அநேகதங்காவதம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மனோன்மனி உடனுறை அநேகதங்காவதநாதர்

பதிகம்: நீடல்மேவு -2 -5 -திருஞானசம்பந்தர்

முகவரி: அரித்துவாரம் வழி,
கேதாரம்,
கௌரிகுண்டம்,
உத்திராஞ்சல் மாநிலம்

இது வடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. கேதாரம் செல்லும் வழியில் உள்ளது. இறைவி கௌரி என்னும் திருநாமத்தோடு தவஞ்செய்த பதியாதலின் கௌரிகுண்டம் என்றும் கூறப்பெறும். இமயத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை, திருக்கேதார யாத்திரை செல்வோர் எளிதில் தரிசித்து இன்புறலாம்.

ரிஷி கேசத்திலிருந்து கேதாரம் செல்வோர் கௌரி குண்டம் வரை பேருந்துகளில் செல்லலாம். கௌரி குண்டத்தில் உள்ள சிறிய வெந்நீர்ஊற்று நீராடற்கேற்றது.

இங்குள்ள ஆலயமே அநேகதங்கா வதமாகும். இதில் சந்திர சூரியர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி