மருகல் (திருமருகல்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர்


மரம்: வாழை
குளம்: மாணிக்க தீர்த்தம்

பதிகங்கள்: அங்கமும்வேதமு -1 -6 திருஞானசம்பந்தர்
சடையா யெனுமால் -2-18 திருஞானசம்பந்தர்
பெருகலாந் -5 -88 திருநாவுக்கரசர்

முகவரி: திருமருகல் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 609702
தொபே. 04366 270823

தலம்: சோழநாட்டுக் காவிரித்தென்கரைத்தலங்களில் 80ஆவது தலம் நாகைமாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. நன்னிலம், நாகை, திருவாரூர், மயிலாடுதுறைகளிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். மருகல் என்பது ஒருவகை வாழை. இது கல்வாழையெனவும் வழங்குகின்றது. கருங்கல் தளத்திலேயே வளர்வதால் இப்பெயர்த்தாயிற்று என்கின்றார்கள். அதன் பழத்தை இறைவனுக்கு நிவேதிக்கலாமேயன்றி மக்கள் உண்ணல் ஆகாது; உண்டால் வயிற்றுநோயுண்டாகும் என்பது அவ்வூர்மக்கள் வாய்மொழி. ஆனால் எப்போதும் காய் இருக்குமாம். இந்த வாழை தலவிருட்சமாதலின் இத்தலத்திற்கு இப்பெயர் வந்தது. கோச்செங்கட் சோழநாயனார் எழுப்பிய எழுபது மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. யானையேறாப் பெருங்கோயில்.

பாண்டியநாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன்மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித் தான். அவர்களுக்குப் பருவம் வந்தகாலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்துகொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாமவள் தாய்தந்தையர் அறியாமல் தன் நன்மாமனோடு உடன்போக்கு நிகழ்த்தினாள், திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் இராத்தங்கினாள், அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினைவயத்தால் பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். அவள் இறைவனைநோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காகவந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள்சுரக்கச் செய்தது. சுவாமிகள் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பினார். தம் திருமுன்பே அவர்களுக்குத் திருமணம் முடிப்பித்தார் என்பது இத் தலத்தைப்பற்றிய சிறந்த நிகழ்ச்சி.

இறைவன் மாணிக்கவண்ணர். இறைவி வண்டுவார்குழலி. தலவிருட்சம் வாழை. தீர்த்தம் மாணிக்க தீர்த்தம். இது கோயில் சந்நிதியிலேயே இருக்கிறது. கிழக்குப்பார்த்த சந்நிதி. அம்மன் சந் நிதிக்கு எதிரில் விஷந்தீர்த்த பிள்ளையார்கோயில் இருக்கிறது.

இடம்: நன்னிலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே ஏழு கி.மீ. தூரமுள்ள திருப்புகலூரையடைந்து, அங்கிருந்து மட்சாலை வழியாகக் கிழக்கே ஐந்து கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.



கல்வெட்டு:

அறியக்கூடவில்லை.

 
 
சிற்பி சிற்பி