நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
001 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 9 பண் : கொல்லி

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அதிகை... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும்.

குறிப்புரை :

பொன்னைப் போல ஒளி செய்வதொரு திருமேனியுடையீர்! முறுக்குண்ட பொற்சடையீர்! கலையிற் குறையும் பிறையுடையீர்! துன்பமும் கவலையும் பிணியும் நணுகாமல் துரந்தும் இடீர். கரந்தும் இடீர். என்னைப்போல்வார்கள் இனி உம்மைத் தெளிய உணரமாட்டார்கள். அடியார் படுவது இதுவே ஆகிலும் அன்பே அமையும். வீரஸ்தாநம் - வீரட்டானம். மூலஸ்தாநம் - மூலட்டானம் என்பது போல்வது.
மிளிர்தல் - விளங்குதல், புன்சடை - பொன்போலும் செஞ்சடை. புன்மை (அற்பம்) எனல் சிவாபராதம். மெலிதல் - கலையிற் குறைதல். பிறை - பிறத்தலாகிய ஏதுப்பற்றிய பெயர். பிணித்தல் - கட்டுதல். கட்டில் - பிணிப்பினையுடைய இல்வாழ்கை (சிந்தாமணி 8.63). `துன்பத்தால் தொடக்கினேன்` (சிந்தாமணி 3.86) என்ற இடத்து, துன்பமும் அதனாலுறும் பிணிப்பும் வேறாதல் நன்கு விளங்கும். யாது செய்வல் என்ற கவலை (சிந்தாமணி 1.302). அமைதி - நிறைவு (சிந்தா. 1.78). என்போலிகள் - போல்பவன், போல்பவள், போல்வது மூன்றும் போலிகள் எனப்படும். போல்வார் எனல் பொருந்தாது. கள் ஈறு சேர்ந்து பலர்பாலைக் குறிக்கலாயிற்று. ஆகவே தெளியார் என்னும் பயனிலை கொண்டது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
see 1st verse
God who has a body which is shining like gold!
who has a ruddy and twisted caṭai you neither drive away sufferings, anxieties and diseases, nor conceal them, without approaching me.
if this is the suffering that your devotees have to undergo.
people like me will not trust you here after.
love is enough.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ponpoala mi'lirvathor maeniyineer puripunsadai yeermeli yumpi'raiyeer
thunpaekava laipi'ni yen'riva'r'rai :na'nukaamal thura:nthu kara:nthumideer
enpoalika'l ummai yiniththe'liyaar adiyaarpadu vathithu vaeyaakil
anpaeamai yumathi kaikkedila veeraddaa naththu'rai ammaanae. 
சிற்பி