நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
001 திருவதிகை வீரட்டானம்
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : கொல்லி

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
 

× 4001001பதிக வரலாறு :

நீரார் கெடில வட நீள் கரையின் நீடுபெருஞ் சீரார் திருவதிகை வீரட்டானஞ் சேர்ந்து நாதன்தாள் நண்ணுவாராய்த் தூய சிவ நன்னெறியே சென்று, பேராத பாசப் பிணிப்பு ஒழிய ஆராத அன்பு பெற்று விளங்கிய திலகவதியார், அச் செம்பவளக் குன்றை - சுடரொளியைத் தொழுது, \"என்னை ஆண்டருளினீர் ஆகில், அடியேன் பின் வந்தவனை, ஈண்டு வினைப் பரசமயக் குழி நின்றும் எடுத்தாள வேண்டும்\" எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தார். பவ வினை தீர்ப்பவர் அதைத் திரு வுள்ளம் பற்றினார்; தபோதனியாரது கனவின் கண் போந்தார்; \"நீ உன் மனக்கவலையை ஒழி. என்னை அடைய முன்னமே முனி யாகித் தவமுயன்றுள்ளான் உன் உடன் பிறந்தான்; அன்ன வனைச் சூலைமடுத்து ஆள்வன்\" என அருளினார்./n அவ்வாறே மருணீக்கியாரைச் சூலைநோய் வடிவாய் நின்று தடுத்துக் கொணர்ந்த திருவருள், செய்தவமாதரது திருமடத்திற்ச் சேர்த்தது./n அக்கையார் அடியில் விழுந்து இறைஞ்சினார் தம்பியார். \"பெருமானருளை நினைந்து எழுந்திரீர்\" என மொழிந்தார் திலகவதியார். மருணீக்கியார் எழுந்து தொழுதார். \"இஃது அதிகைப் பிரான் அருளே. அப்பற்றறுத்த பரமனடி பணிந்து பணி செய்வீர்\" எனப் பணித்தார். அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்சினார் மருணீக்கியார். திலகவதியார் சிவ பெருமான் திருவருளை நினைந்து திருநீற்றைத் திருவைந்தெழுத் தோதிக் கொடுத்துத் திருவீரட்டம் சென்று உள்ளே புகக் குறித் தார். அத் திருவாளன் திருநீற்றினை அப் பெருந்தகையார் பெரு வாழ்வு வந்தது எனப் பணிந்து ஏற்று அங்கு உருவார அணிந்து வந்தார்./n உற்ற விடத்து உய்யும்நெறி தர முன்பு தோன்றிய திலக வதியார் முன்னே செல்லப் பின்னே சென்றார் பிற்றோன்றலார்./n திருப்பள்ளியெழுச்சி வேளை. திருநீறணிந்த அவர் அகத்திருளும் மாறிற்று. உலகில் இரவில் நிறைந்த புறத்திருளும் போயிற்று./n ஆண்டிற் சிறுமையும் அடிமையிற் பெருமையுமுடைய அம்மையார் திருத்தொண்டிற்குரியவற்றொடு தம்பியாரைக் கொண்டு திருவதிகை மாநகருள் புகுந்தார். இருவரும் தொழுதனர்; வலங்கொண்டிறைஞ்சினர்; நிலமிசை விழுந்து வணங்கினர்./n தம்பிரான் திருவருளால் மருணீக்கியார் உரைத்தமிழ் மாலைகள் சார்த்தும் உணர்வு பெற்றார்; அதனை உணர்ந்தார்; உரைத்தார்; அவற்றுள் முதலாவது \"கூற்றாயினவாறு விலக்ககி லீர்\" என நீடிய (தி.12 திருநாவு. 70.) இக்கோதில் திருப்பதிகம்.
×

இக்கோயிலின் படம்

×

இக்கோயிலின் காணொலி

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 

பொழிப்புரை:

கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.

குறிப்புரை:

திருக்கெடிலம் என்னும் ஆற்றிற்கு வடபால் விளங்கும் திருவதிகையில் உள்ள திருவீரட்டானம் எனப் பெயரிய மாநகராகிய திருக்கோயிலுள் எழுந்தருளிய சிவபெருமானே, அடியேனுக்கு மருளும் பிணி மாயை ஒரு கூற்று ஆயினவாறு வந்து வருத்தும் சூலை நோயை விலக்கமாட்டீர். (இந்நோயை அடைதற்கு அடியாகக்) கொடுமை பல செய்தன (உளவோ எனின், அவற்றை) நான் அறியேன். விடையானே. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாமல் (நின்) அடி (மலர்)க்கே வணங்குவன். இந்நோய் என் வயிற்றின் உள்ளே அடியில் பற்றித் தன்னைத் தோற்றாமல் குடரொடு துடக்குண்டு என்னை முடக்கியிடலால், அடியேன் ஆற்றாமல் வருந்துகின்றேன். இவ்வருத்தம் அகற்றி அடியேனை ஆட்கொண்டருள்வாய்.
திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே `கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்` என்று வெளியாயிற்று.
அது கேட்ட முழுமுதற் பொருள், `இக்கூற்று ஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று` என்று குறித்தது.
அதுகேட்ட சுவாமிகள், `அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன். இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் (இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்து கிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினை வருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின் வடிவமே ஊர்தியாம் ஏறு)` என்றார்.
`அச்சோ! கெடிலத்தின் வடபால் விளங்கும் திருவதிகையில் வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே! சூலை நோய் தன்னைப் புலப்படுத்தாமல் என் வயிற்றின் உள்ளே அடியிலே குடலொடு துடக்குற்று, முடக்கியிடுதலால் உண்டாக்கும் வருத்தத்தினைப் பொறுக்கும் வலியில்லேன். அறிந்து செய்த வினையின் பயனாயினும் அறியாது செய்த வினையின் பயனாயினும், இத் துயரம் தீர்த்து அடியேனைக் காத்தருள்வாய்` என்றார் சுவாமிகள்.
விளக்கம்

வேற்றுச் (சமண்) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்.
இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது; பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச் செந்நெறிப்படியும் பரசிவனை மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?
`யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம்
மாதேவன் அல்லால் தேவர்மற்று இல்லையே`
என்று (தி.5 ப.100 பா.9) அவர் திருவாய் மலர்ந்தருளியதாலும் `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` என்று அருணந்தி தேவநாயனார் அருளிய திருவாக்காலும், இராப் பகல் எல்லாம் சிவபிரானை மறவாத சீர்த்தி சுவாமிளுக்கு உண்டு என்பது உறுதியாயிற்று.
`வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.`
(தி.5 ப.90 பா.7)
என்று அருளினார் பின்னர். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார் முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. `பூக் கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்... கழிவரே`,`நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே` என்றவற்றையும் `பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்` என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை) தோன்றும்.
திருவதிகை வீரட்டானத் திறைவர் வினா:- ஏன் இங்கு வந்தாய்? என்பால் தீர்தற்கு உன்பால் உள்ள குறை என்ன?
மருணீக்கியார்:- அதிகைக் கெடில வீரட்டானத் திறைவரே, இச்சூலை நோய் எனக்குக் கூற்று ஆன வகையை விலக்கமாட்டீர்?
இறைவர்:- `அவர் அவர் வினைவழி அவர் அவர் அநுபவம்` உன்னை இச்சூலை நோய் பற்றி வருத்த, நீ செய்த வினைகள்தாம் காரணம். வினைப்பயனை வினை செய்தவர் அநுபவித்துத்தான் ஆதல் வேண்டும். பயன் அநுபவிக்காமல் இருக்கும் நெறியில் இறைபணி நின்று வினைசெய்திருப்பாயாயின், உன்னை அவ்வினை வருத்தாது. நீ செய்த பல கொடுமைகள் யாவை? அறிவையோ?
மருணீக்கியார்:- கொடுஞ்செயல்களாகச் செய்தன பலவற்றை அறியேன் நான். (அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றவாறு)
இறைவர்:- அபுத்தி பூர்வ புண்ணிய கன்மங்களைச் செய்துவரின், அத்தகைய பாவ கன்மம் விலகும். அது செய்து வருகின்றாயோ?
மருணீக்கியார்:- ஏற்றாய்! (எருதின்மேல் ஏறிவரும்) பெருமானே! பசுபதீ! இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் அடிக்கே வணங்குவன். வணங்கி வந்தும் அபுத்தி பூர்வ பாவகன்மம் விலகி யொழியாமல் வருத்துகின்றதே!.
இறைவர்:- விலகும் வரையில் வலியைப் பொறுத்துக் கொண்டு தான் இருத்தல் வேண்டும். எவ்வாறு எங்கே உன்னை அது வருத்துகின்றது?
மருணீக்கியார்:- எனக்கும் தோற்றாமல் என் வயிற்றின் உள்ளடியில் குடலொடு துடக்குற்று என்னை முடக்கி யிடுகின்றது. அதனால் அடியேன் வலியைப் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றேன்.
இறைவர்:- நீ வருந்தினால், நான் யாது செய்வது?
மருணீக்கியார்:- கெடில நதிக்கரையில் திருவதிகையின் மாநகரில் (பெருங்கோயிலில்) எழுந்தருளிய அம்மானே! ஆண்டீர் நீயிர். அடியேன் யான். அதனால் அடியேனைக் காத்தல் ஆண்டீர்க்குக் கடனாகும்.
எச்சம்

கூற்று என்பது உடம்பும் உயிரும் வெவ்வேறு கூறாகச் செய்யுங்காரணம் பற்றிய பெயர். சூலை நோய் உடம்பினின்று உயிரை நீக்கும் அளவு வருத்துவதால் கூற்றெனப்பட்டது. சூலை கூற்று அன்று. கூற்றாயிற்று. அதனால் `ஆயினவாறு` என்றார்.
கயிலையை எடுத்தபோது நெருக்குண்ட இராவணன் அத்துன்பத்தின் நீங்கத் தக்க வழியைக் (கடவுள் இன்னிசையில் சாமகானத்தில் விருப்பன் என்று சொல்லிக்) காட்டிய பழம் பிறவி நிகழ்ச்சியே இச் சூலைக்கு ஏது என்பதை உணர்த்தக் `கூற்று ஆயினவாறு` எனறருளினார் என்பது சிலர் கருத்து. கோவை சிவக்கவிமணி சைவத் திரு. சி. கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., அவர்களும் அதைக் குறித்திருக்கின்றார்கள். கோதாவரிக் கரையில் சமணமே உயர்ந்தது என்று சொற்போர் புரிந்த வரலாறும் அவர்களால் குறிக்கப்பட்டுளது. (தி.12. அப்பர் புராணம் 70 சி.கே.எஸ் உரை. பதிகக் குறிப்பு நோக்குக.)
கொடுமை பல செய்தன - கொடுஞ் செயல்களாகச் செய்தன பல. நான் அறியேன் - அறிந்து செய்தேன் அல்லேன். அறியாமற் செய்தனவாயிருக்கும். அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றபடி.
கொடுமை - கொடுஞ்செயல். பண்பாகு பெயர். செய்தன - வினையாலணையும் பெயர்.
ஏற்றாய் - (ஏறு- விடை) விடையை யுடையாய்; விளியேற்ற வினைப்பெயராயும் முன்னிலை வினைப்பெயராயும் கொண்டுரைத்தாருமுளர். இராப் பகல் இடைவிடாது செய்யும் வணக்கமே பிறவிப் பிணிக்கு மருந்து. `மனத் தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும் நினைத்தெழுவார் இடர் களைவாய் நெடுங்களம் மேயவனே!` தி.1 ப.52 பா.2); `இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப் பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்` (தி.3 ப.3 பா.8) `எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக; ஏத்தும்` (தி.4 ப.41 பா.3) என வருதல் உணர்க.
அடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன். அடிக்கே - என்பதில் உள்ளவாறு, அப்பர் அருளிய மூன்று திருமுறையுள்ளும் பற்பல இடத்திற் காணலாம். `சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே` என்பது பல திருப்பாக்களின் முடிவாயுள்ளது. `விசயமங்கை ஆண்டவன் அடியே காண்டலே கருத்தாகியிருப்பன்` `நல்லுருவிற் சிவனடியே அடைவேன்` `சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றேன்` `திருவாரூர் மணவாளா நின்னடியே மறவேன்` உன்னை அல்லால் யாதும் நினைவிலேன்` என்று அண்ணாமலையாகிய தீச்சான்றாகச் சொல்லியருளினார். `எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழலடியே கை தொழுது காணின் அல்லால்... உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே` என்பவற்றால் திருவடிக்கேயன்றி மற்று எதற்கும் தம் வணக்கத்தை உரித்தாக்காத உறுதியுடையவர் வாகீசப் பெருந்தகையார். நான்காவது திருமுறையின் இம்முதல் திருப்பாட்டில் `அடிக்கே` என்றருளினார். தி.6இன் ஈற்றுப் பதிகத்தின் ஈற்றடியில் எல்லாம் `அடிக்கே` என்பது அமைந்தவாறு அறிக. `ஒற்றை யேறுடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள் மேற்படை போகலே` என்பதில் `சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்` உடையவர்க்கு இறப்பு இன்மை உணர்த்தியவாறும் உணர்க. இதனை உணர்வார் அனைவரும் தம் தம் முப்பொறிகளையும் சிவபிரான் திருவடிக்கே உரியனவாம் வகையிற் செலுத்தும் அருள் வாழ்வு நடத்துவதே வையகத்துள் வாழ்ந்தும் அருள் வானத்தில் வாழ்ந்து பெறும் பேரின்பத்தை அடைவிக்கும்.
`ஏயிலானை என் இச்சை அகம்படிக் கோயிலானை` (தி.5 ப.91 பா.1) ஈற்றுத் திருக்குறுந்தொகையுள் 4,8,9 ஆம் திருப் பாடல்களை நோக்கின், திருநாவுக்கரசர் திருவுள்ளக் கிடக்கை இனிது புலனாகும். சிவபத்தர்க்குளதாகும் பேரின்பம் விண்டு பத்தர்க்கு உண்டாகாது என்று அறுதியிட்டுக் கூறியதுணர்க.
அகம்படியே:- அகம்புxபுறம்பு. அகம், புறம் என்பன வற்றின் ஈற்றில், புகாரம் இயைந்து வழங்குதல் இன்றும் அறியலாம். புகாரத்தோடு சேர்ந்தவை அகன், புறன் என்றலும் ஆம். அகம்பு + அடிமை + தொழில் = அகம்படிமைத்தொழில். திருக்கோயிலின் உட்டுறை வினைஞர் அகம்படியர் ஆவர். திருநாளைப் போவாரை `நாளைப் போவாராம் செயலுடைப் புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்` `திருவாயிற்புறம் நின்று ஆடுதலும் பாடுதலும் ஆய் நிகழ்வார்.` `தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்தெழுந்து` `மதிற்புறத்தின் ஆராத பெருங்காதல்... வளர்ந்தோங்க உள்ளுருகிக் கைதொழுதே... திருவெல்லை வலங்கொண்டு செல்கின்றார்`. `மதிற்புறத்துப் பிறை யுரிஞ்சுந் திருவாயில் முன்னாகப்... நெருப்பமைத்தகுழி` என்பவற்றால், புறம்படிமை விளங்கும். `நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார்... எரியின் கண்... மாய... உரு ஒழித்துப் புண்ணிய மாமுனிவடிவாய்... வெண்ணூல் விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்`, `வானவர்கள் மலர்மாரிகள் பொழிந்தார்`. `தில்லைவாழந்தணர்கள் கைதொழுதார்`. `தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்`. திருநாளைப் போவாராம் மறைமுனிவர் தில்லை வாழந்தணரும் உடன் செல்லச் சென்று... கோபுரத்தைத் தொழுது உள்புகுந்தார்... `உலகு உய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்` என்பவற்றால் அகம்படிமை விளங்கும். ஒருவர் திறத்திலேயே அகம்படிமை புறம்படிமை இரண்டும் விளங்குதலைத் திருத்தொண்டர் புராண(தி.12)த்தில் காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

×

తెలుగు / தெலுங்க

కెట్టిలం నది యొక్క తూర్పు దిక్కున అటికై విరట్టణం దగ్గర జీవించుచున్న ఆ తండ్రి, యముడు పెట్టు నరకంతొ సరిపొయె ఈ రొగం యొక్క బాదను మిరు నయం చెయక, నెను చెసిన ఎన్నొ పాపపు కర్మల వల్ల ఈ రొగాన్ని పొందాను అని గ్రహించలెక, శివుని దగ్గర ఉన్న వృషభానికి, రాత్రి పగలు తెడాలెక నిరంతరం నీ పాధాలు విడువక మొక్కుత్తున్న నెను. నా కడుపులొ మాయగ దాగి ఉండి, ప్రెగులతొ అనుసందం కుదర్చకుండ చెస్తున్నా, నీ భానిస ఐన నెను ఈ రొగం యొక్క భాదను భరించలెక్కున్నాను, నన్ను నీ బానిసగా స్వికరింపుము.

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015

×

ಕನ್ನಡ / கன்னடம்

Under construction. Contributions welcome.

×

മലയാളം / மலையாளம்

Under construction. Contributions welcome.

×

චිඞංකළමං / சிங்களம்

Under construction. Contributions welcome.

×

Malay / மலாய்

Under construction. Contributions welcome.

×

हिन्दी / இந்தி

1. तिरुवदिकै वीरट्टानम्

राग: कोल्लि


अप्पर स्वामी का जन्म उŸाम शैव परिवार में हुआ था। वे अद्भुत विद्वान एवं विषिष्ट गुणों से संपन्न थे। जैन श्रमणों की तार्किक बुद्धि व उनके सिद्धान्तों से अत्यधिक प्रभावित होकर वे जैन धर्म में दीक्षित हो गये। इससे उनकी बहन तिलकवती तिलमिला गई। वे तिरुवदिकै के मंदिर में प्रतिष्ठित प्रभु से प्रार्थना करती थी कि उनका भाई पुनः जैन धर्म से अपने शैव धर्म में वापस आ जाए। जैन धर्म में दीक्षित होने पर वे धर्मसेन के नाम से प्रसिद्ध हुए। जैनों के समाज में उनका पर्याप्त सम्मान था।

तमिल़नाडु के पाटलिपुत्र में रहते समय अचानक वे उदर-षूल रोग से पीडि़त हुए और असह्य पीड़ा से तड़पने लगे। औषधियों और अन्य उपचारों का कोई प्रभाव नहीं हुआ। निराषा के क्षणों में उन्हें अपनी बहन की याद आईं तब उन्होंने अपनी बहन तिलकवती को संदेष भेजा, परन्तु तिलकवती ने साफ शब्दों में कह भेजा कि वे ‘‘मरुळ तीक्कियार’’ के नाम से आने पर अवष्य उनसे मिलेंगी। यह भी कहला भेजा कि उनको अंततः जैन धर्म को त्यागना पड़ेगा। धर्मसेन इसी शर्त के अनुसार बहन से मिलने गये। बहन ने साक्षात्कार होने पर तिरुवदिकै वीरट्टानम् प्रभु का स्मरण करते हुए अपने अनुज को भस्म (विभूति) धारण करने के लिए दिया। विभूति (भस्म) लगाने से उदर-षूल की पीड़ा धीरे-धीरे दूर होने लगी। उसके बाद अपनी बहन के साथ षिव-मंदिर गए और प्रभु की सेवा की। भगवान् की आज्ञा पाकर उनकी प्रषस्ति में गाने लगे।

केडिलम् नदी-तट पर सुषोभित वीरस्थान नामक मंदिर में प्रतिष्ठित मेरे आराध्यदेव, पूज्य पिताश्री! यह उदर-रोग मेरे लिए काल सम हो गया। उसे आप विनष्ट क्यों नहीं करते? जहाँ तक मुझे ज्ञान है, मैंने कोई गुरुतर अपराध नहीं किया। रात-दिन सदा आपकी वन्दना कर रहा हूँ। आपके श्रीचरणों की आराधना कर रहा हूँ। यह उदर-पीड़ा पेट में नहीं हो रही है, अपितु अतडि़यों में प्रवेष कर अत्यन्त पीड़ा से छटपटा रहा हूँ। मैं आपका दास, इस रोग-पीड़ा को सहन नहीं कर सकता । इस असहनीय पीड़ा से मुझे छुटकारा देकर प्रभु मेरा उद्धार करो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2000

×

संस्कृत / வடமொழி

Under construction. Contributions welcome.

×

German/ யேர்மன்

Under construction. Contributions welcome.

×

français / பிரஞ்சு

Under construction. Contributions welcome.

×

Burmese/ பர்மியம்

Under construction. Contributions welcome.

×

Assamese/ அசாமியம்

Under construction. Contributions welcome.

×

English / ஆங்கிலம்

the father who dwells in Atikai Vīraṭṭāṉam on the northern bank of Keṭilam!
you do not cure my disease which is giving me pain like the god of death.
I do not know that I did many cruel acts intentionally to get this disease.
Civaṉ who has a bull!
I bow to your feet only, always night and day without leaving them.
being invisible.
inside my belly.
to disable me by binding together with the intestines.
I who am your slave could not bear the pain you must admit me as your slave removing the disease.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration :

×

𑀢𑀫𑀺𑀵𑀺 / தமிழி

Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀽𑀶𑁆𑀶𑀸𑀬𑀺𑀷 𑀯𑀸𑀶𑀼 𑀯𑀺𑀮𑀓𑁆𑀓𑀓𑀺𑀮𑀻𑀭𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑁃𑀧𑀮 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀷 𑀦𑀸𑀷𑁆𑀅𑀶𑀺𑀬𑁂𑀷𑁆
𑀏𑀶𑁆𑀶𑀸𑀬𑁆𑀅𑀝𑀺𑀓𑁆 𑀓𑁂𑀇𑀭 𑀯𑀼𑀫𑁆𑀧𑀓𑀮𑀼𑀫𑁆 𑀧𑀺𑀭𑀺𑀬𑀸𑀢𑀼 𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀯𑀷𑁆 𑀏𑁆𑀧𑁆𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀫𑁆
𑀢𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑁂𑁆𑀷𑁆 𑀯𑀬𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀓𑀫𑁆𑀧𑀝𑀺𑀬𑁂 𑀓𑀼𑀝𑀭𑁄𑀝𑀼 𑀢𑀼𑀝𑀓𑁆𑀓𑀺 𑀫𑀼𑀝𑀓𑁆𑀓𑀺𑀬𑀺𑀝
𑀆𑀶𑁆𑀶𑁂𑀷𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀅𑀢𑀺 𑀓𑁃𑀓𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀸 𑀷𑀢𑁆𑀢𑀼𑀶𑁃 𑀅𑀫𑁆𑀫𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
×

গ্রন্থ লিপি / கிரந்தம்

Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কূট্রাযিন় ৱার়ু ৱিলক্কহিলীর্ কোডুমৈবল সেয্দন় নান়্‌অর়িযেন়্‌
এট্রায্অডিক্ কেইর ৱুম্বহলুম্ পিরিযাদু ৱণঙ্গুৱন়্‌ এপ্পোৰ়ুদুম্
তোট্রাদেন়্‌ ৱযিট্রিন়্‌ অহম্বডিযে কুডরোডু তুডক্কি মুডক্কিযিড
আট্রেন়্‌অডি যেন়্‌অদি কৈক্কেডিল ৱীরট্টা ন়ত্তুর়ৈ অম্মান়ে


Open the Grantha Section in a New Tab
×

வட்டெழுத்து

Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே


Open the Thamizhi Section in a New Tab
×

Reformed Script / சீர்மை எழுத்து

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

Open the Reformed Script Section in a New Tab
×

देवनागरी / தேவநாகரிு

कूट्रायिऩ वाऱु विलक्कहिलीर् कॊडुमैबल सॆय्दऩ नाऩ्अऱियेऩ्
एट्राय्अडिक् केइर वुम्बहलुम् पिरियादु वणङ्गुवऩ् ऎप्पॊऴुदुम्
तोट्रादॆऩ् वयिट्रिऩ् अहम्बडिये कुडरोडु तुडक्कि मुडक्कियिड
आट्रेऩ्अडि येऩ्अदि कैक्कॆडिल वीरट्टा ऩत्तुऱै अम्माऩे
Open the Devanagari Section in a New Tab
×

ಕನ್ನಡ / கன்னடம்

ಕೂಟ್ರಾಯಿನ ವಾಱು ವಿಲಕ್ಕಹಿಲೀರ್ ಕೊಡುಮೈಬಲ ಸೆಯ್ದನ ನಾನ್ಅಱಿಯೇನ್
ಏಟ್ರಾಯ್ಅಡಿಕ್ ಕೇಇರ ವುಂಬಹಲುಂ ಪಿರಿಯಾದು ವಣಂಗುವನ್ ಎಪ್ಪೊೞುದುಂ
ತೋಟ್ರಾದೆನ್ ವಯಿಟ್ರಿನ್ ಅಹಂಬಡಿಯೇ ಕುಡರೋಡು ತುಡಕ್ಕಿ ಮುಡಕ್ಕಿಯಿಡ
ಆಟ್ರೇನ್ಅಡಿ ಯೇನ್ಅದಿ ಕೈಕ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಾ ನತ್ತುಱೈ ಅಮ್ಮಾನೇ
Open the Kannada Section in a New Tab
×

తెలుగు / தெலுங்கு

కూట్రాయిన వాఱు విలక్కహిలీర్ కొడుమైబల సెయ్దన నాన్అఱియేన్
ఏట్రాయ్అడిక్ కేఇర వుంబహలుం పిరియాదు వణంగువన్ ఎప్పొళుదుం
తోట్రాదెన్ వయిట్రిన్ అహంబడియే కుడరోడు తుడక్కి ముడక్కియిడ
ఆట్రేన్అడి యేన్అది కైక్కెడిల వీరట్టా నత్తుఱై అమ్మానే
Open the Telugu Section in a New Tab
×

සිංහල / சிங்களம்

Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කූට්‍රායින වාරු විලක්කහිලීර් කොඩුමෛබල සෙය්දන නාන්අරියේන්
ඒට්‍රාය්අඩික් කේඉර වුම්බහලුම් පිරියාදු වණංගුවන් එප්පොළුදුම්
තෝට්‍රාදෙන් වයිට්‍රින් අහම්බඩියේ කුඩරෝඩු තුඩක්කි මුඩක්කියිඩ
ආට්‍රේන්අඩි යේන්අදි කෛක්කෙඩිල වීරට්ටා නත්තුරෛ අම්මානේ


Open the Sinhala Section in a New Tab
×

മലയാളം / மலையாளம்

കൂറ്റായിന വാറു വിലക്കകിലീര്‍ കൊടുമൈപല ചെയ്തന നാന്‍അറിയേന്‍
ഏറ്റായ്അടിക് കേഇര വുംപകലും പിരിയാതു വണങ്കുവന്‍ എപ്പൊഴുതും
തോറ്റാതെന്‍ വയിറ്റിന്‍ അകംപടിയേ കുടരോടു തുടക്കി മുടക്കിയിട
ആറ്റേന്‍അടി യേന്‍അതി കൈക്കെടില വീരട്ടാ നത്തുറൈ അമ്മാനേ
Open the Malayalam Section in a New Tab
×

ภาษาไทย / சீயம்

กูรรายิณะ วารุ วิละกกะกิลีร โกะดุมายปะละ เจะยถะณะ นาณอริเยณ
เอรรายอดิก เกอิระ วุมปะกะลุม ปิริยาถุ วะณะงกุวะณ เอะปโปะฬุถุม
โถรราเถะณ วะยิรริณ อกะมปะดิเย กุดะโรดุ ถุดะกกิ มุดะกกิยิดะ
อารเรณอดิ เยณอถิ กายกเกะดิละ วีระดดา ณะถถุราย อมมาเณ
Open the Thai Section in a New Tab
×

မ္ရန္‌မာစာ / பர்மியம்

Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကူရ္ရာယိန ဝာရု ဝိလက္ကကိလီရ္ ေကာ့တုမဲပလ ေစ့ယ္ထန နာန္အရိေယန္
ေအရ္ရာယ္အတိက္ ေကအိရ ဝုမ္ပကလုမ္ ပိရိယာထု ဝနင္ကုဝန္ ေအ့ပ္ေပာ့လုထုမ္
ေထာရ္ရာေထ့န္ ဝယိရ္ရိန္ အကမ္ပတိေယ ကုတေရာတု ထုတက္ကိ မုတက္ကိယိတ
အာရ္ေရန္အတိ ေယန္အထိ ကဲက္ေက့တိလ ဝီရတ္တာ နထ္ထုရဲ အမ္မာေန


Open the Burmese Section in a New Tab
×

かたかな / யப்பான்

クーリ・ラーヤナ ヴァール ヴィラク・カキリーリ・ コトゥマイパラ セヤ・タナ ナーニ・アリヤエニ・
エーリ・ラーヤ・アティク・ ケーイラ ヴミ・パカルミ・ ピリヤートゥ ヴァナニ・クヴァニ・ エピ・ポルトゥミ・
トーリ・ラーテニ・ ヴァヤリ・リニ・ アカミ・パティヤエ クタロートゥ トゥタク・キ ムタク・キヤタ
アーリ・レーニ・アティ ヤエニ・アティ カイク・ケティラ ヴィーラタ・ター ナタ・トゥリイ アミ・マーネー
Open the Japanese Section in a New Tab
×

Chinese Pinyin / சீனம் பின்யின்

gudrayina faru filaggahilir godumaibala seydana nanariyen
edrayadig geira fuMbahaluM biriyadu fananggufan ebboluduM
dodraden fayidrin ahaMbadiye gudarodu dudaggi mudaggiyida
adrenadi yenadi gaiggedila firadda naddurai ammane
Open the Pinyin Section in a New Tab
×

عربي / அரபி

كُوتْرایِنَ وَارُ وِلَكَّحِلِيرْ كُودُمَيْبَلَ سيَیْدَنَ نانْاَرِیيَۤنْ
يَۤتْرایْاَدِكْ كيَۤاِرَ وُنبَحَلُن بِرِیادُ وَنَنغْغُوَنْ يَبُّوظُدُن
تُوۤتْراديَنْ وَیِتْرِنْ اَحَنبَدِیيَۤ كُدَرُوۤدُ تُدَكِّ مُدَكِّیِدَ
آتْريَۤنْاَدِ یيَۤنْاَدِ كَيْكّيَدِلَ وِيرَتّا نَتُّرَيْ اَمّانيَۤ


Open the Arabic Section in a New Tab
×

International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு

×

Diacritic Roman / உரோமன்

kūṟṟāyiṉa vāṟu vilakkakilīr koṭumaipala ceytaṉa nāṉaṟiyēṉ
ēṟṟāyaṭik kēira vumpakalum piriyātu vaṇaṅkuvaṉ eppoḻutum
tōṟṟāteṉ vayiṟṟiṉ akampaṭiyē kuṭarōṭu tuṭakki muṭakkiyiṭa
āṟṟēṉaṭi yēṉati kaikkeṭila vīraṭṭā ṉattuṟai ammāṉē
Open the Diacritic Section in a New Tab
×

Русский / உருசியன்

кутраайынa ваарю вылaккакылир котюмaыпaлa сэйтaнa наанарыеaн
эaтраайатык кэaырa вюмпaкалюм пырыяaтю вaнaнгкювaн эпползютюм
тоотраатэн вaйытрын акампaтыеa кютaроотю тютaккы мютaккыйытa
аатрэaнаты еaнаты кaыккэтылa вирaттаа нaттюрaы аммаанэa
Open the Russian Section in a New Tab
×

German/ யேர்மன்

kuhrrahjina wahru wilakkakilih'r kodumäpala zejthana :nahnarijehn
ehrrahjadik kehi'ra wumpakalum pi'rijahthu wa'nangkuwan epposhuthum
thohrrahthen wajirrin akampadijeh kuda'rohdu thudakki mudakkijida
ahrrehnadi jehnathi käkkedila wih'raddah naththurä ammahneh
Open the German Section in a New Tab
×

French / பிரெஞ்சு

körhrhaayeina vaarhò vilakkakiliir kodòmâipala çèiythana naanarhiyèèn
èèrhrhaaiyadik kèèira vòmpakalòm piriyaathò vanhangkòvan èppolzòthòm
thoorhrhaathèn vayeirhrhin akampadiyèè kòdaroodò thòdakki mòdakkiyeida
aarhrhèènadi yèènathi kâikkèdila viiratdaa naththòrhâi ammaanèè
×

Italian / இத்தாலியன்

cuurhrhaayiina varhu vilaiccaciliir cotumaipala ceyithana naanarhiyieen
eerhrhaayiatiic keeira vumpacalum piriiyaathu vanhangcuvan eppolzuthum
thoorhrhaathen vayiirhrhin acampatiyiee cutarootu thutaicci mutaicciyiita
aarhrheenati yieenathi kaiicketila viiraittaa naiththurhai ammaanee
×

Afrikaans / Creole / Swahili / Malay / BashaIndonesia / Pidgin / English

koo'r'raayina vaa'ru vilakkakileer kodumaipala seythana :naana'riyaen
ae'r'raayadik kaeira vumpakalum piriyaathu va'nangkuvan eppozhuthum
thoa'r'raathen vayi'r'rin akampadiyae kudaroadu thudakki mudakkiyida
aa'r'raenadi yaenathi kaikkedila veeraddaa naththu'rai ammaanae
Open the English Section in a New Tab
×

Assamese / அசாமியம்

কূৰ্ৰায়িন ৱাৰূ ৱিলক্ককিলীৰ্ কোটুমৈপল চেয়্তন ণান্অৰিয়েন্
এৰ্ৰায়্অটিক্ কেইৰ ৱুম্পকলুম্ পিৰিয়াতু ৱণঙকুৱন্ এপ্পোলুতুম্
তোৰ্ৰাতেন্ ৱয়িৰ্ৰিন্ অকম্পটিয়ে কুতৰোটু তুতক্কি মুতক্কিয়িত
আৰ্ৰেন্অটি য়েন্অতি কৈক্কেটিল ৱীৰইটটা নত্তুৰৈ অম্মানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.