பொற் கொழுக் கொண்டு வரகுக் குழுவதுபோல முத்திக்கேதுவாயிருக்கிற மனவாக்குக் காயங்களைக் கொண்டு விடயங்களுக்கு முயற்சி பண்ணுவது என்ன பயன். அக்கொழுப் போன்ற மனவாக்குக் காயங்களினுடைய அருமையை யறிந்து அவையாலே சரியைகிரியாயோகங்களைச் செய்து பின்பு திருவருளையறிந்து வேறொன்றையும் அறியாவண்ணம் நில்.
நில்லென்பது வருவிக்க.