காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்து உண்மை காண்பார்கள் காண்கின்ற ஆன்மாவும் காட்டுகின்ற சிவனும் காணப் படுகின்ற பொருளும் விட்டு உண்மையைத் தரிசிப்பார்களென்னில் ; நல் முத்தி காணார்கள் நல்ல முத்தியைக் காணார்கள் ; காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் தண் கடந்தைச் சம்பந்தன் வாட்டும் நெறி வாராதவர் ஆனால் காண்கின்றவனும் காட்டுகின்றவனும் காணப்படுகின்ற பொருளுமாகவோ காண்பார்கள் என்னில் அப்படிக் காணப்படுகின்றவர்களும் குளிர்ச்சி பொருந்தின கடந்தைநகர் வாழ் சம்பந்தமா முனி வாட்டும்வழி வாராதவர்.
ஞாதுருஞானஞேயம் என்கிற சங்கற்பனைகளை விட்டு ஒன்றாகச் சிவனியல்பின் உணருகிற ஞானமே பெறவேண்டுமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞானசித்தியில் (8.22) ‘சன்மார்க்கஞ் சகல கலை புராண வேதம்’ என்ற திருவிருத்தத்திற் கண்டுகொள்க.