இருளில் ஒளி புரையும் ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒழிந்து நிற்கும் ; எய்தும் கலாதி மருளின் நிலை யருளும் கலாதிகளைப் பொருந்தின விடத்திலும் ஆணவத்தையே தந்தது ; மானுங் கருவி யிவை நீங்கின் இருளாம் என்னுடனே கூடிநின்ற கருவி நீங்கின பொழுது இருளாயிருந்தது ; நிறை மருதச் சம்பந்தா ஈங்கு உன் அருளால் என்பெற நிறைந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, இவ்விடத்து உன்னருளால் பிரயோசனம் என்ன.
கேவல சகலத்திலுமல்ல சுத்தத்திற் பிரயோசன மென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (68) ‘காட்டிடுங் கரண மொன்று’ மென்ற பாடத்திற் கண்டுகொள்க.