சோற்றுத்துறை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு ஒப்பிலாம்பிகை உடனுறை தொலையாச் செல்வர்


குளம்: காவிரி, சூரிய தீர்த்தம்.

பதிகங்கள்: செப்பநெஞ் -1 -28 திருஞானசம்பந்தர்
பொய்விராமேனி -4 -41 திருநாவுக்கரசர்
காலை எழுந்து -4 -85 திருநாவுக்கரசர்
கொல்லையேற்றினர் -5 -33 திருநாவுக்கரசர்
மூத்தவனாய் -6 -44 திருநாவுக்கரசர்
அழல்நீர் -7 -94 சுந்தரர்

முகவரி: திருச்சோற்றுத்துறை அஞ்சல்
கண்டியூர் வழி
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 613202
தொபே. 04362 262814

சோழநாட்டுக் காவிரித்தென்கரைத்தலம். தஞ்சாவூர் - கண்டியூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. அருளாளர் என்னும் அந்தண அன்பருக்கு அட்சயபாத்திரம் அளித்துப் பஞ்சகாலத்தில் அடியார்களுக்கு அன்னமிட்டுக் காத்த தலம். கௌதம முனிவர் தவஞ்செய்து முத்திபெற்றமையால் கௌத மாஸ்ரமம் என்று வழங்கப்படும்.

இந்திரன், சூரியன் முதலியோர்கள் வழிபட்டு உய்ந்தனர். சூரியன் வழிபட்ட செய்தியை ``செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத்துறைநாதன்`` என்னும் நேரிசையால் அறியலாம். திருவையாற்று சப்தஸ்தானஸ்தலங்களில் ஒன்று. இறைவர்: தொலையாச் செல்வர். இறைவி: ஒப்பிலாம்பிகை. வட மொழியில் முறையே ஓதனவனேசுவரர், அன்னபூரணி எனவும் வழங்கப் பெறும். தீர்த்தம் காவிரி.



கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றியதாக அரசியலார் படி எடுத்த கல் வெட்டுக்கள் 12 ; எம்.எஸ்.எஸ். எடுத்தன 27 ; வி. ரங்காச்சாரியா எம்.ஏ. அவர்கள் எடுத்தது 25 ஆக 64 கல்வெட்டுக்கள் உள்ளன.

இவை பராந்தகன், இராஜராஜன் I, இன்னான் என்று கணித் தறியமுடியாத கோராஜகேசரி, பரகேசரி, கோநேரின்மை கொண்டான். குலோத்துங்கன் காலத்தன. இவை பெரும்பாலும் சிதைவுற்றிருத்தலின் நிகழ்ச்சிகளை நன்கு அறிந்து கொள்ளக்கூட வில்லை. ஆயினும் விளக்குக்களுக்காகவும், நிவேதனத்துக்காகவும், விழாவிற்காகவும் நிலமும் பொன்னும் அளித்த செய்திகள் குறிக்கப்பெறுகின்றன.

ஒரு கல்வெட்டு நடனமாதிற்குச் சர்வமான்யம் விட்ட செய்தியைத் தெரிவிக்கிறது. நலமல்லூர் தேவர் என்பவர் தொலையாச் செல்வருக்கு விளக்குத்தண்டு செய்ய நிலமளித்த செய்தி தெரிகிறது. கடவுள் தொலையாச்செல்வர் என்றும் திருச்சோற்றுத்துறை நாயனார் என்றுங் குறிப்பிடப்பெறுகிறார்.

 
 
சிற்பி சிற்பி