இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப் படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.
குறிப்புரை :
`முடியேன்` முதலிய எதிர்மறைகள், `தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே` (தி.8 திருவா. 6. 39) என்பதுபோல, அவற்றிற்கு ஆற்றாமை குறித்து நின்றன.`ஊர்தி` என்றது, வினைமுதற் பொருண்மையுணர்த்தும் இகர ஈறு தகர வொற்றுப் பெற்று வந்த படர்க்கைப்பெயர். நெறிகோடினமை, திருக் கயிலையில் மாதர்பால் மனம் போக்கினமை. பொய்ம்மைகள் பலவாவன, மாதர் பால் மனம் போக்கினமையை விண்ணப்பியாது முன் போலவே வழிபாட்டில் நின்றமையும், அதனை இறைவன் தானே உணர்ந்து, `நீ விரும்பிய மாதர் இன்பத்தை நுகர்தற்கு நிலவுலகிற் சென்று பிறக்க` என்ற பொழுது, `மையல் மானுட மாய்மயங் கும்வழி- ஐய னேதடுத் தாண்டருள் செய்` (தி.12 பெ.புரா. திருமலை. 28) என்று வேண்டிக் கொண்டதனை மறந்தமையும், அம்மறவி காரணமாக, `உனக்கு ஆளல்லேன்` எனப் பலவாறு முரணிக் கூறினமையும், பிறவுமாம்.மானுடமாய்ப் பிறந்த ஞான்று முன்னை நிகழ்ச்சிகளை மறந்தமையும், அம்மறவியால், `அடியேன் அல்லேன்` எனக் கூறியதும் இயற்கையாக நிகழற்பாலனவாகலின், அவை பொய்ம்மையாயின வாறு என்னையெனின், நம்மனோர் உள்ளத்திற்காயின் அவையேயன்றி மிகப் பெரிய பொய்களும் பொய்யல்லவாம்; சுவாமிகள் உள்ளத்திற்கு அவை பொய்யாகாதொழியா. `தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்` ( குறள் - 433) என்றருளியது, சுவாமிகள் போலும் உயர்ந்தோரை நோக்கியன்றோ!
`உரைத்தேனை` என இறந்த காலத்தால் அருளாது, `உரைப் பேனை` என எதிர்காலத்தால் அருளினார், அவைபோலும் செயல்கள் இனி நிகழா என்றல் எவ்வாறு கூடும் என்னும் திருவுள்ளத்தினால். இவ்வாறு, அறியாமையால் பிழை செய்தல் உயிர்கட்கும், அதனை அருளால் பொறுத்துக்கொள்ளுதல் உனக்கும் இயல்பு என்பார், `கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்நீ` என்று அருளிச் செய்தார்.
`தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே`
(தி.2 ப.64 பா.1)
எனவும்,
`பிழைத்ததெலாம் பொறுத் தருள்செய் பெரியோய்`
(தி.6 ப.31 பா.5)
எனவும்,
`வெறுப்பனவே செய்யும் என் சிறுமையைநின் பெருமை யினாற் பொறுப்பவனே` (தி.8 திருவா. 24.2) எனவும் ஆசிரியர் எல்லாரும் இவ்வாறே அருளிச் செய்தல் காண்க.
ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
English / ஆங்கிலம்
God in Aruḷtuṟai in Veṇṇai Nallūr on the southern bank of the river Peṇṇai which is full of splendor!
who rides on a bull!
having been your slave before.
Is it proper for me to counter-argue now that I am not your slave?
as you clarified my mind removing the inconsistency I shall not die.
I shall not be born hereafter.
if I am destined to be born and live in this world I am unable to bear the sufferings of old age.
you guard me with special care, me I have gone astray from the right path and talk only lies.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
O, Taurus Rider!, I can\\\\\\\'t die, can\\\\\\\'t get re-born,
can\\\\\\\'t age and ail, I simply can\\\\\\\'t.
But I swerved, me, a liar sure, yet, may you take me, target me,
ignore my faults forgiving me!
On glistening Pennai\\\\\\\'s south is Vennainalloor\\\\\\\'s
Arutturai Temple! O, Lord,
Me,unforgettable,unforgotten slave before this birth,now and after,
how can you or I aver I am none of yours?
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016