புல்லறிவு நல்லுணர்வது ஆகா சிற்றறிவு பேரறிவாகாது ; பொது ஞானம் அல்லது (விடய ஞானமும் அன்று அது. இங்ஙனம்) ஞானம் மூன்று விதமாயிருக்கும் ; இலது உள்ளதெனில் அந்நியமாம் முன்பு இல்லாத சிவஞானம் மலபரிபாகத்திலே யுண்டாமென்னில் சற்காரிய வாதமாகாமல் அந்நியமாம் ; தொல்லை இருள் ஊனம் மலையாவாறு உயர் மருதச் சம்பந்தா ஞான மலை ஆவாய் நவில் பழைமையாக வருகிற ஆணவமலக் குற்றத்தினாலே மயங்காத முறைமை உயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்தமாமுனியே மலைபோல ஞானத்தையுடையவனே திருவுளம் பற்றவேணும்.
விடய ஆன்மஞானம் சிவஞானமாகா தென்பது கருத்து.
தத்துவங்களுடைய சுபாவத்தை இது பொய்யென்று அறிவிக்கிறது சிவஞானம். இப்படி யறிகிற வேற்றுமையும் விட்டு, அது வாய் அந்த ஞானமாய் நிற்பது சுத்தம். உம் : சிவப்பிரகாசத்தில் (73) ‘தத்துவ மான வற்றின் தன்மைகள்’ என்னும் பாடத்திற் கண்டு கொள்க. சித்தியாரில் (11.11) ‘சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில் சிவனருட்சித் திவனருளைச் சேருஞ்சித்’ தென்பது கண்டு கொள்க.