உலகீர், தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தாலன்றோ ? இதனை மனத்துட் கொண்மின்கள் ; கொண்டு, தெற்கென்னும் திசை கிடைக்க, ` கோதாவரி, குமரி ` என்னும் தீர்த்தங்களிலும், வடக் கென்னும் திசைகிடைக்க, அழகிய குருக்கேத்திரத்தில் உள்ள தீர்த்தத் திலும் சென்று முழுகுமின்கள் ; அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும், வடக்கில் கிளிகள், பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதிமின்கள்.
` தவச்சாலைகள் ஆவது ` என மாற்றியுரைக்க. ` குளியீர் உள் ` எனவும், ` அம் குருக்கேத்திரம் ` எனவும் பிரிக்க. ` குளியீர் ` என்ற தனால், ` குருக்கேத்திரம் ` என்றது, அதன்கண் உள்ள தீர்த்தத்தின் மேலதாயிற்று. ` தெற்கு, வடக்கு ` என்றல், விந்த மலையை வைத்து என்க. இத் திருப்பாடலுள், ` குமரி முதல் இமயங்காறும் நன்னெறிச் செலவு சென்று, தீர்த்தங்களின் மூழ்குதலும், தலங்களை வணங்குதலும் வேண்டும் ` என்று அருளியவாறு.
` சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே ` ( தி.6 ப. 36 பா,9)
என்றும்,
` அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே ` ( தி.6 ப.78 பா.1)
என்றும் அருளிச்செய்தார், ஆளுடைய அரசரும்.