தனிமுதற்பொருள் உலகங்களுக்கெல்லாம் ஒரே விளக்காய் உள்ளவர் ; செம்மையார் ; தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர் ; முதியார் ; இளையார் ; நஞ்சுண்ட எம்செல்வர் ; அடியாரை அறிவார்.
ஒருத்தனார் - ஏகன் அநேகன் இறைவன் ( தி.1. ப.5.) உலகங்கட்கு ஒரு சுடர் - ` சுடர்விட்டுளன் எங்கள் சோதி ` ( தி.3. ப.54. பா.5) ` சோதியே சுடரே சூழொளி விளக்கே ` ( தி.8 திருவாச. அருட். 1) ` சுடர்ச் சோதியுட் சோதியான் ` ( சம்பந் ) ` தூயநற் சோதியுட் சோதி ` ( தி.9 திருவிசைப். 2.) ` உலக உயிர்க்கெல்லாம் ஒருகண்ணே ` ( இருபா .20). திருத்தம் - செம்மை. திருத்தன் - செம்பொருள். திருப்தி உடையவன் என்றலும் ஆம். திருப்தி எண்குணங்களில் ஒன்று. தீர்த்தனுமாம். உயிர்களைத் திருத்தி யாட்கொண்டவன் என்றலுமொன்று. ` திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங்கொள் கயிலாயா ` ( தி.7. ப.47. பா.8.) விருத்தனார் இளையார் - ` விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து ` ( தி.1. ப.52. பா.6.) அருத்தனார் - எமக்கு மெய்ப் பொருளாயுள்ளவர். அருத்தம் - நீடுலகிற்பெறும் நிலையுடைய பெருஞ்செல்வம். அடியாரை அறிவர் - ` அடியார் அடிமை அறிவாய் போற்றி ` ( தி.5. ப.30. பா.3.) 4,9 பார்க்க. ( தி. 5, ப. 13, பா. 10) பார்க்க. ( தி. 6. ப. 85. பா. 2.) பார்க்க. ( தி. 4. ப.23. பா.2.) பார்க்க.