ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
001 திருவெண்ணெய்நல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 2 பண் : இந்தளம்

நாயேன்பல நாளும்நினைப்
    பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
    லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாய்இனி
    அல்லேன்என லாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

`கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்` ( தொல். பொருள். 276) என்றவாறு, இழிவு மிகுதிக்கு உவமை கூறுங்கால் நாயைக் கூறுதல் வழக்காதல் பற்றி, `நாயேன்` என்று அருளினார். `மனத்து` என, வேண்டா கூறியது, `உன்னை நினையாத மனம் கோளில் பொறிபோலக் குணம் இலதாமன்றே` என, அதன் பயனையும், அது பெறாமையையும் நினைந்து, `பேயாய்` என்பதில் உள்ள ஆக்கச் சொல் உவமை குறித்து நின்றது, `ஆள்வா ரிலிமா டாவேனோ` (தி.8 திருவா. 21.7) என்பதிற்போல. பேய், பயனின்றி விரையத் திரிதலின், அச்செயற்கு அஃது உவமையாயிற்று. அலமரலை மிக உடைமை பற்றியே பேய்க்கு, `அலகை` என்னும் பெயர் உளதாயிற்று. திரிந்தமை இன்பத்தைப் பெறுதற்பொருட்டும், எய்த்தமை அது பெறாமையானும் என்க. ஆயன் - உயிர்களாகிய ஆயத்தை (பசுக் கூட்டத்தை) உடையவன். `ஆயாய்` என்பதே பாடம் எனலுமாம். இத் திருப்பாடல், சுவாமிகள் இப்பிறப்பில் தம் இளைய காலத்து நிலையை நினைந்து அருளிச்செய்தது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the Lord who has the hard of living beings in the temple Aruḷtuṟai in Veṇṇainallūr on the southern bank of the river peṇṇai which flows filled with bamboos!
I, who am as low as the dog.
without thinking of you in my mind for many days during my early age.
I have received your grace which is very difficult to get.
having become a slave to you who came to bestow on me your grace.
is it proper on my part to argue now that I am not your slave?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Me a low down cur for days on end, dis-remembering your Grace,
strayed as vain ghost fouling your will;
yet secured the Sublime Grace served upon me,
even me, undeservedly!
O, Lord, shepherding kindly, abiding in Arutturai of Vennainalloor
south of Pennai banks of bamboo-heath!
Me, time old slave of yours, how can I otherwise disown
no slave am I, none of yours?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:naayaenpala :naa'lum:ninaip
pin'rimanath thunnaip
paeyaayththiri:n theyththaenpe'ra
laakaavaru'l pe'r'raen
vaeyaarpe'n'naith thenpaalve'n'ney
:nalloorarud du'raiyu'l
aayaaunak kaa'laayini
allaenena laamae.
சிற்பி