூத்தப் பெருமானைத் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநா . புராணம் - 175.) குறிப்பு : இத் திருமுறைமுழுதும் திருத்தாண்டகங்களால் தொகுக்கப் பெற்றது . இருபத்தேழ் எழுத்து முதலாகப் பெற்று வரும் அடிகளாலாகிய செய்யுள்கள் ` தாண்டகம் ` எனப்படும் . இருபத்தேழ் எழுத்திற் குறைந்துவரும் அடிகளாலாகிய செய்யுள்கள் ` சந்தம் ` எனப்படும் . சந்த அடிகளும் தாண்டகங்களில் விரவி வருதல் உண்டு . அவ்வாறு வரும் செய்யுள்கள் , ` சந்தத் தாண்டகம் - தாண்டகச் சந்தம் - சமசந்தத் தாண்டகம் ` என ஏற்ற பெற்றியான் வழங்கப்பெறும் . இத்திருமுறையுள்ளும் அவ்வாறு வந்தன உள . தாண்டகம் முதலியவற்றின் இயல்புகளை யாப்பருங்கல விருத்தி முதலியவற்றுட் காணலாம் . ` ஆரியத்திலுள்ள தண்டகம் என்னும் ஒருவகைச் செய்யு ளோடு சம்பந்தம் உடைமை பற்றித் ` தாண்டகம் ` எனப்பட்டது ` என்பர் . எவ்வாறாயினும் எழுத்தளவை நோக்காது , ஒன்று , இரண்டு , ஐந்து , ஆறாம் சீர்கள் மூவசைச் சீர்களாகவும் , ஏனைய சீர்கள் ஈரசைச் சீர் களாகவும் அமைந்த எண்சீரடி நான்கினால் வரச்செய்தலே ஈண்டுக் கருத்தென்க . இத்திருப்பதிகம் , இறைவனது பேரருள் இயல்புகளைப் பேசுந்தொறும் உளதாகிய பேரின்ப மேலீட்டில் அருளிச் செய்தது . அன்னதாகவே , இதனுள் இறைவனைப் பல பெயர்களாற் குறித்தருளி யது , அவ்வியல்புகளை எல்லாம் தாம் பலபட எடுத்துப் பேசிய வாற்றினை அருளிச்செய்தவாறாம் . கோயில் - தில்லை . இத் தலத்தையே , ` கோயில் ` எனச் சிறந்தெடுத்தோதுதல் , உடம்பினுள் இறைவர் வெளிப்பட்டு நின்று ஆடல் இயற்ற நிற்கும் நெஞ்சகம் போல , உலகினுள் அவ்வாறு நிற்றல் பற்றி என்க . ` பெரிய திருத்தாண்டகம் ` என்றது , மேற்கூறிய அளவிற் குறையாத அடிகளே பெற்ற தாண்டகம் என்றவாறு . அதனிற் குறைந்ததனையும் , சிலர் , ` தாண்டகம் ` என வழங்குதல் பற்றி இவ்வாறு கூறப்பட்டது . இப்பெயரினை இத்திருமுறை முழுவதற்கும் உரியதாகக் கொள்க .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனையும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.
குறிப்புரை:
அரியான் - புறப்பொருளை அறியும் கருவியறிவினாலும், தன்னையறியும் உயிரறிவினாலும் அறிய வாராதவன். ` அந்தணர் ` என்றது, ஈண்டுத் தில்லைவாழ் அந்தணரை. ` அந்தணர்தம் சிந்தை யானை ` என்றது, அரியானாகிய அவன், எளியனாய்நிற்கும் முறைமையை அருளிச்செய்தவாறு.
அருமறை - வீடுபேறு கூறும் மறை. அகம் - உள்ளீடு ; முடிந்த பொருள். இதனான், எவ்வுயிர்க்கும் முடிந்த வீடுபேறாம் பெருமான் சிவபெருமானேயாதல் தெற்றென விளங்கிற்று. அணு - சிறிது ; இதனை, ` தேவர்கள் தங் கோனை ` என்பதன் முன்னாகவைத்து உரைக்க. யார்க்கும் - எத்தகையோர்க்கும். தத்துவம் - மெய். ` தெரியாத ` என்பது, ` தத்துவன் ` என்பதன் முதனிலையோடு முடிந்தது.
இதனால், இறைவனை அணைந்தோரும் அவரது இன்பத்தில் திளைத்தலன்றி, அவனை முழுதும் அகப்படுத்து உணரலாகாமை அருளிச்செய்யப்பட்டது. ` தேன், பால் ` என்பன உவமையாகு பெயராய், ` அவை போல்பவன் ` எனப் பொருள்தந்து நின்றன. ` திகழ் ஒளி ` என்பது இசையெச்சத்தால், ` தானே விளங்கும் ஒளி ( சுயம்பிரகாசம் )` எனப் பொருள் தருதல் காண்க. ஒளியாவது அறிவே என்க. ` தேவர்கள் தம் கோனை ` என்பது முதலிய ஏழும், ` கலந்து நின்ற ` என்பதனோடு முடிந்தன. ` அணு ` என்றதனால் சிறுமையும் ( நுண்மையும் ), ` பெரியான் ` என்றதனால் பெருமையும் ( அளவின்மையும் ) அருளிச் செய்தவாறு.
புலிக்கால் முனிவர்க்குச் சிறந்த உறைவிடமாய் இருந்தமை பற்றித் தில்லை, ` பெரும் பற்றப் புலியூர் ` எனப்பட்டது. ` பிறவாநாள் ` என்றருளியது, பிறவி பயனின்றி யொழிந்த நாளாதல் பற்றி. அறம் பொருள் இன்பங்களாகிய உலகியல்களும் பயனல்லவோ ? என்னும் ஐயத்தினையறுத்து, ` அவை துன்பத்தால் அளவறுக்கப்படும் சிறுமையவாதலின், இறையின்பமாகிய பெரும்பயனொடு நோக்கப் பயனெனப்படா ` எனத் தெளிவித்தலின், ` பிறவா நாளே ` என்னும் ஏகாரம் தேற்றம்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
Under construction. Contributions welcome.
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
1. मंदिर
षिव हमारे आराध्यदेव हैं।
उनका, सूक्ष्म कला ज्ञान से अनुसंधान करने पर भी,
वे अनुभूति से परे हैं।
तिल्लै में स्थित ब्राह्मणों के हृदय में आप समाये हुए है।
आप उत्कृष्ट वेदों के भी सार तत्त्व हैं।
आप अणु से भी सूक्ष्म हैं।
आप सबके लिए अगोचर एवं अगम्य हैं।
आप स्वयं तत्त्वज्ञानी स्वरूप हैं।
क्षीर, मधु, मिश्री सम आप मधुर हैं।
आप हमारे अज्ञान अन्धकार को दूर करने वाले हैं।
आप देवों के अधिपति इन्द्र, विष्णु, ब्रह्मा, अग्नि, वायु,
गरजने वाले समुद्र, ऊँचे पर्वत, इन सबमें
परब्रह्म स्वरूप में व्याप्त हैं।
आप पुलि़यूर नामक तिल्लै में सुषोभित एवं स्तुत्य हैं।
आपका स्मरण किये बिना मानव जीवन व्यर्थ है।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
He is the rare One; He abides in the chinta
Of Tillai-Brahmins; He is the core
Of the rare Vedas; He is the Atom;
He is the Tattva unknown to any one;
He is the Honey, the Milk, the self-luminous Light;
He is the King of the celestial lords;
He is the Dark one, the Four-Faced,
The Fire, the Air, the roaring Ocean
And the world-supporting Mountain.
He, the greatest, is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.