இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்
×
12240060பதிக வரலாறு :
தொகை
` ......... பேயார்க்கும் அடியேன்`
(தி.7 ப.39 பா.4)
தொகை, பொ-ரை பேய்வடிவை வேண்டிப் பெற்ற காரைக்கால் அம்மையாருக்கும் அடியேன்.
வகை
நம்பன் திருமலை நான்மிதி யேன்என்று தாளிரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்
செம்பொன் உருவன்என் னம்மை யெனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பிஉகு காரைக்காலினின் மேய குலதனமே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 28
வகை, பொ-ரை: செழுமையான தேன் பூங்கொம்பில் இருந்து சொட்டும் காரைக்காலின் செல்வமான அம்மையார், `சிவபெருமா னுக்குரிய கயிலை மலையைக் காலால் மிதியேன்` எனத் தம் இருகால்களும் மேலே இருக்குமாறு தலையால் நடந்து செல்ல, உமாதேவியார் புன்முறுவலுடன், `இவர் யார் என்ன,` பொன்போன்ற மேனியையுடைய பெருமானாரால், `இவள் என் அம்மை` எனப் புகழப்பெற்ற பெருமைக்குரியவர் ஆவர்.
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்` என்று வேண்டினார்.
குறிப்புரை:
இறைவனை அடைதற்கு அன்பே முதற்கண் வேண்டு தலின் `இறவாத இன்ப அன்பு வேண்டும்` என முன்னதாக அதனை வேண்டினார் `வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை` என்பதால் அடுத்துப் `பிறவாமை வேண்டும்` என்றார். பிறத்தலும் பிறவாமையும் அவ்வவ்வுயிரின் வினைவயத்தவாதலின் அவ்வினைவழி, `மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்` என்றார். `மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்` (தி.8 ப.1 வரி 32) என்பதால் உயிர் நிறைவாகச் சேர்தற்குரிய புகலிடம் இறைவனின் திருவடியே யாதலின் `இன்னும் வேண்டும்` என ஆராமை தோன்ற வேண்டி, உன்னடியின் கீழ் என்றும் இருக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துக் கொண்டார்.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
ఏ కాలమూ కీడులేని ప్రేమానురాగాలను కోరుకుంటూ ''ఇక నాకు పుట్టుకలేని వరం కావాలి. మళ్లీ పుట్టుక ఉన్నట్లయితే నిన్ను ఎన్నటికీ మరిచిపోని వరం కావాలి. స్వామీ! నేను కోరుకొనేది మీరు నాట్యం చేస్తున్నప్పుడు సంతోషంతో గానం చేస్తూ నీ తిరుచరణాలకింద ఉండే భాగ్యాన్ని ప్రసాదించు'' అని కోరుకొన్నది.
అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
Under construction. Contributions welcome.
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
She prayed for deathless devotion blissful and she
Prayed again: “I seek birthlessness; should I be
Born again, then let me never, never forget You;
Also let me pray for the boon to hymn in delight,
O Holy One, near beneath Your feet when You dance.”
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்