அறிவு அறிந்த தெல்லாம் அசத்தாகுமாயின் என்னுடைய அறிவினாலே அறியப்பட்ட தெல்லாம் அசத்தாய் அழிந்து போமேயாயின்; குறி இறந்த நின் உணர்விற் கூடா வாக்கு மனத்துக்கும் எட்டாமல் குறியிறந்து நிற்கிற தேவரீருடைய ஞானத்திலே பொருந்தப் போகிறதே யில்லை ; பொறிபுலன்கள் தாமா அறியா பொறிபுலனாகிய தத்துவங்கள் தாமாய் அறியமாட்டா; தட மருதச் சம்பந்தா யாம் ஆர் அறிவார் இனி தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே யான் ஆரை யறியப் போகிறது தான் இனி.
கண்ணானது இருளோடே கூடி இருளாயும் ஒளியோடே கூடி ஒளியாயும் நின்றது போலப் பாசத்தோடே கூடிப் பாசமாய் நின்ற ஆன்மா அருளோடே கூடிப் பாசம் நீங்கி அருளாய் நிற்குமென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (57) ‘சத்திது வென்ற சத்துத் தானறியா’ தென்ற பாடத்திற் கண்டுகொள்க.