வேறொன்றும் செய்யாது உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவ தாதலை அறிகின்றிலீர் ; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்று வன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் உளவாகுமோ ? ஆகா வாகலின், இப்பொழுதே, அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான அறிவுடன், நல்ல நறுமணத்தையுடைய நீரையும், சோற்றையும் விருந்தினருக்கு, இன்சொற் பேசி இடுகின்றவர் கள் வணங்குகின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.
` கூவிய ` என்றது, ` செய்யிய ` என்னும் வினையெச்சம். அது, ` கொளும் ` என்றதனோடு முடிந்தது, கொள்ளுதல் - மனத்துட் கொள்ளுதல். ` நாளால் ` என்றது, வேற்றுமை மயக்கம். ` உளவே ` என்ற ஏகாரம், வினா.
வானின் உள்ளாரை, ` வான் ` என்று அருளினார். அவர் அறிவது, துறக்க இன்பத்தையேயாகலின், அதனை விரும்பாது, வீட்டின்பத்தை விரும்புவாரை, அவரினும் மேலாய அறிவுடைய வராக அருளினார்.
இனி, ` அறிவானிலும் அறிவான் ` என்றதற்கு, ` அறிகின்ற உயிரின்கண்ணும் அறிவாய் இருந்து அறிபவன் ` என. இறைவற்கு ஆக்கி உரைப்பாரும் உளர். விலாமிச்சை வேர் முதலியன இடப்படுதலின், நீர், நறுமணம், உடையதாயிற்று. ` கிறி ` என்றது, மகிழ்வுரைகளை.