சரியை கிரியைக்காரரைப்போல ஏகதேசப் படுத்திப் புறம்பே தியானிக்கும் தியானமும் யோகக்காரரைப் போல ஏகதேசப்படுத்தி உள்ளே தியானிக்குந் தியானமும் அற்றால் உன்னிடத்திலே ஒருவராலும் முகந்து கொள்ளப்படாத சிவானுபவம் உண்டாம். அப்பால் பாசஞானம் பசுஞானமாகிய பெந்தம் உன்னிடத்திலே பொருந்தாது.