அதிகை... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.
அடியேன் மனை வாழ்க்கையை மகிழ்ந்து வலித்தேன். காரணம் யாது? மனவஞ்சம் ஒரு சிறிதும் இல்லாமையினால். துணை யாருமில்லை - துணையாவார் யாருமில்லை. என் வயிற்றின் உள்ளடியிலே செருக்கி வளர்ந்து துன்புறுத்திப் பிறழச் செய்து (சிந்தா. 1067 - 1613) பறித்துத் தின்ன அடியேன் சோர்ந்தேன். ஒருவர் என்பது ஒருவா என்றிருந்ததோ?