9. வினாவெண்பா
001 வினாவெண்பா
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
பாடல் எண் : 5

அறிவறிந்த தெல்லாம் அசத்தாகு மாயின்
குறியிறந்த நின்உணர்விற் கூடா - பொறிபுலன்கள்
தாமா அறியா தடமருதச் சம்பந்தா
யாம்ஆர் அறிவார் இனி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அறிவு அறிந்த தெல்லாம் அசத்தாகுமாயின் என்னுடைய அறிவினாலே அறியப்பட்ட தெல்லாம் அசத்தாய் அழிந்து போமேயாயின்; குறி இறந்த நின் உணர்விற் கூடா வாக்கு மனத்துக்கும் எட்டாமல் குறியிறந்து நிற்கிற தேவரீருடைய ஞானத்திலே பொருந்தப் போகிறதே யில்லை ; பொறிபுலன்கள் தாமா அறியா பொறிபுலனாகிய தத்துவங்கள் தாமாய் அறியமாட்டா; தட மருதச் சம்பந்தா யாம் ஆர் அறிவார் இனி தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே யான் ஆரை யறியப் போகிறது தான் இனி. கண்ணானது இருளோடே கூடி இருளாயும் ஒளியோடே கூடி ஒளியாயும் நின்றது போலப் பாசத்தோடே கூடிப் பாசமாய் நின்ற ஆன்மா அருளோடே கூடிப் பாசம் நீங்கி அருளாய் நிற்குமென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (57) ‘சத்திது வென்ற சத்துத் தானறியா’ தென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
a'riva'ri:ntha thellaam asaththaaku maayin
ku'riyi'ra:ntha :ninu'narvi'r koodaa - po'ripulanka'l
thaamaa a'riyaa thadamaruthach sampa:nthaa
yaamaar a'rivaar ini.
சிற்பி